tag:blogger.com,1999:blog-192991352024-03-06T20:50:09.399-08:00விடுதலைக்குயில்பெரியாரின் சிந்தனைகளையும், புரட்சிக்கவிஞரின் வரிகளையும் மூச்சாக கொண்ட தமிழ்த்தேசியர் பேராசிரியர் சுபவீ சிந்தனைகள்தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-19299135.post-78592960451930773692007-06-28T23:55:00.000-07:002007-06-28T23:59:53.004-07:00அது ஒரு பொடா காலம்! (12)அது ஒரு பொடா காலம்! (12)<br /> <br /> சுப.வீரபாண்டியன் <br /><br /> அந்த இளைஞனைப் பக்கத்து அறையில் அடைத்துவிட்டு, என்னிடம் வந்த காவலர்கள், ‘‘சார், வழக்கம் போல கொசுவத்தி எதுவும் அவனுக்குக் கொடுத்தனுப்பாதீங்க. கொசுவத்தியைச் சாப்பிட்டு செத்துக்கித்துப் போயிட்டான்னா, அப்புறம் நாங்க, நீங்க எல்லாருமே மாட்டிக்குவோம்’’ என்று சிறிதாக அச்சுறுத்திவிட்டுப் போனார்கள்.<br /><br />புதிதாகச் சிறைக்கு வருபவர்-களுக்குப் பழைய சிறையாளி என்ற முறையில் கொசுவத்தி கொடுத்து அனுப்பி ‘விருந்தோம்புவது’ என் வழக்கமாக இருந்தது. அந்த இளைஞனுக்கு அதுவும் கூடாது என்று கூறிவிட்டனர். ஏனெனில் அது ‘பயங்கரமான கேஸாம்’. அந்த இளைஞனின் பெயர் ராஜாராம்.<br /> <br />கொலை வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டுத் ‘தமிழ்த் தீவிரவாதி’ என்று காவல் துறையினரால் பெயர் சூட்டப்பட்டவன். குடியரசு நாள், விடுதலை நாள், காந்தியார் பிறந்த நாள் ஆகியவை வந்துவிட்டால் எங்காவது ஒரு குண்டு வெடிக்கும். குண்டு வைத்தவன் ராஜாராம்தான் என்று காவல் துறை அறிவிக்கும். ஆண்டுகள் பலவாகத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. நாளேடுகளில் ராஜாராம் படம் (சின்ன வயதில் எடுத்தது) அடிக்கடி வரும்.<br /> <br />ராஜாராமுக்கும் எனக்கும் ஒரு வேடிக்கையான தொடர்பு உண்டு. தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக என்னையும் காவல் துறை இரண்டு முறை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளது. ஒரு -முறை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில்; இன்னொரு முறை, சைதாப்பேட்டையில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில்.<br /><br />சைதாப்பேட்டையில் சற்று மிரட்டலாகவே விசாரணை நடைபெற்றது. ‘‘அவன் இருக்குமிடம் உங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைக்கிறோம். மறைக்காமல் உண்மையைச் சொல்லிவிடுங்கள்’’ என்றனர்.<br /><br />எனக்கு உள்ளூரச் சிரிப்பாக இருந்தது. எனக்கும் ராஜாராமுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அந்த மனிதனைப் பார்த்ததுகூட இல்லை. எனக்குத் தொடர்பே இல்லாத வழக்கில், என்னை ஏன் இப்படித் துன்புறுத்து-கிறீர்கள்?’’ என்று நான் கேட்டதற்கு, அவர்கள் சொன்ன விடை, மீண்டும் எனக்குச் சிரிப்பையே வரவழைத்தது.<br /><br />ராஜாராம் எழுதிய நாட்குறிப்பு ஒன்று, காவல் துறையிடம் சிக்கியுள்ளதாகவும், அதில் என்னையும் என் மேடைச் சொற்பொழிவையும் பாராட்டி எழுதியுள்ளதோடு, என்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலையும் பதிவு செய்துள்ள-தாகக் கூறினர். அவர்கள் சொல்வது உண்மை-யாக இருக்குமா என்பதிலேயே எனக்கு ஐயம் இருந்தது. அப்படியே இருந்தாலும் அதற்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் என்று கேட்-டேன். இறுதியில் என்னை விடுவித்து-விட்டனர்.<br /><br />2003 ஜனவரி 2 அன்றுதான், முதன்முதலாக ராஜாராமை நான் சிறையில் நேரில் பார்த்தேன். மறு நாள் அறிமுகமானோம். பகல் முழுவதும் ராஜாராம் என்னுடன் பேசிக்கொண்டே இருந்ததைக் காவலர்கள் கவனித்துக்கொண்டு இருந்தனர். நான்காம் தேதி காலை எட்டு மணிக்கெல்லாம், அந்த இளைஞனை வேறு தொகுதிக்கு மாற்றிவிட்டனர்.<br /> <br />அதன் பின்பு மனுப் பார்க்கவும், வழக்குரை-ஞர்களைப் பார்க்கவும் போய் வரும்போது, எதிரெதிராகச் சந்தித்துக்கொள்வோம். இரண்-டொரு சொற்கள் பரிமாறப்படும். ஒரு முறை, கூடுதல் கண்காணிப்பாளர் என்னைத் தன் அறைக்கு அழைத்திருந்தார். அங்கு ராஜா-ராமைப் பார்த்தேன். ‘‘வாங்க, இந்தப் பையன், சிறையில இருந்தபடியே, தமிழ்ல மேல் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுறாரு. ஜெயில்ல அதுக்கு அனுமதி உண்டு. தொல்காப்பியம்னு ஒரு பாடத்துல ஒங்ககிட்ட சந்தேகம் கேட்டுக்கிறேன்னு சொல்றார். ஒங்களுக்குச் சம்மதம்னா சொல்லிக்-குடுங்க’’ என்றார் அதிகாரி.<br /><br />‘‘அதுக்கென்ன, சிறையில் சும்மாதானே இருக்கேன். நல்லா சொல்லிக் குடுக்க-லாம்’’ என்றேன்.<br /><br />‘‘யாராவது ஒரு ஏட்டு கூட்டிக்கிட்டு வருவாங்க. அவுங்க முன்னாடி, வாரத்-துக்கு ஒரு நாள் ஹெல்ப் பண்ணுங்க’’ என்றார்.<br /> <br />என் புன்முறுவலைக் கண்ட அவர், ‘‘ஏட்டு முன்-னால’’ என்பது ஒரு நடை-முறை என்றார். ‘‘தாராளமா! அவருக்கும் கொஞ்சம் தொல்காப்பியம் போகட்-டுமே’’ என்றேன். இருவரும் சிரித்தனர்.<br /><br />ஆனால், என்ன காரணத்-தினாலோ, அப்படி ஒரு வகுப்பு நடைபெறவே இல்லை. எப்போதேனும் சந்திப்பதோடு சரி.<br /><br /> அப்படித்தான் 25.03.2003 அன்று மாலையும் ராஜா-ராமைச் சந்தித்தேன். அப்-போது என் நண்பர் தமிழ் முழக்கம் சாகுல் அமீதும் பொடாவில் கைதாகி உள்ளே வந்து-விட்டார்.<br /><br /> நான், பரந்தாமன், சாகுல் அமீது மூவரும், வழக்குரைஞர்களைப் பார்த்துவிட்டுத் தொகுதிகளுக்குத் திரும்பியபோது எதிரில் ராஜாராமைப் பார்த்-தோம்.<br /> <br />சாகுலும், ராஜா-ராமும் மூன்றாவது தொகுதியில் இருந்-தனர். நானும், பரந்தாம--னும் முதல் தொகுதி.<br /> <br />‘‘கோர்ட்டுக்குப் போறேன்’’ என்றார் ராஜாராம்.<br /> <br />‘‘சாயந்திரம் ஆயி-டுச்சு. இப்ப என்ன கோர்ட்டு?’’ என்றார் பரந்தாமன்.<br /><br />‘‘காலையில இருந்து காத்திருந்தேன். இப்ப-தான் வழிக்காவல் வந்திருக்கு.’’<br /><br />கையில் பழமும், ரொட்டியும் வைத்தி-ருந்தார். ‘‘திரும்பி வர நேரமாச்சுன்னா, இதை வெச்சுக்க. சாப்பிடு’’ என்று சொல்லி சாகுல் கொடுத்தாராம்.<br /><br />என்னைப் பார்த்து, ‘‘நாளயில இருந்து, நீங்க படிச்சு முடிச்சதும் தினமணி பத்திரிகையை அனுப்பி-வைங்க’’ என்றார்.<br /> <br />‘‘அதிகாரிகிட்ட சொல்லிடு. காலையிலயே அனுப்பிவைக்கிறேன்’’ என்றேன்.<br /><br />‘‘நேத்தே சொல்லிட்டேன். மறக்காம நாளைக்கி அனுப்பிடுங்க.’’<br /> <br />ராஜாராம் வெளியேற, நாங்கள் உள்நோக்கி நடந்தோம். <br /> <br />அந்த நிமிடத்தில் அது எங்களுக்கு ஒரு சாதாரண சந்திப்பாகவும், மிகச் சாதாரண நிகழ்வாகவுமே இருந்தது. அவரவர் தொகுதியில், அவரவர் அறையில் வழக்கம் போல் மாலை ஆறு மணிக்கு பூட்டப்பட்டோம்.<br /> <br />அறை பூட்டப்படும் நேரத்தில், உயரே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்து, தன் அறைக்கு அருகில் மோகன் வைத்துக்கொள்வார். நள்ளிரவு வரை, ஒலியைக் குறைத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அவருக்கு அந்தப் பெட்டிதான் தோன்றாத் துணை என்று சொல்ல வேண்டும்.<br /> <br />அந்தப் பெட்டியில் பொதிகை மற்றும் அரசுத் தொலைக்காட்சிகள் மட்டும்தான் தெரியும். அவற்றை அவர் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பார். ஏதேனும் முக்கியமான செய்தி என்றால் எங்களையும் அழைத்துச் சொல்வார்.<br /><br />அப்படித்தான் அன்று இரவு 8.30 மணிக்கு, மேலே இருந்து அவர் ‘சார்... சார்’ என்று அழைக்கும் குரல் கேட்டது. ‘‘என்ன மோகன்?’’ என்றேன்.<br /> <br />‘‘மூணாம் பிளாக்குல இருந்த ராஜாராமை போலீஸ் சுட்டுடுச்சு சார். செத்துப்போயிட்டான். தப்பி ஓட முயன்றபோது சுடப்பட்டான்னு சொல்றாங்க’’ என்றார்.<br /><br /> எனக்குப் பகீரென்றது!தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-19299135.post-3265172588756820862007-06-22T01:53:00.001-07:002007-06-22T01:53:55.408-07:00அது ஒரு பொடா காலம்! (11)அது ஒரு பொடா காலம்! (11) <br /><br /> சுப.வீரபாண்டியன் <br /><br />கவலை காரணமாக, பரந்தாமனின் மூல நோய் மிகுதி-யாகிவிட்டது. உடலாலும், உள்ளத்தாலும் அவரைத் துன்புறுத்திய அன்றைய அரசின் மீது எனக்கு அடங்காச் சினம் எழுந்தது. ‘கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிய வேண்டும்’ என்று கருதினேன்.<br /><br />21.11.2002 காலை, உடல் நலிவுகளைப் பொருட்படுத்தாமல், காவல் துறையினரின் காவலுக்குப் பரந்தாமன் அழைத்துச் செல்லப்பட்டார்.<br /><br />டிசம்பர் மாதத்தில் ஒரு நாள், மதியம் வரை நீதிமன்றம் நடக்கும் என்று வழக்கறிஞர் கூறியதும், மகன் இலெனினிடம் சொல்லி, அன்று நீதிமன்றத்துக்கு வீட்டி-லிருந்து மதிய உணவு கொண்டு வரும்படி கூறினேன். சிறை உணவுகளைச் சாப்-பிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்துப் போயி-ருந்தது.<br />அந்த நாள் வந்தது. நீதிமன்றத்தில் ‘கேஸ்காரர்கள்’ அனைவரும் சந்தித்துக் கொண்டோம். கடலூரிலிருந்து, நெடுமாறன் ஐயாவும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனும், சேலம் சிறையிலி ருந்து மருத்துவர் தாயப்பனும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.<br />தாயப்பனிடம் மெதுவாக, வீட்டிலிருந்து உணவு வரவிருக்கும் செய்தியைச் சொன்னேன். உமாவும் வீட்டு உணவு கொண்டுவர இருக்கும் செய்தியை அவர் சொன்னார். அதன் பின் இருவரும் நீதிமன்ற நடவடிக்கை-களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை.<br /><br />மதியம் 2 மணியளவில் நீதிமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு, நீதிபதி கீழ் இறங்கி விட்டார்.<br /><br />வீட்டிலிருந்து என் மனைவியும், மருமகள் விஜியும் எனக்கு எது பிடிக்கும் என்று எண்ணி எண்ணிச் சமைத்துக் கொண்டு வந்திருந்தனர். உமாவும் ஐயாவுக்குப் பிடித்த எலுமிச்சைச் சோறு, தேங்காய்ச் சோறு எனப் பலவித உணவைக் கொண்டு-வந்திருந்தார்.<br /><br />பாவாணனும் தாயப்பனும் ‘பணி-’யைத் தொடங்கி-விட்டனர். ஐயாவுக்-கும் எனக்கும் தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டது. முதல் வாய் உணவை நான் கையில் எடுத்தது-தான் தாமதம்... வழிக் காவலாக வந்த ஓர் உதவி ஆய்வாளர் மிக விரைந்து என்னிடம் வந்தார். ‘‘வீட்டுச் சாப்பாட்டுக்கெல்லாம் அனுமதி கிடையாது’’ என்றவர், என் மனைவியை நோக்கி ‘‘அம்மா, அந்தத் தட்டை வாங்கிக்குங்க’’ என்றார்.<br /><br />அன்று நீதிமன்றத்துக்கு என் அண்ணன் எஸ்.பி.முத்து ராமனும் வந்திருந்தார். ‘‘உங்க கண்ணு முன்னாடிதானே சாப்பாட்டையெல்லாம் எடுத்துவெச்சாங்க. அப்பெல்லாம் ஒண்ணும் சொல்லாம, இப்படி சாப்பிடப் போற நேரத்துல வந்து தடுக்கிறீங்களே?’’ என்றார் அவர்.<br /><br />‘‘அதோ, அங்கே நிக்குற ஏ.சி.யோட உத்தரவு. நாங்க ஒண்ணும் செய்ய முடியாது’’ என்றார் காவலர்.<br /><br />‘‘நாங்க எல்லாம் வழக்கமா சாப்பிட்டுக்கிட்டு-தானே இருக்கோம்?’’ என்றார் தாயப்பன்.<br /><br />‘‘அது ஒங்க எஸ்கார்ட்ஸைப் பொறுத்த விஷயம். ஆனா, எங்க ஏ.சி கூடாதுங்கறார். நாங்க அனுமதிக்க மாட்டோம். அவ்வளவுதான்!’’<br /><br />பாவாணன் சற்று கோபக்காரர். அவர் என் பக்கம் திரும்பி, ‘‘நீங்க சாப்பிடுங்க. என்ன செய்யுறாங்கன்னு பார்த்துடுவோம். அதென்ன ஊருக்கு ஒரு சட்டம்..!’’ என்று பொரிந்தார்.<br /><br />அதுவரை பொறுமையாக எல்லா-வற்றையும் பார்த்துக்கொண்டு இருந்த நெடுமாறன் ஐயா, அந்த உதவி ஆய்வாளரை அருகில் அழைத்தார். ‘‘என்ன, ஒங்க அதிகாரத்தைக் காட்டு-றீங்களா?’’ என்று தொடங்கிப் பல கேள்விகளைக் கேட்டார். எதற்கும் பதில் சொல்லாமல் கேட்டுக்கொண்டு இருந்த அவர், பிறகு உதவி ஆணை யர் (ஏ.சி.) இருக்குமிடம் நோக்கி நகர்ந்தார். அவரிடம் ஏதோ பேசி-விட்டு மீண்டும் நெடுமாறன் ஐயா-விடம் வந்து, ‘‘ஸாரி சார், ஏ.சி. அனு-மதிக்க முடி-யாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு’’ என்றார்.<br /><br />அவ்வளவுதான்... ஐயா சட்டென எழுந்து, காவல் ஊர்தியை நோக்கி விரைந்தார். கடலூரிலிருந்து வந்த வழிக் காவலர்கள், ‘‘ஐயா! நீங்க சாப்பிட்டுட்டு வாங்க’’ என்றனர். ‘‘ஓ! அவர் சாப்பிடக் கூடாது. நாங்க மட்டும் சாப்பிடலாம். நல்லா இருக்குய்யா ஒங்க சட்டம்’’ என்று சொல்லி-விட்டு, ஊர்தியில் ஏறி அமர்ந்துவிட்டார்.<br /><br />அண்ணன்கூட அருகில் சென்று சொல்லிப் பார்த்தார். ஐயா எதையும் கேட்கவில்லை. எனக்காகக் கடலூர் வரை அவரும் பட்டினி-யாகவே பயணப்பட்டார். பாவாணனும் தாயப் பனும்கூடப் பாதியில் உணவை நிறுத்திவிட்டுப் புறப்பட்டுவிட்டனர். என் அண்ணன், மனைவி, மகன், மருமகள் எல்லோர் முகத்திலும் ஒரு வாட்டம்.<br /><br />உணவு பெரிதில்லை; ஆனால், உணர்வு பெரிதல்லவா! சிறையிலும், வெளியிலும் அன்று யாருமே மதிய உணவு உண்ணவில்லை.<br /><br />காவல் துறைக் காவல் முடிந்து, பரந்தாமன் சிறை திரும்பினார். நாங்கள் அஞ்சியதைப் போல அங்கு எதுவும் நடைபெறவில்லை. மிரட்டல்களோ, சித்ரவதைகளோ எதுவும் இல்லை என்றும், மதிப்புடனேயே நடத்தினார்கள் என்றும் கூறினார். ஆறுதலாக இருந்தது.<br /><br />வெடிகுண்டு குச்சிகளின் விவரம் காவல்துறைக்குத் தெரியும்தானே! அதனால்தான் வேறு வகையில் நெருக்கி விசாரிக்கவில்லை போலும் என்று பேசிக்கொண்டோம். எந்த ஒரு கூற்றின் கீழும், வெள்ளைத் தாளிலும் கையப்பமிடவில்லை என்ற செய்தியையும் கூறினார்.<br /><br />எனினும், அவருடைய உடல்நலம் மேன்-மேலும் கெடத் தொடங்கியதால், சிறைக்-குள்ளேயே இருக்கும் மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்டார்.<br /><br />வெளியில் இருக்கும் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது துன்ப மானது. ஆனால், சிறையில் அதற்குப் பெரிய போட்டியே நடக்கும். கைதிகளில் பலர், சிறை மருத்துவரிடம், ‘‘ஐயா! என்னை ஒரு வாரமாவது ஆஸ்பத்திரிக்கு அனுப்பணும்னு எழுதிக் கொடுங்கய்யா’’ என்று கெஞ்சுவார்கள். நேர்மையான மருத்துவர்கள், உண்மையான நோயாளிகளை மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். மற்றவர்கள் ‘பார்த்து’ அனுப்புவார்கள்.<br /><br />சிறையைக் காட்டிலும், சிறை மருத்துவ-மனையில் சில வசதிகளும் சில சுதந்திரங்களும் உண்டு. மாலை 6 மணிக்கு அறையில் அடைத்துப் பூட்டுவது என்பது அங்கு கிடையாது. வெளியிலிருக்கும் ஒரு பெரிய கதவை மட்டுமே பூட்டுவார்கள். எனவே, நடமாட்டம் தடைப்-படாது. வரிசையாகப் படுக்கைகள் இருக்கும். சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கலாம். இரவில் ரொட்டியும், பாலும் கொடுப்பார்கள். எல்லாவற்றையும்விட, அங்கே மின் விசிறி உண்டு. அப்பாடா.... கொஞ்சம் காற்று வாங்கலாம். மருத்துவமனையில் மாடிப்பகுதி கிடைத்துவிட்டால், எதிரேயுள்ள சென்னை மாநகராட்சிக் கட்டடம் தெரியும். வாகனப் போக்குவரத்தைச் சற்று வேடிக்கை பார்க்கலாம். இவ்வாறு பல வாய்ப்புகள் உண்டென்று மோகனும், செல்வராஜும் சொன்னதைக் கேட்டு பரந்தாமனும் மகிழ்ச்சியாக மருத்துவ மனைக்குப் புறப்பட்டார். மருத்துவமனைக்கு மகிழ்ச்சியாகப் புறப்படும் முரண், எங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.<br /><br />முதல் வகுப்புக் கைதிகள் என்பதால், எங்களுக்கு நாற்காலியும், மேசையும் வழங்கப்பட்டன. ஓர் இரவில், வெளியில் எரியும் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், மேசை மீது புத்த கத்தை வைத்துச் சிரமப்பட்டுப் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது காவலர்கள், ஓர் இளைஞனை எங்கள் தொகுதிக்குள் அழைத்து வந்தனர். ‘ஏதோ புது வரவு’ என்று நினைத்துக் கொண்டேன். என் அறையைத் தாண்டி, அந்த இளைஞனை அழைத்துச் சென்றபோது, அவனை எங்கோ பார்த்திருப்பது போன்று எனக்குப் பட்டது. சட்டென்று ஒரு மின்னல் வெட்டு! கண்டுபிடித்துவிட்டேன். ‘அட, அவன்-தானா இவன்!’ என்ற ஆர்வத்தில் மீண்டும் அந்த இளைஞனை உற்றுப்பார்க்க முயல்வதற்-குள், பக்கத்து அறையில் அவன் அடைக்கப்பட்டுவிட்டான்!<br /><br /> \ (தொடரும்)தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-19299135.post-5365710241840845062007-06-15T05:07:00.000-07:002007-06-15T05:14:52.618-07:00அது ஒரு பொடா காலம்! (10)அது ஒரு பொடா காலம்! (10) <br /><br />சுப.வீரபாண்டியன் <br /><br />அந்த அதிர்ச்சிச் செய்தியை அன்றைய மாலை நாளேடுகள் வெளியிட்டு இருந்தன.<br /><br />‘நெடுமாறன் கட்சிப் பிரமுகர் வீட்டுக் கோழிப் பண்ணையில் ஜெலட்டின் குச்சிகள்!’ என்று தலைப்பிட்டு, காவல்துறை கொடுத்த செய்தி அது. எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரன், புருசோத்தமன் இருவரும் அது பற்றி விரிவாகக் கூறினர்.<br /><br />நவம்பர் 6&ம் தேதி அதிகாலை, மானாமதுரையில் உள்ள பரந்தாமன் இல்லத்துக்குச் சென்ற உளவுத்துறைக் காவல் பிரிவினர், கோழிப் பண்ணையைச் சோதனை யிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.<br /> <br />வீட்டிலிருந்த அவருடைய மகன் ரகுராமனை அழைத்துக்கொண்டு அங்கே போய், பல இடங்களைச் சோதனையிட்டுள்ளனர். ஒரு பிரிவினருடன் ரகு நின்றுகொண்டு இருக் கும்போது, இன்னொரு பிரிவினர், ‘வாங்க... இங்கே வாங்க’ என்று கூவியுள்ளனர்.<br /><br />‘இதோ... இங்கே பாருங்க, ஜெலட்டின் குச்சிகளும் டெட்டனேட்டர்களும் மறைத்து வைக்கப்பட்டுள்-ளன’ என்று, எல்லாவற்றையும் வீடியோ படம் எடுத்து, அவர் மகனையே சாட்சியாக ஆக்கிவிட்டனர்.<br /><br />எனினும், அவர்கள் கவனத்தில் கொள்ளாமல்போன சில சட்ட நுணுக்கங்களை எங்களுக்கு வழக்குரைஞர்கள் தெளிவுபடுத்தினர்.<br /><br />‘‘ஒண்ணும் கவலைப்படாதீங்க... இதெல்லாம் கோர்ட்டில் நிக்காது” என்று பரந்தாம-னுக்கு ஆறுதல் கூறினர். ஆறுதல் மொழிகள் அவ்வளவாக வேலை செய்யவில்லை. கடுமையான மன உளைச்சலில் இருந்தார் பரந்தாமன். குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று கவலைப்பட்டார்.<br /><br />‘‘ஏன் சுபவீ... டெட்டனேட்டர்னு ஏதோ சொல்றாங்களே, அப்படின்னா என்ன..?’’ என்று என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தார். ‘‘ஏன் அண்ணாச்சி, நான் மட்டும் என்ன இதுக்கு முன்னாடி வெடிகுண்டா வெச்-சுக்கிட்டு இருந்தேன்?’’ என்று நான் கேலியாகக் கேட்க, இருவரும் சிரித்தோம்.<br /><br />மறுபடியும் கடும் மழை தொடங்கியது. இரண்டு நாள்கள் மழை பெய்யும் என்றும், புயல் சின்னம் தோன்றியிருப்பதாகவும் செய்தியில் சொன்னார்-களாம். மழையில் நனைந்தபடி, பரந்தாமன் மாடிக்கு ஓடினார். இரவு கடுமையாகக் காற்று வீசியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுவிட்டதால், சிறிது நேரம் முழுமையான இருட்டு, தனிமை, காற்று மழையின் இரைச்சல் என்று புதிய அனுபவமாக இருந்தது.<br /><br />மின்சாரம் வந்து வந்து போய்க்-கொண்டு இருந்த அந்த இரவில், கடுங்குளிர் தாக்கத் தொடங்கிவிட்டது. கம்பிக் கதவு-களுக்குள் சாரல் விழுந்து விழுந்து, தரை ஏறத்தாழ ஈரமாகிவிட்டது. படுக்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல்... அது ஒருவிதமான சோகம்!<br /><br />சிறையில் கொடுக்-கப்படும் போர்வை, ஒன்றுக்கும் பயன்படவில்லை. உள்ளேயிருந்து ஒரு ‘ஜீன்ஸ்’ முழுக்கால் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டேன். ஒரு சட்டைக்கு மேல் இன்னொரு சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டேன்.<br /><br /><br />அந்த நேரம் பார்த்து மழைக்கோட்டு, கையில் விளக்குடன் வந்த ஒரு அதிகாரி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். நள்ளிரவில் உடைமாற்றிக் கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘என்ன, இந்த ஆள் புறப்படுறானா?’ என்று எண்ணியிருக்கக் கூடும்.<br /><br /> ‘‘ஒண்ணுமில்லே, ரொம்பக் குளிரா இருக்கு’’ என்றேன்.<br /><br />‘‘அப்படியா!’’ என்றார் சந்தேகம் தீராமல்.<br /><br /> அன்று, நவம்பர் 13. செய்தித் தாளில் மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நண்பர் வண்ணமுத்து வின் படம் இருப்பதைப் பார்த்துவிட்டு, செய்தியைப் படித்தபோது வலித்தது. மாரடைப்பு காரணமாகப் பேராசிரியர் வண்ணமுத்து மறைவு என்ற செய்தி என்னைத் துயரில் ஆழ்த்தியது.<br /><br /> நல்ல மனிதர். எனக்கு நல்ல நண்பர். 1976&ம் ஆண்டு, சென்னை எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் நான் பயிற்றுநராக வேலையில் சேர்ந்த-போது, வண்ணமுத்துவும் பாலசுந்தரமும்தான் எனக்கு நேர் மூத்த ஆசிரியர்கள். இரண்டு பேருமே பக்திப் பழங் களாக இருந்தார்கள். சைவ இலக்கியங்களில் இருவருக்கும் நல்ல தோய்வு. சிவன், சக்தி, முருகன் என்று அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, பெரியார், அண்ணா, பாரதி தாசன் என்று நான் பேசிக்கொண்டு இருப்பேன். அவர் கள் இருவரும் பட்டை பட்டை யாகத் திருநீறு பூசியிருப்பார்கள். நானோ, ‘கோயில் இல்லா ஊரில் குடியிருப்போர் வாழ்க! குழைத்துநீறு பூசாக் கொள்கையினர் வளர்க! ஆயிரமாம் பகைகள் அணி வகுத்தபோதும் அயராத பெரியார் அருந்தொண்டு வெல்க!’ என்று 1972&ம் ஆண்டி லேயே கவிதை எழுதி யவன். ஆனாலும் எங்க ளுக்குள் நல்ல நட்பு இருந்தது. எப்போதும் என்னைத் ‘தம்பி, தம்பி’ என்று வாய் நிறைய அழைப்பார் வண்ண முத்து. இன்று அவர் போய்விட்டார்.<br /><br />சிறையில் இருந்த நாள்களில் அடுத்தடுத்து எழுத்தாளர் சு.சமுத்திரம், கவிஞர் மீரா போன்ற-வர்களையும் காலம் விழுங்கிவிட்டது.<br /><br />சமுத்திரம் ஓர் அரிய எழுத்தாளர். பன்னீர்ப் பூக்களைப் பற்றிப் பலர் பாடிக்கொண்டு இருந்த வேளையில், வியர்வை மலர்களின் வேதனையை வெளிப்படுத்தியவர் அவர்.<br /> <br />இன்றைய இளைஞர்கள் ‘ரசிகர்’களாக மட்டுமே நின்று, தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் அவலத்தை ‘மேய்ச்சல் நிலம்’ என்னும் பெயரில், நான் சிறப்பாசிரியராக இருந்த நந்தனில் தொடர்கதையாக எழுதினார். அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன.<br /><br />கவிஞர் மீரா, எனக்கு மிகவும் மூத்தவர். நேரடிப் பழக்கம் குறைவு. ஆனாலும், எங்கள் கல்லூரி நாள்களில் அவர் எழுதிய ‘கனவுகள்+ கற்பனைகள் = காகிதங்கள்’ என்னும் கவிதை நூல்தான் எங்களின் வேதப் புத்தகம். காதல் சுவை நனி சொட்டச் சொட்டக் கவிஞரால் எழுதப்பட்ட நூல்.<br /><br />காரைக்குடிக் கல்லூரி வகுப்பறையில் ஒரு நாள், ஒரு நண்பன், ‘‘ஏன் மச்சி... இந்தக் கவிதையைப் படிச்சியா..?<br /><br /><br />‘உனக்கென்ன<br />ஒரு பார்வையை<br />வீசிவிட்டுப் போகிறாய்...<br />என் உள்ளமல்லவா<br />வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது...’<br /><br /> அடடா! எப்படியிருக்கு?’’ என்று வகுப்புத் தோழிகள் காதில் விழுகிற மாதிரி உரத்துப் படிக்க, ‘‘தீயணைப்பு நிலையத்துக்குப் போன் பண்ணச் சொல்லுடி’’ என்று ஒரு மாணவி சொல்லிவிட்டுப் போனார்.<br /><br />இப்படி அன்று ஏராளமான இளைஞர்களை ஈர்த்த, தன் சமூகக் கவிதைகளால் அண்ணாவின் பாராட்டைப் பெற்ற கவிஞர் மீராவின் இறப்புச் செய்தியும், எங்களைச் சிறையில்தான் வந்து எட்டியது.<br /><br />துக்கமோ, இன்பமோ தூரத்திலிருந்துதான் பங்கேற்க முடியும் என்ற நிலையைச் சிறை உருவாக்கி-விட்டது.<br /><br />சிறையில், கண்காணிப்பாளர் அழைத்து வரச் சொன்னதாக யாரேனும் வந்து கூப்பிட்டால், நல்லதாகவோ, கெட்டதாகவோ ஒரு செய்தி உள்ளது என்று பொருள்.<br /> <br />அன்று பரந்தாமனுக்கு அப்படி ஓர் அழைப்பு வந்தது. அவர் திரும்ப வரும் வரை, எதற்காக அழைத்திருப்பார்கள் என்று இங்கே யூகங்கள் ஓடும்.<br /> <br />15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த அவரிடம், மீண்டும் பழைய துயரம் குடிகொண்டு இருந்தது. கெட்ட செய்திதான் என்று முடிவாகிவிட்டது. அவராகச் சொல்-லட்டும் என்று காத்திருந் தேன்.<br /><br /> ‘‘போலீஸ் கஸ்டடிக்கு என்னை அனுப்பச் சொல்லி கோர்ட் உத்தரவாம்’’ என்றார்.<br /><br />எனக்கும் அதிர்ச்சியாக இருந் தது. ஏன் அவருக்கு இப்படிச் சோதனை மேல் சோதனை என்று தோன்றியது. சிறை என்பது நீதி-மன்றக் காவல். அப்படி இல்லாமல் காவல் நிலையத்திலேயே வைத்து விசாரிப்பதைக் காவல் துறைக் காவல் என்பார்கள்.<br /> <br />காவல் துறைக் காவலில் பல சித்ரவதைகள் நடக்கும் என்று கேள்விப்பட்டுள்ளோம். இப்போது அது போன்ற காவல் பரந்தாமனுக்கு எதற்காக என்று புரியவில்லை. என்ன ஆகுமோ என்ற கவலை எல்லோரையும் பற்றிக்-கொண்டது!<br /><br /><br /> \ (தொடரும்)<br /><br /><br />மிக்க நன்றி: ஆனந்த விகடன்தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19299135.post-42188371318400532852007-06-08T00:07:00.000-07:002007-06-08T00:08:52.722-07:00அது ஒரு பொடா காலம்! (9)அது ஒரு பொடா காலம்! (9) <br /> <br />சுப.வீரபாண்டியன் <br /><br />நவம்பர் மாதத் தொடக்கத்தில் சில நல்ல செய்திகள் வந்தன. எந்த காஷ்மீரைக் காட்டி, இந்தியா முழுமைக்கும் பொடா சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ, அந்த காஷ்மீரில் பொடா விலக்கிக் கொள்ளப்பட்டது. பொடாவின் கீழ் அன்று சிறையில் அடைக்கப் பட்டு இருந்த ஜே.கே.எல்.எஃப். அமைப்புத் தலைவரான யாசின் மாலிக் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.<br /><br />‘‘என்னங்கய்யா இது, காஷ்மீர்லேயே பொடா கைதிகளை விடுதலை செய்யுறப்போ, உங்களை ஏன் விட மாட்டேங்குறாங்க?’’ என்று மோகன் கேட்டார். ‘‘எங்க மேல அம்மாவுக்கு அபாரமான அன்பு. அதான் விட மாட்டேங்குறாங்க’’ என்று வேடிக்கையாகச் சொன்னாலும், அந்த வினா ஆழமானது என்பதை நான் அறிவேன். அதற்கு விடை சொல்லத் தொடங்கினால், அது மிக நீளமானதாக அமையும்.<br /><br />பொடா சட்டத்தை நடுவண் அரசு கொண்டுவந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அந்தந்த மாநில அரசுகளிடமே உள்ளது. எனவே, ஒருவரைப் பொடாவில் கைது செய்வதும் செய்யாமல் இருப்பதும் மாநில அரசுகளின் விருப்பு வெறுப்பை ஒட்டியதாக அமைந்துவிட்டது.<br /><br />குஜராத்தில், 2002 பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையே ஏறத்தாழ 2,000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலை-களுக்காக எவர் ஒருவரும் பொடாவின் கீழ் கைது செய்யப்படவில்லை. மாறாக, 200&க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள், வேறுவேறு சிறு காரணங்களுக்காகப் பொடாவில் உள்ளே தள்ளப்பட்டனர்.<br /><br />ஜார்க்கண்ட் மாநிலத்தில், 60&க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பொடாவில் கைது செய்யப்பட்டனர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவியான மயந்திரகுமாரி, பொடாவில் கைதான ‘பயங்கரவாதி’களில் ஒருவர். சிறுவர்களைத்தான் கைது செய்தார்கள் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, அம்மாநிலத்தில் ராஜ்சரத் என்ற 81 வயது முதிய-வரையும் பொடா கைதி ஆக்கி-னார்கள். அவரால் நடக்கவே முடியாது. ஆனாலும் ‘நடமாட முடியாத பயங்கரவாதி’யாக அவர் ஜார்கண்ட் அரசின் கண் களுக்குத் தெரிந்தார். அதே மாநிலத் தில், நக்ஸலைட் ஒருவருக்குத் தேநீர் கொடுத்ததற்காக, பன்சிதார் சாகு என்பவரும் நக்ஸ-லைட்டாகக் கருதப்பட்டு, பொடா சிறைக்கு வந்து சேர்ந்தார்.<br /><br />இவ்வாறு, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை வேறுவேறாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற இன்னொரு நிகழ்வும் எங்கள் சிந்தனையைத் தூண்டியது.<br /><br />தாய்லாந்து நாட்டில், சிறீலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடங்கிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாகச் செய்தித்தாள்கள் கூறின.<br /><br />சிறீலங்காவில் புலிகள் அமைப்புக்குத் தடை இல்லை. அவர்களோடு அதிகாரபூர்வமாகப் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஆனால், இந்தியாவில் புலிகளுக்குத் தடை. அவர்களை ஆதரித்துப் பேசியவர்களுக்குப் பொடா. இந்த அரசியல் விந்தைகளையெல்லாம் சொல்லிச் சிரிப்பதற்குக்கூட எங்க ளுக்கு யாரும் இல்லை.<br /><br />தமிழக அரசியலில் எப்போதுதான் மாற்றம் வரும் என்று நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்த வேளை யில், அந்தச் செய்தி வெளியானது.<br /><br />திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைவர் கலைஞர், வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்தித்தார் என்பதும், இருவரும் நெகிழ்ந்துபோனார்கள் என்பதும் நல்ல செய்தியாக இருந்தது.<br /><br />இதனை, வெறும் தலைவர்களின் சந்திப்பாக மட்டும் நான் பார்க்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியிலிருந்து, திராவிடக் கட்சிகள் விலகி வரக்கூடிய தொடக்கமாகவே அது தெரிந்தது.<br /><br />இந்த இரு கட்சிகளுக்குள் ஏற்படுகிற நெருக்கம், காலப் போக்கில் பொடாவுக்கும், பா.ஜ.க. கூட்டணிக்கும் எதிரான ஒன்றாக அமைய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பம், பிறகு நிறைவேறி யது என்பதே உண்மை.<br /><br />ஒரு நாள் காலையில், கண்விழிக்கும்போது நல்ல மழை. அறைக்கதவைத் திறக்க வந்த காவலர், ‘‘என்ன சார், மேல தூறல் விழுகிறதுகூடத் தெரியாம நல்லாத் தூங்குறீங்களே?’’ என்றார். சிரித்துக் கொண்டே எழுந்தேன்.<br /><br />இந்த ‘சார்’ மரியாதை எல்லாம் இது போல் ஒரு சில தொகுதிகளுக்கும், குறிப்பிட்ட ஒரு சிலருக்கும் மட்டுமே உரியது. மற்றபடி ‘பள்ளி எழுச்சிப் படலம்’ வேறு மாதிரி இருக்கும்.<br /><br />தூக்கம் கலைந்த நான், மழை நன்றாகவே பெய்வதை அப்போது-தான் கவனித் தேன். மாடியிலிருந்த அவர்கள் நான்கு பேரும் கீழே வர முடியாமலும், நான் மேலே போக முடியா மலும் மழை எங்களைப் பிரித்துவிட்டது. ஏறத்தாழ இரண்டு, மூன்று மணி நேரம், அன்றைய மழை என்னைச் சிறைக்குள் சிறை வைத்து விட்டது.<br /><br />அன்று காலை பரந்தாமன், நீதி மன்றம் செல்ல வேண்டும். மழை இன்னும் விடவில்லை என்பதோடு, அவருக்குச் சிறிது உடல் நலமில்லாமலும் இருந்தது. சிறைக்கு வந்ததி லிருந்தே அவ்வப்போது அவரை மூலநோய் சிரமப்படுத்திக்கொண்டு இருந்தது.<br /><br />உதவிச் சிறை அதிகாரியை அணுகி, இன்று நீதிமன்றம் செல்ல உடல்நலம் இடம் தரவில்லை என்றும், மருத்துவரைச் சந்தித்துக் கடிதம் பெற்று, நீதிமன்றத் துக்கு அனுப்ப விரும்புவ தாகவும் கூறினார். அப்படி ஒரு நடைமுறை உண்டு. மருத்துவர் பரிந்துரை செய்தால், சிறை அதிகாரி கள் அவருக்கு ஓய்வு கொடுக்க முடியும்.<br /><br />ஆனால், அந்த நடை முறையைப் பொடா கைதிக்குப் பின்பற்ற, சிறை அதிகாரிகள் தயங்கினர். ‘மருத்துவரை வரவழைக்கிறோம்; உரிய மாத்திரைகளை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்று வந்து விடுங்கள்’ என்று கூறிவிட்டனர்.<br /><br />அவ்வாறே, பாதிக்கப்பட்ட உடல் நலத்தோடு, காலை 10 மணி அளவில் பரந்தாமன் நீதிமன்றத்துக்குப் புறப் பட்டுப் போனார்.<br /><br />ஒருவர் நீதிமன்றம் சென்றால், திரும்பி வரும்போது வெளியுலகச் செய்தி ஏதேனும் கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அன்று நானும் அப்படி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.<br /><br />மதியம் இரண்டு மணியளவில், பரந்தாமன் சிறைக்குத் திரும்பி வந்தபோது, அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டது. ‘‘என்ன ஆச்சு... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?’’ என்று கேட்டேன். ‘‘நீதிமன்றத்துக்கு வந்த கதிரவன் அதிர்ச்சியான செய்தி ஒண்ணு சொன்னாரு’’ என்றார்.<br /><br />கதிரவன் அவருடைய இரண்டா வது மருமகன். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக இருக்கிறார்.<br /><br />‘‘இன்னிக்கு அங்கே போனவுடனே, ‘ரகுராமன்கிறது யாரு?’ன்னு நீதிபதி கேட்டார். ‘என் மகன்தான்’னு சொன்னேன். அப்புறம், ‘கலைமகள் கோழிப் பண்ணை யாருடையது?’ன்னு கேட்டார். ‘என்னுடையதுதான்’னேன். வேற ஒண்ணும் கேக்கலை. அடுத்த வாய்தா கொடுத்து அனுப்-பிட்டார்’’ என்றார் பரந்தாமன்.<br /><br />‘‘பிறகென்ன?’’ என்றேன்.<br /><br />‘‘இதையெல்லாம் ஏன் நீதிபதி கேக்குறார்னு, அங்கே வந்திருந்த என் மாப்பிள்ளைகிட்ட கேட்ட போதுதான், அவர் அப்படி ஓர் அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னாரு!’’<br /><br /> \ (தொடரும்)தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19299135.post-26980053826748259972007-06-01T11:22:00.000-07:002007-06-01T11:25:29.205-07:00அது ஒரு பொடா காலம்! (8)அது ஒரு பொடா காலம்! (8) <br /> <br />சுப.வீரபாண்டியன் <br /><br />அவ்வப்போது நாங்கள் பிணைக்கு மனுப் போடுவதும், அதனை நீதிமன்றம் மறுப்பதும் வழக்கமாகி-விட்டது.ஒவ்வொரு முறையும், நெடுமாறன் ஐயாவின் மகள் உமா எங்களைப் பார்க்க வரும்போது, ‘‘இன்னிக்கு நம்ம சந்துரு சார் (எங்கள் வழக்குரைஞர்) கடுமையா வாதங்-களை வெச்-சாரு. நீதிபதியும் நல்லா கேட்டாரு’’ என்று நீதிமன்றத்தில் நடந்தவற்றை எடுத்துச் சொல்வார். பரந்தாமனுக்கு அதில் நம்பிக்கை முழுமையாகப் போய்விட்டது. ‘‘ஆமா, தெனமும்-தான் நீதிபதிகள் நம்ம வாதங்களைக் கேக்குறாங்க. அப்புறம் ஜாமீன் இல்லேங்கிறாங்க. இதானே நடக்குது’’ என்பார்.<br /><br />உமாவைப் போல ஒரு பெண்ணைப் பார்க்க முடியாது. தன் அப்பாவுக்காக மட்டுமின்றி, பொடாவில் அடைபட்ட எங்கள் அனைவருக்காகவும் உமா பட்ட துன்பங்கள் அதிகம். தினந்தோறும் வழக்குரைஞர்களைப் பார்ப்பது, வழக்கு நாள்-களில் நீதிமன்றம் செல்வது, சிறைக்கு வந்து எங்களைப் பார்ப்பது, பிறகு, எங்கள் குடும்பத்தினருக்குச் செய்திகள் சொல்வது என ஒன்றரை ஆண்டு காலமும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று அவர் ஆற்றிய பணிகளை எங்கள் வாழ்-நாளில் மறக்க முடியாது.<br /><br />ஒருநாள், நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் பொடா மறு ஆய்வுக் குழு ஒன்றை அரசு அமைத்திருக்கும் செய்தியை உமா கொண்டுவர, சற்று மகிழ்ந்தோம். ஆனால், அந்தக் குழு இயங்கவே தொடங்கவில்லை. அந்தக் குழுவுக்கென்று ஓர் அறைகூட ஒதுக்கப்படாத செய்தியைச் சில நண்பர்கள் கூறினர். பிணை எதிர்-பார்ப்பு எங்களை விட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டது.<br /><br />ஒருநாள் கவிப்பேரரசு வைரமுத்து-விடமிருந்து கடிதம் வந்தது. ‘சிறை உங்களைச் சிதைக்காது; செதுக்கும்!’ என்று தன் கைப்பட எழுதியிருந்தார். சிறைத் துன்பங்களுக்கிடையிலும் அவர் தமிழ் இனித்தது.<br /><br />கவிஞர் சிற்பிக்கு விருது கொடுக்-கப்படும் செய்தியை ஒருநாள் நாளேடு-களில் பார்த்துவிட்டு, ஒரு அறுசீர் விருத்தத்தை மட்டும் மடலில் எழுதி அனுப்பினேன்.<br /><br /><br />‘விருது ஓர் தமிழன் பெற்றான்<br />விரிந்தது மகிழ்வில் உள்ளம்<br />அருகிலே வந்து வாழ்த்த<br />அவாவினன் என்ற போதும்<br />இரும்பிலே செய்த கம்பி<br />ஏழெட்டு தடுப்ப தாலே<br />தருகிறேன் மடலில் வாழ்த்தை<br />தமிழ்மானம் வாழ்க வென்றே’ என்று நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தி கண்டு மகிழ்ந்து, உடன் அவரும் கவிதையிலேயே ஒரு விடை எழுதினார்.<br /><br />‘தன்மானத்துக்குத் தடைகள் உண்டோ?<br />தமிழைத் தடுக்கச் சுவர்கள் உண்டோ?<br />அன்புக்கு ஏதும் தாழ்கள் உண்டோ?<br />அணையா நெருப்பே வாழ்க! நன்றி!’<br />என்று அவர் தந்த விடை, என் நெஞ்சை நெகிழச் செய்தது.<br /><br />இலக்கிய வேட்கைக்குக் கிடைத் தது சில இரை இப்படியும் இலக்கியம் வளர்த்தது சிறை!<br />சிறைக்குப் புதிய புதிய ‘விருந்தாளிகள்’ வருவதும் போவதுமாக இருப்பர். எப்போதாவது சில முக்கிய விருந் தாளி-களை எங்கள் தொகுதிக்கு அனுப்புவார்கள். அப்படி வந்தவர் களில் ஒருவர்தான் ‘பங்க் குமார்.’<br /><br />ஒருநாள், இரவு எட்டு மணி இருக் கும்... தொட்டியில் இருக்கும் நீரை ஒருவர் அள்ளிக் குளிக்கும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார்குளிப் பது என்ற வியப்பில் எட்டிப் பார்த்தேன். உருவம் சரியாகத் தெரிய வில்லை. அருகில் இரண்டு காவலர் கள் நின்றனர்.<br /><br />குளித்து முடித்ததும், அந்த மனிதரை என் பக்கத்து அறைக்கு அழைத்து வந்தனர். அவர் என்னை ஒரு மாதிரி யாக ஏற இறங்கப் பார்த்தார். அடுத்த அறைக்குப் போனதும், ‘‘ம்ஹ¨ம்... இங்க காத்தும் வரலை, ஒண்ணும் வரலை. பேசாம, என்னை மாடியில வெச்சுப் பூட்டுங்க’’ என்றார். அவர் கேட்டபடி, மாடிக்கு அழைத்துச் சென்று காலியாக இருந்த ஓர் அறையில் பூட்டிவிட்டுத் திரும்பினர்.<br /><br />ஒரு காவலர் என் அறைக்கு அருகில் வந்து, ‘‘ஆளு எப்பிடி ஜம்முனு இருக்கான் பார்த்தீங்களா சார், இவன்தான் பயங்கர ரவுடி பங்க் குமார்’’ என்றார்.<br /><br />‘பங்க் குமார்’ என்ற பெயரை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். நீதிமன்ற வாசலிலேயே பட்டப் பகலில் ஒருவரை வெட்டிக் கொன்றதாக அவர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு உள்ளது. மேலும் பல வழக்குகளும் உள்ளன-வாம். இப்போது ஒரு குண்டு வெடிப்பு வழக்கு!<br /><br />மறுநாள் காலையில் அறிமுகப்படலம். மோகனுக்கும் செல்வராஜுக்கும் பங்க் குமாரை நன்றாகவே தெரிந்திருந்தது. எங்கள் இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தனர். பார் வைக்கு மிகவும் சாதுவா கத் தெரிந்த குமாரை, ‘சாமி, சாமி’ என்று செல்வராஜ் அழைத்ததைப் பார்த்ததும், எனக்கு வியப்பாக இருந்தது. பிறகு தனியாகக் கேட்டேன்... ‘‘அது என்ன சாமி?’’<br /><br />‘‘அவருக்கு ரொம்பப் பக்தி சார்! பாருங்க, இன்னும் கொஞ்ச நாள்ல இங்கேயே பெரிய பூஜை எல்லாம் ஆரம்பிச்சிடுவாரு. அதனால ‘சாமி’ன்னுதான் கூப்பிடு-வோம்!’’<br /><br />எனக்கும் பரந்தாம-னுக்கும் உள்ளூரச் சிரிப்-பாக இருந்தது. அவருக்-கும் அறவே கடவுள் நம்பிக்கை கிடையாது. ‘‘என்னய்யா... குத்து, வெட்டு, கொலைனு அலையுறீங்க. அப்புறம் சாமி, கடவுள் பூஜை வேற பண்றீங்க’’ என்றார் பரந்தாமன்.<br /><br />‘‘அது வேற, இது வேற நயினா’’ என்று விடை வந்தது செல்வராஜிடமிருந்து.<br /><br />சில நாள்களுக்குப் பிறகு, பங்க் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் சதுரங்க விளையாட் டில் கெட்டிக்காரர் என்று மோகன் சொல்ல, ஒருநாள் குமாருடன் சதுரங்கம் விளையாடி னேன்.<br /><br />பள்ளி, கல்லூரி நாள்களிலிருந்தே அந்த விளையாட்டில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அதில் பல பரிசுகளையும் வாங்கியுள்ளேன். எனவே, குமாரை எளிதாக வென்றுவிடலாம் என்று விளை யாடத் தொடங்கினேன். ஆனால், குமார் வெற்றி பெற்றுவிட, அதிர்ச்சிக்குள்ளானேன். கவனமில் லாமல் விளையாடிவிட்டோமோ என்று எண்ணி, மறுபடியும் விளையாடினேன். தொடர்ந்து பல தடவை குமாரே வெற்றி பெற, எப்போதாவதுதான் எனக்கு வெற்றி கிடைத்தது.<br /><br />அவ்வளவு புத்திசாலித்தனமும் நல்ல வழியில் திருப்பப்பட்டிருந்தால், பங்க் குமார் மட்டுமல்ல, நாடும் பயன்பெற்றிருக்கும்.<br /><br />இரண்டு மாதங்களுக்குப் பின், பிணை கிடைத்து பங்க் குமார் விடுதலையானார். பிரியும்போது, மனம் மாறி வெளியில் செல்வதாகவும், படிக்க-வேண்டிய சில நல்ல புத்தகங்களின் பெயர்களை எழுதித் தருமாறும் கேட்டார். கொடுத்தேன்.<br /><br />நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சில மாதங்களுக்கு முன் நாளேடுகளில் ஒரு நாள், ‘ரவுடி பங்க் குமார் சுட்டுக் கொலை’ என்று செய்தி வந்திருந்தது.<br /><br />நல்லவரோ, கெட்டவரோ... பழகிய அந்த நாள்கள் இப்போதும் என் நினைவில்! <br /> \ (தொடரும்)தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-19299135.post-33302729075209747812007-05-25T03:40:00.000-07:002007-05-25T03:45:32.661-07:00அது ஒரு பொடா காலம்! (7)அது ஒரு பொடா காலம்! (7) <br />சுப.வீரபாண்டியன் <br /><br />நான் நந்தன் இதழின் சிறப்பாசிரியராக இருந்தபோது, தாயப்பன் எனக்கு அறிமுகமானார்.<br /><br />அப்போது அவர், சென்னை பல் மருத்துவக் கல்லூரி மாணவர். துடிப்பான இளைஞர். தமிழில் சிறந்த சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் உடையவர். எனவே, அவரைப் பொது மேடைகளில் அறிமுகப்-படுத்துவதில், நானும் நண்பர் சாகுல் அமீதும் மிக விருப்பமாக இருந்தோம். அதன் விளைவாகவே, சிக்கலுக்குக் காரணமாக இருந்த சென்னைக் கூட்டத்துக்கும் அழைத்திருந்தோம்.<br /><br />ஆனாலும், அன்றைய நிலைமைகள் குழப்பமாக இருந்த காரணத்தால், நான் அவரை வரவேற்புரை மட்டும் நிகழ்த்துமாறு சொன்னேன். பொடாவில் கைது செய்வதற்கு வரவேற்புரை மட்டுமேகூடப் போதுமானது என அன்றைய அரசு கருதிவிட்டது.<br /><br />துன்பத்திற்கிடையில், தாயப்பனை எப்போது இங்கு அழைத்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்-பு எங்களுக்கு இருந்தது. ஆனால், இரவு வரை தாயப்பன் வரவில்லை. மறுநாள் காலைச் செய்தித்தாள்களைப் பார்த்தபோதுதான், அவரை சேலம் சிறையில் அடைத்துவிட்டார்-கள் என்பது தெரிந்தது.<br /><br /><br />அருகில் உள்ள சிறையில் அடைப்பதன் மூலம் நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ‘நல்ல எண்ண’த்தில் தொலைதூரச் சிறைகளில் கொண்டுபோய் அடைக்-கும் பழக்கம் அன்றிருந்தது. சென்னையில் கைது செய்யப்-பட்ட தாயப்பனை சேலத்திலும், மானாமதுரையில் கைது செய்யப்பட்ட பரந்தாமனை சென்னையிலும், புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட பாவாணனை கோவையிலும், ஈரோட்டில் கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தியை மதுரையிலும் சிறைகளில் அடைத்து மகிழ்ந்தது ஜெயலலிதா அரசு. என்னைப் போன்ற ஒரு சிலருக்கு விதிவிலக்கு என்றே கூற வேண்டும். சென்னையில் கைது செய்து, சென்னையிலேயே சிறை வைத்ததால், ‘மனு பார்க்க’ வருவோரின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும். அதற்கும், இடையில் தடை விதிக்கப்பட்டது. வாரத்துக்கு மூன்று நாட்கள், குறிப்பிட்ட எண்ணிக்-கையில் மட்டும் மனு பார்க்கலாம் என்று கூறிவிட்டனர்.<br /><br />அக்டோபர் 16&ம் நாள், மனுவுக்கு அழைப்பு வந்தபோது, மனம் மகிழும் வாய்ப்பு ஒன்றும் வந்தது.<br /><br />வழக்கம் போல் காலை 11 மணியளவில், கூடுதல் கண்காணிப்பாளர் அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்ட-போது, யாரெல்லாம் என்னைப் பார்க்க வந்துள்ளனர் என்று தெரி-யாது. ஒவ்வொரு முறையும் நாங்கள் அங்கு கொண்டுசெல்லப்பட்ட பின் சிறிது நேரத்தில், எங்களைப் பார்க்க வருவோர் வலைக்கம்பிகள், தடுப்புகளுக்கு அந்தப் பக்கத்தில் உள்ளே அனுப்பப்படுவர். அப்போது-தான் யார் யார் வந்துள்ளனர் என்பதை நாங்கள் அறியமுடியும்.<br /><br />ஆனால் அன்றோ, எனக்கு முன்பே அவர்கள் அழைத்து வரப்-பட்டு இருந்தனர். அதுமட்டு-மல்லாமல், சிறைக்கு உள்ளே, கூடுதல் கண்காணிப்பாளர் அறையின் உள்ளேயே அவர்கள் அமர்த்திவைக்கப்பட்டு இருந்தனர்.<br /><br />என் மூத்த அண்ணன் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து-ராமன், என் மனைவி, என் மகள் மூவரும் அமர்ந்திருக்க, மகளின் மடியில் புத்தம் புது மலராக ஒரு குழந்தை. வியப்பி- லிருந்தும் மகிழ்விலிருந்தும் மீள முடியாமல் அந்தக் குழந்தையை நான் உற்றுப் பார்க்க, ‘‘நம்ம பேரன்தாங்க’’ என்று என் மனைவி சொன்னதும், மகிழ்ச்சி, அப்படியரு மகிழ்ச்சி!<br /><br />அவர்கள் அருகில் அமர, அன்று சிறை என்னை அனுமதித்தது. கண்காணிப்பாளர் ஒப்புதலுடன் இப்படிச் சில சிறப்புச் சலுகைகளைச் சிறையில் வழங்குவார்கள். அன்று காலை என் அண்ணன், கண்காணிப்பாளருடன் தொலைபேசியில் பேசியதன் விளைவாக, அவர்கள் உள்ளே அனுமதிகப்பட்டுள்ளனர் என்று அறிந்துகொண்டேன்.<br /><br /><br />இரண்டு மாதங்கள்கூட நிரம்பாத அந்தப் பிஞ்சுக் குழந்தையை என் மடியில் வைத்துவிட்டு, என் தோளில் சாய்ந்து மகள் இந்து அழுத அழுகை இப்போதும் என் நினைவில் உள்ளது.<br /><br /><br />அண்ணன் அதட்டினார்... ‘‘அழக் கூடாது! பெரியப்பா என்ன சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தேன், மறந்துட்டியா?’’ என்றார்.<br /><br /><br />என் மனமும் இளகத் தொடங்-கியது. ஆனாலும், அது கண்ணீராய்க் கரைந்துவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டேன்.<br /><br />குழந்தையை என் முகத்தருகில் தூக்கி, அதன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தேன். ‘‘அப்பா, நாங்க அமெரிக்கா போறதுக்குள்ள வந்துடுவீங்களா?’’ என்று இந்து கேட்க, ‘‘ஜாமீன் கேட்டு போட்ட மனுவில் இன்னிக்-குத் தீர்ப் பாம். சாயங்காலம் தீர்ப்புச் சொல் லிட்டா, நாளைக்கே அப்பா வந்துடப் போறான். எதுக்கு அழுவுற?’’ என்று அண்ணன் ஆறுதல் சொன்னார்.<br /><br />10, 15 நிமிடங்கள் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். சட்ட விதிப்படி, இரண்டு காவலர்கள் இரண்டு பக்கமும் நின்று, எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தனர். வழக்கு பற்றிய ரகசியங்களைப் பேசிக்கொள்கிறோமா, மறைமுக மாகக் கடிதங்கள், பொருள்-களைப் பரிமாறிக்கொள்கிறோமா என்றெல்லாம் கவனிக்க வேண்டியது அவர்கள் கடமை.<br /><br /><br />பார்வையாளர்கள் புறப்-பட வேண்டிய நேரம் வந்து-விட்டது என்பதைக் காவலர்-கள் உணர்த்-தினர். புறப்படுவதற்கு முன், அண்ணன் ஒரு பழைய செய்தியை நினைவு கூர்ந்தார். ‘‘உன் பேரனை மட்டுமில்லப்பா... நீ குழந்தையா இருந்தப்போ, உன்னையும் நான் சிறைக்-குத் தூக்கிட்டுப் போயிருக்-கேன்’’ என்று அவர் சொல்ல, மனைவியும், மகளும் விழித்தனர்.<br /><br /><br />எங்கள் அப்பா காரைக்குடி இராம.சுப்பையா, கல்லக்குடிப் போராட்டத்தில் ஈடுபட்டு, 1953&ம் வருடம், கைதாகி திருச்சி சிறையில் இருந்தார். கல்லக்குடிப் போராட்-டத்தில் முதல் அணிக்குக் கலை-ஞரும், இரண்டாவது அணிக்கு அப்பாவும், மூன்றாவது அணிக்குக் கவிஞர் கண்ணதாசனும் தலைமை ஏற்றிருந்தனர்.<br /><br /><br />அப்போது கலைஞரின் நெருக்க-மான தொண்டராக, அவர் கூடவே அப்பா சிறையில் இருந்தார். அந்த வேளையில், ஒரு வயதுக் குழந்தை-யான என்னைப் பார்க்க அவர் ஆசைப்பட, அம்மாவும், அண்ணன் முத்துராமனும் என்னைச் சிறைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அன்று, இந்த அளவுச் சலுகை-கூட வழங்கப்படாமல், கம்பி வலை-களின் வழியாக விரலைவிட்டு, என்னைத் தொட்டு அவர் முத்தம் கொடுத்துள்ளார்.<br /><br />அந்தக் காட்சியைத்தான் அண்ணன் இப்போது நினைவுபடுத்-தினார். 50 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, அதே காட்சி மீண்டும் எங்கள் குடும்-பத்தில் அரங்கேறியது. இரண்டு காட்சி-களிலும் அண்ணனுக்கு இடம் இருந்தது.<br /><br /><br />பேரனின் பிஞ்சு விரல்களில் நான் மீண்டும் ஒரு முறை முத்தமிட, ‘பிரிவென்னும் ஒரு பாவி’ இடையில் வந்தான்.<br /><br /><br />மாலை வழக்குரைஞர்கள் வந்தனர். சற்று நேரம் மௌனமாக இருந்தனர். அவர்களின் மௌனம் எனக்குச் சத்தமாகச் செய்தி சொல்லியது.<br /><br />‘‘என்ன, பிணை கிடைக்க வில்லையா?’’<br /><br /><br />‘‘ஜாமீன் குடுக்க முடியாதுன்னு நீதி-மன்றம் சொல்லிடுச்சு. மறுபடியும் ஜாமீன் கேட்டு மனுப் போடக் கொஞ்ச நாளாகும்!’’<br /><br /> \ (தொடரும்)தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19299135.post-63314634103696005832007-05-25T03:31:00.000-07:002007-05-25T03:46:29.725-07:00அது ஒரு பொடா காலம்! (6)அது ஒரு பொடா காலம்! (6)<br /><br /><br />சுப.வீரபாண்டியன்<br /><br /><br /><br /><br /><br /><br /><br />சிறையில் சில வேடிக்கையான விதிகள் உண்டு. காவலர் அனுமதியோடு கொசுவத்தி வைத்துக் கொள்ளலாம். ஆனால், தீப்பெட்டி வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களிடம் தீக்குச்சி வாங்கிக் கொசுவத்தி ஏற்றினாலும், அந்தச் சிறைக் கொசுக்கள் அதையெல்லாம் மதிப்பதே இல்லை. உள்ளே விளக்கும் கிடையாது. வராந்தாவில் கண்சிமிட்டும் சின்ன விளக்கின் வெளிச்சம் மட்டும்தான், நம் ஒரே நண்பன். அந்த வெளிச்சத்தில் புத்தகங்கள் படிப்பதும் மிகவும் கடினம். கம்பிகளின் நிழல்கள், புத்தகத்தின் மேல் கோடுகளாக விழும்.<br /><br />அன்று கொஞ்சம் புழுக்கமாகவும் இருந்தது. வியர்வையைத் துடைத்தபடி இருந்தபோது, பக்கத்து அறையில் பரந்தாமன் பூட்டப்பட்டார். ஒரு காவலர் மூலம் கொசுவத்திச் சுருள் ஒன்றை அவருக்கு அனுப்பிவைத்தேன். ‘‘என்ன சுபவீ, எதுக்கு இது?’’ என்றார். ‘‘கொஞ்ச நேரத்தில் தெரியும்’’ என்றேன்.<br /><br />ஆனால், அதையும் மீறிய கொசுக்கடியாலும், மிகக் கடுமையான புழுக்கத்தினாலும், அன்று அவரால் சரியாகத் தூங்க முடியவில்லை. மறுநாள் காலை, இருவரும் சந்தித்துப் பேசி னோம். வெளியே நிலைமைகள் எப்படி உள்ளன என்று நானும், உள் நிலவரம் பற்றி அவரும் ஒருவரையருவர் கேட்டு அறிந்து கொண்டோம். இரண்டுமே மகிழ்ச்சி தருவதாக இல்லை.<br /><br />அவரை பொடாவில் கைது செய்ததற்கான காரணம், எந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெற முடியாத ஒன்றாக இருந்தது. 25.08.2002 அன்று, கட்சி அலுவலகத்தை மூடுவதாகச் சொல்லி, ‘தென் செய்தி’ இதழ் அலுவலகத்துக்குச் ‘சீல்’ வைத்தபோது, திருச்சி சௌந்தரராசன், பரந்தாமன் உள்ளிட்ட இயக்கத் தோழர்கள் சிலர் அங்கு இருந்துள்ளனர். அப்போது தொலைக்காட்சியினர் பரந்தாம னிடம் கருத்து கேட்டுள்ளனர். அதற்கு விடையாக அவர் சொன்ன நான்கு வரிகள் தொலைக்காட்சிகளிலும், மறுநாள் நாளேடுகளிலும் வெளிவந் துள்ளன.<br /><br />‘ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசியதைத் தமிழக அரசு தவறு என்று கருதினால், அதைத் தொடர்ந்து செய்யத் தயங்க மாட்டோம். தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது’ என்பதுதான் அவருடைய கூற்று. இந்தப் ‘படு பயங்கரவாதச் சொல்லாட’லுக்காகவே அவரை அன்றைய அரசு பொடாவில் கைது செய்தது.<br /><br /><br />மீண்டும் 24.09.2002 அன்று, நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டேன். கடலூர் சிறையிலிருந்து நெடு மாறன் ஐயாவையும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனையும் அழைத்து வந்திருந்தனர்.<br /><br />சிறையிலிருந்து புறப்படும்போதே மோகன் சொன்னார்... ‘‘ஐயா, இன்னிக்கு நீங்க உங்க கேஸ்காரங்க எல்லாரையும் பார்க்க வாய்ப்பிருக்கு’’ என்று. ‘‘அது என்ன ‘கேஸ்காரங்க’?’’ என்று கேட்டேன். ‘ஊர்க்காரங்க, உறவுக்காரங்க’ என்பது போல், ஒரு குறிப்பிட்ட வழக்கில் குற்றம்சாட்டப் பெற்றுள்ள அனைவரும் ‘கேஸ்காரங்க’ ஆகிவிடுவார்கள் என்று விளக்கினார். அந்தச் சிறை மொழியின்படி ‘கேஸ் காரங்க’ மூவரும் ஒருவரையருவர் அன்று சந்தித்துக்கொண்டோம். பரந்தாமன் வேறு ‘கேஸ்காரர்’ என்பதால், அன்று நீதிமன்றம் அழைத்து வரப்படவில்லை.<br /><br /><br />எங்கள் மூவரையும்கூட ஒரே சிறையில் வைத்திருந்தால், ஒன்றாகவே அழைத்துச் சென்றுவிடலாம். அரசுக் குச் செலவும் மிச்சம். ஆனால்,மூலைக் கொருவராக ஆளுக்கொரு சிறையில் அடைத்து வைக்கப்பட்டோம். ‘‘ஐயா எப்படியிருக்கீங்க?’’ என்று நெடுமாறன் ஐயாவிடம் நான் கேட்க, ‘‘நல்லா யிருக்கேன். நல்ல ஓய்வு. ‘இந்திய தேசியம்: உருவாகாத கரு’ங்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதுறதுக்குக் குறிப்புகள் எடுத்துட்டு இருக்கேன். அது தொடர்பா உங்ககிட்டே ஏதாவது புத்தகங்கள் இருந்தாலும், கொடுத்தனுப்புங்க’’ என்றார்.<br /><br /><br />‘‘அந்த அம்மா அவ்வளவு சிரமப் பட்டு நம்மளையெல்லாம் உள்ளே போட்டிருக்குது. நீங்க ரெண்டு பேரும், ‘நல்ல ஓய்வு, புத்தகம் எழுத லாம்’னா பேசிக்கிறீங்க?’’ என்று கிண்டலடித்தார் பாவாணன்.<br /><br /><br />நானும் பாவாணனும் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். என்னைவிட ஓர் ஆண்டு இளையவர். குழிபிறை சிங்காரமாக இருந்து, தனித் தமிழியக்கப் பற்றின் காரணமாகத் தன் பெயரை புதுக்கோட்டை பாவாணனாக மாற்றிக்கொண்டவர். படிக்கும் காலத்தில் நான் அவரிடம் பார்த்த மாணவத் தீ இன்னும் அணையாமலே உள்ளது.<br /><br /><br />வைகோ உட்பட எல்லோருக்கும் முன்பாக, ஜூலை மாதம் 4&ம் தேதியே கைது செய்யப்பட்டவர் அவர்தான். முதலில் சாதாரணச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு, பிறகு பொடா வழக்குக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இன் னொரு சிறப்பையும் அரசு வழங் கியது. கவுந்தப்பாடி கூட்டத்தில் பேசியதற்கு ஒரு வழக்கு, சென்னைக் கூட்டத்தில் எங்களோடு பேசியதற்கு ஒரு வழக்கு என அவர் மீது இரண்டு பொடா வழக்குகள்! இரண்டு தங்கப் பதக்கங்கள் வாங்கிய மாதிரி அவர் முகத்தில் ஒரு பெருமை தென் படும்.<br /><br /><br />சிறைக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்ட நிலையிலும், இரவு நேரப் புழுக்கத்தைத் தாள முடியா மல் தவித்தார் பரந்தாமன். ‘‘பொடா கைதிகள் மின் விசிறி வெச்சுக் கிறதுக்குச் சட்டத்தில் இடம் இருக் காமே?’’ என்றார். ‘‘கேக்கிறதுக்குக் குளுமையாத்தான் இருக்கு’’ என் றேன். ‘‘நான் விளையாட்டுக்குச் சொல்லலை. நாளைக்கு வக்கீல் கிட்ட கேப்போம்’’ என்றார்.<br /><br /><br />அப்படியே சட்டத்தில் இடம் இருந் தாலும், நடைமுறைச் சிக்கல்களை எல்லாம் தாண்டி வருவதற்குச் சில மாதங்கள் ஆகிவிடும். அதற்குள் குளிர் காலமே வந்துவிடும். மின் விசிறி எதற்கு என்று தோன்றியது. அடுத்த கோடைக் காலத்துக்கும் இங்குதான் இருக்கப் போகிறோம் என்பதை அப்போது நான் உணரவில்லை.<br /><br /><br />ஆனாலும், சிறைக்கு வந்த மறுநாளே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, பரந்தாமன் மேல் தளத்துக்குச் சென்று விட்டார். அங்கே கொஞ்சம் காற்று வரும் என்பது அவருடைய நம்பிக்கை. மீண்டும் கீழ்த்தளத்தில் நான் மட்டுமே.<br /><br /><br />ஒரு நாள் இரவு அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த வேளையில், யாரோ காலின் பெருவிரலைச் சுரண்டுவது போலிருந்தது. சட்டென்று காலை உதறிவிட்டு, மீண்டும் உறங்கினேன். சற்று நேரத்தில் மறுபடியும் சுரண்டல். தூக்கம் கலைந்து எழுந்தேன். மங்கிய வெளிச்சத்தில் உற்றுப்பார்த்தபோது, ஒரு மூலையில் கறுப்பாக ஓர் உருவம் தெரிந்தது. உர்ரென்று உறுமியது. அடடா, பெருச்சாளி! என்ன செய்வ தென்று புரியவில்லை.<br /><br /><br />பகலில் சில வேளைகளில் எலிகள், பெருச்சாளிகள் ஓடுவதைப் பார்த்திருக் கிறேன். இரவில் இப்படி அறைக்குள் வந்து காலைச் சுரண்டும் என்று எதிர் பார்க்கவே இல்லை. மணி என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. அருகில் ஓடுகிற மின் தொடர் வண்டி ஒலியை வைத்து ஓரளவு முடிவு செய்வோம். இப்போது எந்த ஒலியும் இலை. ஆகவே, இரவு 12 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடையில் இருக்கிறோம் என்று பொருள்.<br /><br />பக்கத்திலிருந்த செய்தித் தாளையும், புத்தகங்களையும் வைத்து அந்தப் பெருச்சாளியை விரட்டப் பார்த்தேன். எதற்கும் அசைந்து கொடுக்காத முரட்டுப் பெருச்சாளியாக இருந்தது அது.<br /><br /><br />வேறு வழியின்றிக் கம்பியின் வழியாகக் காவலரை அழைக்க முயற்சி செய்தேன். ‘‘வார்டர்’’, ‘‘வார்டர்’’ என்று ஓங்கிக் குரல் கொடுத்ததும், மேலேயிருந்து செல்வராஜ், ‘‘என்ன ஐயா?’’ என்று கேட்டார். சொன்னேன். ‘‘அது ஒண்ணும் பண்ணாது, சும்மா தூங்குங்க’’ என்றார். ‘‘எனக்கு ஆறுதல் வேண்டாம்; காவலர்தான் வேண்டும்’’ என்று சொன்னதும், அவரும் குரல் கொடுத்தார். அதன் பிறகு ஒரு காவலர் உள்ளே வந்து, தன் கையிலிருந்த தடியைக் கொடுத்தார். தடியால் பெருச் சாளி மீது ஓர் அடி போட, ஓட்டம் எடுத்தது. ‘அப்பாடா’ என்று ஒரு பெரு மூச்சு வந்தது. ஆனாலும், மறுபடியும் பெருச்சாளி வந்தால் என்ன செய்வது என்று புரியவில்லை. ‘‘சார், இந்தத் தடியை காலையில வந்து வாங்கிக்குங்களேன்’’ என்றேன். ‘‘ஒங்ககிட்ட தடி இருந்தா பெருச்சாளி போயிடும். ஆனா, என் வேலையும் போயிடுமே’’ என்றவர், ‘‘மறுபடி வந்தா கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டுத் தடியை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.<br /><br /><br />எவ்வளவோ முயற்சி செய்தும், அதன் பின், அன்று இரவு முழுக்க வரவே இல்லை & தூக்கம்!<br /><br /><br />மறுநாள் காலை, அதிகாரிகளிடம் நடந்ததைச் சொல்ல, அவர்கள் ஒரு கைதியை அழைத்து, கீழ்ப் பகுதிக்கு வலை அடித்துக் கொடுக்கச் சொன்னார்கள். அந்தப் பையன் என்னைப் பார்த்து, ‘‘எங்க பிளாக்குக்கு இந்தப் பெருச்சாளி வர மாட்டேங்குதே சார்! வந்துச்சுன்னா மறு நாள் மட்டன் சாப்பாடுதான்’’ என்றான். எலிக் கறிக்கு அங்கே ஏகப்பட்ட போட்டி!<br /><br /><br />இயல்பான உரிமைகள்கூட எங்களுக்கு மறுக்கப்பட்டன. இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும், அவருடைய துணைவியாரும் கடலூர் சிறைக்கு வந்தபோது, நெடுமாறன் ஐயா வைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தித்தாள்களில் ஒரு செய்தி வெளியாகி யிருந்தது. சென்னைச் சிறையிலும், சிறை அதிகாரி அறையில் அமர்ந்து என்னையும் பரந்தாமனையும் சந்திக்க, விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் திருமா வளவன் அனுமதி கோரி, அது மறுக் கப்பட்டதால் திரும்பிச் சென்றுவிட் டார் என்று சில காவலர்கள் கூறினர்.<br /><br /><br />எல்லாவற்றுக்கும், ‘மற்ற சட்டங்கள் வேறு, பொடா வேறு’ என்பது மட்டும்தான் எங்களுக்கு விடையாகச் சொல்லப்பட்டது.<br /><br /><br />வலைத் தடுப்புகளின் வழியே பார்வையாளர்களைச் சந்திப்பது என்பது, சில நேரங்களில் முற்றிலும் பயனற்றதாகப் போய்விடும். கூடுதல் கண்காணிப்பாளரின் அறையில் நாங்கள் நிறுத்தப்படுவோம். வலைக் கம்பிகளைத் தாண்டிக் கொஞ்சம் இடைவெளி. அதன் பிறகு அங்கே வலைக் கம்பித் தடுப்பு இருக்கும். அதற்கு அப்பால் பார்வையாளர்கள் நிற்பார்கள். இந்தப் பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பத்து பேர் நின்றால், அந்தப் பக்கம் நாற்பது பார்வையாளர்கள் நிற்பார்கள். எல்லோரும் சத்தம் போட்டுப் பேசு வார்கள். யார் யாரோடு பேசுகிறார்கள் என்பதே சில நேரங்களில் புரியாது. இரைச்சலுக்கு இடையே, சில சொற் கள் செவிகளை எட்டும்.<br /><br /><br />இவற்றுக்கெல்லாம் என்ன மாற்று எனச் சிந்தித்துக்கொண்டு இருந்த வேளையில், மாலை எங்களைச் சந்திக்க வந்த எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரும் புருசோத்தமனும், பொடா சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று அறிவுரை கூறினர். கடலூர் சென்று நெடுமாறன் ஐயாவிடம் கருத்துப் பெற்று வந்துள்ளதாகக் கூறினார்கள். அதன் அடிப்படையில், ‘பொடா சட்டத்தின் பிரிவுகள் 1(4), 3&9, 14, 18&24, 26, 27, 29, 33, 36&53 ஆகியன, இந்திய அரசியல் சாசனச் சட்டத் துக்கு முரணானவை. எனவே, அவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என என் பெயரில், நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.<br /><br /><br />வழக்குரைஞர்கள் இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் கொண்டு வந்தனர். வேறு சிலரும்கூட பொடா வில் கைது செய்யப்படலாம் என்பதே அது!<br /><br /><br />அவர்கள் கூற்று, சில நாட்களில் உண்மையாகிவிட்டது. எங்கள் கூட்டத்தில் வரவேற்பு ஆற்றிய மருத்துவர் தாயப்பன், 03.10.2002 அன்று பொடாவில் கைது செய்யப்பட்டார்.<br /><br />\ (தொடரும்)தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19299135.post-49797695889747014202007-05-11T02:10:00.000-07:002007-05-11T02:11:10.604-07:00அது ஒரு பொடா காலம்! (5)அது ஒரு பொடா காலம்! (5) <br /><br />சுப.வீரபாண்டியன் <br /><br />என்னைப் பார்த்ததும், துப்பாக்கி ஏந்திய இருபது காவலர்கள், தடதடவென்று ஓடிவந்து என்னைச் சூழ்ந்துகொண்டார் கள். ஒருவர் என் கைகளைப் பிடித்து விலங்குகளை மாட்டத் தொடங்கினார். சட்டென்று நான் கைகளைப் பின்னிழுத்துக் கொண்டேன். ‘‘என்ன இதெல்லாம்’’ என்று கேட்டேன். ‘‘விலங்கு மாட்டி அழைத்துச் செல்வதுதான் சட்டம்’’ என்றார்கள். ‘‘அந்தச் சட்டம் எங்கே இருக்கிறது?’’ என்றேன். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ‘‘நீங்க ஒத்துழைக்கலைன்னா, அப்புறம் நாங்க ஃபோர்ஸ் (யீஷீக்ஷீநீமீ) யூஸ் பண்ணவேண்டி வரும்’’ என்று மிரட்டலாகச் சொன்னார் காவல் அதிகாரி. ‘‘பண்ணுங்க’’ என்றேன். பிறகு சற்றுத் தணிந்த குரலில், ‘‘ஏன் இப்படி வம்பு பண்றீங்க?’’ என்றார்.<br /><br />நான் விளக்கமாக விடை சொன்னேன். ‘‘நான் பேசுவது வம்பு இல்லை; சட்டம். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு, விலங்கு மாட்டிக்கொள்வதற்கு எல்லாம் வெட்கப்பட முடியாது. எங்கள் பாட்டன் செக்கே இழுத்திருக்கிறார். ஆனால், நீங்கள் சட்டத் துக்குப் புறம்பாக நடந்துகொள்கிறீர்கள் என்பதால்தான் நான் ஒத்துழைக்க மறுக்கிறேன்’’ என்று கூறிவிட்டு, சிறப்பு அனுமதி பெற்ற வழக்குகளைத் தவிர பிறவற்றில் எந்த ஒரு கைதிக்கும் கைவிலங்கு போடக் கூடாது என்று அறிவித்த உச்சநீதிமன்ற ஆணையை, அதன் எண், வருடம், மாதம், தேதியோடு சொன்னேன். ‘‘நான் இவ்வளவு ஆதாரத்தோடு சொன்ன பிறகும், எனக்கு நீங்கள் விலங்கிட்டு அழைத்துச் சென்றால், நீதிமன்றத்தில் இது குறித்துக் கண்டிப்பாக முறையிடுவேன்’’ என்றேன்.<br /><br />இப்போது அவர்களின் வேகம் குறைந்திருந்தது. அதிகாரிகள் தனியாகப் போய் பேசிவிட்டுத் திரும்பி வந்தனர். ‘‘சரி, வாங்க போகலாம்’’ என்றார்கள். விலங்குகள் மாட்டப்படவில்லை.<br /><br />ஆனால், இதற்கான எதிர்வினையை அவர்கள் நீதிமன்றத்தில் காட்டினார்கள். அங்கே உறவினர்களும் இயக்கத் தோழர் களும் நண்பர்களும் ஏராளமாகக் காத்திருக்க, யாரையும் என்னோடு பேசவிடாமல் கெடுபிடி செய்தனர்.<br /><br />என் மகன் இலெனின் மட்டும், பேத்தி ஓவியாவைத் தூக்கிக்கொண்டு உள்ளே வர முயற்சித்தான். காவலர்கள் விடவில்லை. துப்பாக்கிகளைத் தாண்டி, பத்து மாதக் குழந்தையான என் பேத்தியின் முகம் தெரிந்தது. அந்தச் சூழலில் குழந்தையின் முகம் மிரண்டு போய்க்கிடந்தது. காவல் துறை வட்டத்தைக் விலக்கிக்கொண்டு, குழந்தையை நோக்கி நடந்தேன். வழி மறித்து, ‘‘அங்கே போகக் கூடாது!’’ என்றனர். ‘‘ஏன்?’’ என்றேன். ‘‘சட்டத்தில் அதற்கெல் லாம் இடமில்லை!’’<br /><br />கோபம் கொள்ளுதல் என் இயல்பன்று. ஆனாலும், சில வேளைகளில் சினம், மனிதனின் அடையாளம். இப்போது எனக்குள்ளி ருந்து அந்த அடையாளம் வெளிப்பட்டது. உரத்துப் பேசினேன். ‘‘உங்கள் மிரட்ட லுக்குப் பயப்பட முடியாது’’ என்று சத்தம் போட்டேன். ‘‘வராந்தாவில் என்ன சத்தம்?’’ என்று கேட்ட நீதிபதி, செய்தியை அறிந்து என்னை உள்ளே அழைத்து வரச் சொன்னார்.<br /><br />நீதிபதி முன் நிறுத்தப்பட்ட நான், விலங்கிட முயற்சித்த நிகழ்விலிருந்து எல்லாவற்றையும் கூறிவிட்டு, ‘‘குழந்தை யைக் கொஞ்சுவதற்குக்கூடவா பொடா சட்டம் தடை விதிக்கிறது?’’ என்று கேட் டேன். நீதிபதி என்ன சொல்லப் போகிறார் என்பதை எல்லோரும் ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.<br /><br />வழிக்காவலர்களுக்குத் தலைமை ஏற்று வந்த உதவி ஆணையரை (ஏ.சி) நீதிபதி அழைத்தார். ‘‘ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறீர்கள்?’’ என்று சற்று கடுமையாக அவர் கேட்ட கேள்விக்கு, விடையேதும் சொல்லாமல் நின்றிருந்தார் காவல் அதிகாரி. ‘‘இனிமேல் இங்கு அழைத்துவரப்படும் கைதிகள் யாருக்கும் என் அனுமதி இல்லாமல், விலங்கு பூட்ட முயற்சிக்க வேண்டாம்’’ என்ற நீதிபதி, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சு வதற்கு என்னை அனுமதிக்குமாறு அந்த அதிகாரிக்கு அறிவுறுத்தி னார்.<br /><br />வீட்டில், தெருவில், பூங்கா வில் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு; உங்களுக்கும் இருக்கும். பரபரப்பான நீதிமன்ற நடை பாதையில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நெருங்கி நிற்க, பல்வேறு வகையான மனிதர்கள் அந்தக் காட்சியை வேடிக்கை பார்க்க, போராடிப் பெற்ற அனுமதியின் பேரில் பேத்தியைக் கொஞ்சி மகிழும் ‘பெரும் பாக்கியம்’ எல்லோருக்கும் வாய்த்து விடாது.<br /><br />ஆனாலும், மிரண்டு போயிருந்த குழந்தையின் முகம் பார்த்தபின், முதலில் அந்த இடத்திலிருந்து குழந்தையை மட்டுமாவது ‘விடுதலை’ செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. இலெனினிடம், ‘‘தம்பி! ஓவியாவை நாளைக்குச் சிறைக்கே தூக்கிட்டு வா! இங்கே வேணாம். பாவம், பயப் படுது’’ என்று சொல்லி விட்டு, ஊர்தியை நோக்கி நடந்தேன்.<br /><br />வழக்கத்துக்கு மாறாக, அன்று கைதிகள் பலர், சிறையில் மகிழ்வுடன் காணப்பட்டனர். நான் உள்ளே வந்து ஒரு மாதத்தில் அன்றுதான் அப்படி ஒரு முகமலர்ச்சியைப் பலரிடம் பார்த்தேன்.<br /><br /><br />காலை ‘படி’யாகச் சப்பாத்தி கொண்டுவந்த ஓர் இளைஞன், ‘ஐயா, நாளையிலேருந்து உங்க ளுக்கு இன்னொருத்தன் சப்பாத்தி கொண்டு வருவான்யா’’ என்றான்.<br /><br />‘‘ஏம்ப்பா, நீ..?’’<br /><br />‘‘விடுதலைங்கய்யா..! பத்து வருஷமாச்சு. நாளைக்கு ராத்திரி சாப்பாடு வீட்டுல தானுங்கய்யா. எங்க ஆத்தாகிட்ட மீனு வாங்கி கொழம்பு வைக்கச் சொல்லியிருக்கேன்.’’<br /><br />‘‘அப்படியா! மகிழ்ச்சி ராஜா, தொடர்ந்து வீட்டுச் சாப்பாடே சாப்பிடு. மறுபடியும் சிறை சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டுடாதே!’’<br /><br />அவன் சிரித்தான். ‘‘போதுங்கய்யா, இனிமே இங்க வர மாட்டேன்’’ என்றவன், ‘‘அந்தப் பையன்கிட்ட சொல்லியிருக்கேன். இதே மாதிரி நல்ல சப்பாத்தி போட்டுத் தருவான்’’ என்றான்.<br /><br />விடுதலை ஆகப்போகும் அவன் என்னைப் பற்றியும் அக்கறை காட்டுகிறானே என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ‘இதே மாதிரி நல்ல சப்பாத்தி’ என்றானே, அங்குதான் ஒரு பேரச்சம் என்னைப் பற்றிக்கொண்டது.<br /><br />எல்லாக் கைதிகளுக்கும், மூன்று வேளையும் ‘பட்டைச் சோறு’தான்! ஒரு நீளமான தட்டில் வைத்து நான்கு பேர் அதைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். பார்ப்பதற்குக் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கும்.<br /><br />முதல் வகுப்புக் கைதிகளுக்கு மட்டும் சப்பாத்தி. ‘அடடா, அது ஒரு பெரிய வரம்’ போல முதலில் தோன்றும். சிலர் பகலிலும்கூடச் சப்பாத்தி கேட்டு வாங்கிக்கொள்வார்கள். ஒரு மாதத்தில் சலித்துப் போகும். ‘காலையில் சப்பாத்தி, கடும் பகல் சப்பாத்தி, மாலையில் சப்பாத்தி, மறுபடியும் சப்பாத்தி’ என்றால் யாருக்குத்தான் வெறுத்துப் போகாது! அதிலும் இரவுக்கான சப்பாத்தியை மாலை 5 மணிக்கே கொண்டுவந்து தந்து விடுவார்கள். இரவு எட்டு மணிக்கு அதை உண்ணும்போது, அட்டையைப் பிய்த்துத் தின்பது போல அவ்வளவு ‘மென்மை’யாக இருக்கும்.<br /><br />இந்த இளைஞன் கொண்டுவரும் சப்பாத்தியோ பகலிலேயே கனமாய் இருக்கும். அதே மாதிரி தொடர்ந்து வரும் என்று எனக்கு ‘ஆறுதல்’ கூறிவிட்டு அவன் விடைபெற்றான்.<br /><br />மதியப் ‘படி’யாகச் சோறு கொண்டுவந்த பெரியவரிடமும் ஒரு சுறுசுறுப்பு மகிழ்ச்சி! ‘என்ன... ஒங்களுக்கும் நாளைக்கு விடுதலையா?’’ என்று வேடிக்கையாகக் கேட்டேன். ‘‘அட! ஆமாங்கய்யா, எப்படிக் கரெக்கிட்டா சொல்லிப் போட்டீங்க?’’ என்றார்.<br /><br />எனக்கு வியப்பாக இருந்தது. அருகிலிருந்த மோகனிடம், ‘‘என்ன இது, ரொம்பப் பேர் நாளைக்கு விடுதலைங்கிறாங்களே?’’ என்றேன்.<br /><br />‘‘நாளைக்கு அண்ணா பிறந்த நாள் இல்லீங்களா... பொதுமன்னிப்பில் போயிடுவாங்க’’ என்றார்.<br /><br />‘‘எல்லாப் பயலும் பொறப்புடு றானுங்க. நமக்குத்தான் இந்தக் கதவு எப்பத் தெறக்கும்னு தெரியலே!’’ & செல்வராஜின் குரல் விரக்தியாக வெளிப்பட்டது.<br /><br />அன்று மாலை, மனு பார்க்க வந்த தங்கள் உறவினர்களிடம் நூற்றுக் கணக்கான கைதிகள் தம் உடைகள் மற்றும் பொருள்களை எல்லாம் கொடுத்து அனுப்பினர்.<br /><br />நாளைக்கு வெளியே போகும் போது, அணிந்து செல்ல ஒரு நல்ல உடையை மட்டும் வரவழைத்துக் கொண்டனர். மற்றபடி, கை வீசிச் செல்ல வேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.<br /><br />செப்டம்பர் 15 & அண்ணா பிறந்த நாள் வந்தது. ‘காவலர்கள் வருவார்கள்; அழைத்துச் செல்வார்கள்; அடை யாளங்களைச் சரிபார்த்து அனுப்பி வைப்பார்கள்... அவ்வளவுதான்! சிறகை விரிக்கலாம், வானில் பறக்கலாம்’ என்று கனவுகளோடு கைதிகள் பலர் காத்திருந்தனர்.<br /><br />ஆனால், சிறையில் ஓர் அசைவும் தென்படவில்லை. மாலை ஆனவுடன், கைதிகளிடம் அச்சம் பரவத்தொடங் கியது. அதிகாரிகளிடம் ஓரிருவர் நேரடியாகவே கேட்டனர். ‘‘அரசாங் கத்துல இருந்து ஒரு உத்தரவும் வரலியே, நாங்க என்ன பண்றது?’’ என்று அவர்கள் கைவிரித்த பின்புதான், நிலைமை புரிந்தது.<br /><br />இருள் கவிந்த வானம் போல் இருண்டது சிறை! எல்லோரும் வழக்கம் போல் அவரவர் அறைகளில் வைத்துப் பூட்டப்பட்டனர். அங்கே வீடுகளில் மீன்குழம்போடு காத்திருக்க, இங்கே இவர்கள் பட்டைச் சோறும் வேண்டாமென்று படுத்து உறங்கி னார்கள்.<br /><br />அடுத்த நாள் காலையிலிருந்து, ‘ஏன், ஏன் இப்படி’ என்ற வினாக்கள் அலைமோதின. அண்ணாவின் பிறந்த நாளில், ஆண்டுகள் பலவாய்ச் சிறையில் இருப்போருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்பது நெடு நாளாக இருந்துவரும் மரபு. இந்த ஆண்டில் மட்டும் என்ன நேர்ந்தது என்று வாதங்கள் நிகழ்ந்தன.<br /><br />‘‘அந்த அம்மா விடாதுடா நம்மளை யெல்லாம்..!’’<br /><br />‘‘ஏன் விடாது? போன வருஷம் விடலையா?’’<br /><br />‘‘இல்லையில்ல... நான் விசாரிச்சுட்டேன். இனிமே அண்ணாவுக்குப் பதிலா, அந்த அம்மாவின் பொறந்த நாளுக்குதான் விடப் போறாங்களாம்!’’<br /><br />‘‘அப்படியா, அது பிப்ரவரி மாசம்ல வரும்! அதுவரைக்கும் இங்கேயே கெடக்க வேண்டியதுதானா?’’<br /><br />இவையெல்லாம் அன்று எங்கள் செவிகளில் விழுந்த உரையாடல்கள். ஆனால், எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போயின. யாரு டைய பிறந்த நாளிலும் பொதுமன்னிப்பு வழங்கப் படவே இல்லை.<br /><br />ஆட்சி மாற்றம் ஏற் பட்ட பின், 2006&ம் ஆண்டு தான் மீண்டும் அந்த செப்டம்பர் 15 வந்தது.<br /><br />அன்று காலை குளித்து முடித்த பின், ஒரு கருஞ்சட்டையை எடுத்து அணிந்துகொண்டேன்.<br /><br />கறுப்புதான் எனக்குப் பிடித்த வண்ணம். வெயிலில் உழைப்பவர்கள், வியர்வையில் நனைபவர்கள், சூரியனை முதுகில் சுமப்பவர்கள் கறுப்பாகத்தான் இருப்பார்கள். எனவே, அது உழைப்பின் நிறம்; உயர்வின் நிறமும்கூட!<br /><br />ஆனால், கறுப்புச் சட்டை அணிவது என்பது, சிறையில் ஏதோ எதிர்ப்பைக் காட்டுவது என்று பொருளாம். எனக்கு அது தெரியாது. காலையில் என் அறைக்குத் தற்செயலாக வந்த சிறைக் கண்காணிப்பாளர், ‘‘என்ன, இன்னிக்குக் கறுப்புச் சட்டை, எதுவும் பிரச்னையா?’’ என்றார்.<br /><br />‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. இன்று நம் அய்யா பெரியாரோட பிறந்த நாளாச்சே! அதைத் தனிமையில் நானா கொண்டாடுறேன்’’ என்று சொல்லிச் சிரித்தேன்.<br /><br />ஒவ்வொரு நாளும், மாலை ஆறு மணிக்கு உள்ளே வைத்துப் பூட்டப்படும்போது, இன்னும் 12 மணி நேரத்தை எப்படிக் கழிப்பது என்ற கவலை ஒட்டிக்கொள்ளும். அன்றைக்கும் தொற்றிக்கொண்டது.<br /><br />அப்போது... வெளிக்கதவு திறக்கும் சத்தம்! கம்பிகளின் வழியே பார்த்தேன். சிறை அதிகாரி யும், அவரைத் தொடர்ந்து வெள்ளை முழுக்கைச் சட்டை, வேட்டி அணிந்த ஒரு நெடிய உருவமும் உள்ளே வந்தனர்.<br /><br />‘‘துணைக்கு ஆள் வேணும்னு கேட்டீங்களா... ஒங்க கட்சிக்காரர் இன்னொருத்தரையும் அனுப்பி வெச்சிருக்காங்க’’ என்று சிரித்துக்கொண்டே சிறை அதிகாரி சொல்ல, பின்னால் நிற்பவரைக் கவனித்தேன்.<br /><br />‘‘என்ன சுபவீ, எப்படி இருக்கீங்க?’’ என்று கேட்ட அவர், எங்கள் இயக்கத்தின் இன்னொரு பொதுச் செயலாளர் பரந்தாமன். ‘‘இன்னிக்கு அதிகாலையில மானாமதுரைக்கு வந்து என்னையும் பொடாவில் கைது பண்ணிட்டாங்க’’ என்றார்.<br /><br />வருத்தம் என்பதைவிட, துணைக்கு ஒரு நண்பர் கிடைத்த மகிழ்ச்சிதான் என்னுள் மேலோங்கி நின்றது.<br /><br /> \ (தொடரும்)தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19299135.post-23386593293101734452007-05-04T01:29:00.000-07:002007-05-04T01:34:51.084-07:00அது ஒரு பொடா காலம் (பகுதி-4)அது ஒரு பொடா காலம் (பகுதி-4) <br /> <br />சுப.வீரபாண்டியன் <br /><br /> ‘சிறை மொழி’ என்றே ஓர் அகராதி தயாரிக்கலாம். விதவிதமான சொல்லாடல்கள். உள்ளே போய்ச் சில நாள்களில் நமக்கும் புரிந்துவிடும். மனு, ஆல்டி, டர்க்கி, ரைட்டன், படி என்று பல சொற்கள் அங்கு புழங்கும். நண்பர்களோ, உறவினர்களோ நம்மைப் பார்க்க வந்துள்ளனர் என்பதை ‘மனு வந்திருக்கு’ என்றுதான் சொல்வார்கள். முதல் வகுப்பில் கைதிகளாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய அனுப்பப்படும் இன்னொரு கைதியின் பெயர் ‘ஆல்டி’. (ஆர்டர்லி என்னும் ஆங்கிலச் சொல்லே அப்படித் திரிந்துவிட்டதாகப் பிறகு அறிந்தேன்.)<br /><br /> எப்போதும் போதையிலேயே இருப்பவன், ‘டர்க்கி’; ஒரு தொகுதியில் எத்தனை கைதிகள் இருக்கின்றனர் என்பதைக் கணக்கெடுப்பதில் காவலர்களுக்கு உதவுகிற கைதியின் பெயர் ‘ரைட்டன்’; உணவின் மறு பெயர் ‘படி’. வேளாவேளைக்குப் படி அளப்பார்கள்.<br /><br /> அன்று காலை, எனக்கு மனு வந்தது. மகிழ்வோடும், கூடவே ஒருவித அச்சத்தோடும் நடந்தேன்.<br /><br /> 30.08.02 இரவே பேரன் பிறந்துவிட்ட செய்தியையும், மகள் நலமுடன் உள்ள செய்தியையும் ‘மனு’வில் அறிந்து மகிழ்ந்தேன். ஏற்கெனவே மகன் வழியில் ஒரு பேத்தி ஓவியா; இப்போது மகள் வழியில் ஒரு பேரன்.<br /><br /> ‘பிள்ளைகள், பேரன், பேத்தி பெறற்கரும் அரிய பேறும் அள்ளவே குறைந்தி டாத அன்பையும் உலகில் பெற்ற’ மகிழ்வோடு மறுபடியும் என் தொகுதிக்குத் திரும்பினேன்.<br /><br /> இரண்டு நாள்களுக்குப் பிறகு, ஒரு மாலையில், எங்கள் தொகுதியில் காலியாக உள்ள மற்ற அறைகளையும் சுத்தப்படுத்தினர். யாரோ வருகிறார் கள் என்று பொருள். யாரென்று கேட்டேன். காவலர்களுக்குத் தெரிய வில்லை. அதிகாரிகள் சொல்ல வில்லை. வழக்கம் போல, மாலை 6 மணிக்கு அறையில் வைத்து எங்களைப் பூட்டிவிட்டார்கள்.<br /><br /> இரவு 8 மணியளவில், வெள்ளைச் சட்டை, கட்சிக் கரை வேட்டியுடன் இருவரைக் காவலர்கள் அழைத்து வந்தனர். அருகில் வந்தவுடன் முகம் தெரிந்தது. எங்களுக்கு முன்பே பொடாவில் கைதாகி, வெவ்வேறு சிறைகளில் உள்ள ம.தி.மு.க. நண்பர் களே அவர்கள்! ஈரோடு கணேச மூர்த்தியும், புலவர் செவந்தியப்பனும், மதுரைச் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறிது நேரத்தில் திருச்சி சிறையிலிருந்து சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.மணியம், வழக்குரைஞர் அழகுசுந்தரம், மதுரை கணேசன், திருமங்கலம் நாகராஜன் ஆகியோர் வந்தனர். இறுதியாக சேலம் சிறையிலிருந்து வீர.இளவரசன், பூமிநாதன் வந்து சேர்ந்தார்கள்.<br /><br /> பதினைந்து நாள்களுக்குப் பிறகு, இரவில் மனித நடமாட்டத்தைப் பார்த்த மகிழ்ச்சி. கம்பிகளுக்கிடையில் கை நீட்டி அவர்களை வரவேற்றேன். சிறை மறந்து எல்லோரும் மகிழ்ச்சி யாக இருந்தோம். ஒருவரையருவர் விசாரித்துக்கொண்டோம். எப்படித் தெரியுமா... ‘‘ஒங்க சிறை எப்பிடி யிருக்கு?’’, ‘‘திருச்சியைவிட மதுரை ஜெயில் பரவாயில்லையா?’’ இப்படி!<br /><br /> அடுத்த நாள், அவர்களுக்குப் பூவிருந்தவல்லி பொடா நீதிமன்றத்தில் வழக்கு. அதற்காக முதல் நாள் இரவு இங்கு கொண்டுவந்துள்ளனர். இது வெறும் இரவுத் தங்கல். பொழுது விடிந்தால் வேடந்தாங்கல் கலைந்து விடும் என்று தெரிந்ததும், என் மகிழ்ச்சி வடிந்துவிட்டது. மீண்டும் அவர்களைச் சந்திக்க ஒரு மாதம் ஆகலாம்!<br /><br /> பொதுவாக எந்த ஒரு கைதியை யும், 15 நாள்களுக்கு ஒருமுறை நீதிமன்றம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. அப்படி அழைத்துச் செல்லப்படும்போது ஊரை, உலகைப் பார்க்கலாம் என்பதோடு, நீதிமன்றத்தில் உறவினர் களையும் பார்க்கலாம்.<br /><br /> வழிக்காவல் (escorts) வருகிறவர் அனுமதியோடு வீட்டு உணவையும் ஒரு வேளை சுவை பார்க்கலாம். வழக்கிலும் சில முன் நகர்வுகள் ஏற்படலாம். இப்படிப் பல நன்மைகள் உள்ளதால், நீதிமன்றம் செல்லும் நாளை விசாரணைக் கைதிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.<br /><br /> பொடா கைதிகளுக்கு அதிலும் ஒரு மாற்றம். ஒரு மாதத்துக்கு ஒருமுறை நீதிமன்றம் அழைத்துச் சென்றால் போதும் என்கிறது பொடா சட்டம்.<br /><br /> பொடா (POTA-prevention of Terrorist Act 2002) போன்ற சட்டங்கள் இந்தியாவுக்குப் புதியவை அல்ல. ஏறத்தாழ 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டபோது, இதுபோன்ற பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது. அவற்றுள் குறிப் பிடத்தக்கது, ரௌலட் சட்டம்.<br /><br /> வெள்ளைக்கார நீதிபதி ரௌலட்டும், சென்னையில் நீதிபதியாக இருந்த சி.வி.குப்புசாமி சாஸ்திரியும் சேர்ந்து அந்தக் கொடுமையான சட்ட முன் வடிவை அரசுக்கு அளித்தனர். அதனை அப்போது சென்னை, திலகர் பவனில் (இப்போது ‘சோழா’ ஓட்டல் இருக்கு மிடம்) தங்கியிருந்த காந்தியடிகள் கடுமையாக எதிர்த்தார். அன்னி பெசன்ட், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, எஸ்.சுப்பிரமணிய அய்யர், ஜி.ஏ.நடேசன் ஆகியோர் ஆதரித்தனர்.<br /><br /> இறுதியில் 1919&ம் ஆண்டு அச்சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. அதனை எதிர்த்து பஞ்சாப், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் 1919 ஏப்ரல் 13 அன்று பல்லாயிரக்கணக் கான மக்கள் கூடினர். அவர்களைக் கலைக்க ஆங்கில அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் (1650 ரவுண்டுகள்) 800&க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.<br /><br /> விடுதலை பெற்ற இந்தியாவிலும் ரௌலட்&சாஸ்திரி சட்டத்தின் மறுபதிப்புகள் வந்துகொண்டே இருந்தன. ‘டி.ஐ.ஆர்’ (D.I.R- Defence of Indian Rules) சட்டத்தின் கீழ்தான் 1965-&ல் கலைஞர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.<br /><br /> 1971&ம் ஆண்டு ‘மிசா’ (Maintenance of Internal security Act-MISA) சட்டமும், 1985&ம் ஆண்டு ‘தடா’ (TADA- The Terrorist and Disruptive Activities prevention Act) சட்டமும் நடைமுறைக்கு வந்தன. அந்தச் சட்டங்களின் மறு பதிப்பும் மலிவுப் பதிப்பும்தான் பொடா!<br /><br /> ஆகவே, மற்ற சட்டங்களின் கீழ் பெறக்கூடிய இயல்பான உரிமைகளைக்கூட, நாங்கள் இழக்க வேண்டி யதாயிற்று. அச்சட்டத்தின் பெயரால், எத்தனை விதமான ஒடுக்குமுறைகள் அரங்கேற்றப்படுகின்றன என்பதை 13.09.2002 அன்று நான் நேரடியாகவே உணர்ந்தேன்.<br /><br /> அன்றுதான், நான் கைது செய்யப்பட்ட பிறகு முதன்முறையாகச் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறேன். மற்ற கைதிகளைப் போல, எனக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி இருந்தது. காலை 10 மணிக்குச் சிறையைத் தாண்டிக் காலடி எடுத்து வைத்த நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.<br /><br /> \ (தொடரும்)தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19299135.post-26858319552225289282007-04-27T07:54:00.000-07:002007-04-27T07:55:44.465-07:00அது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்அது ஒரு பொடா காலம் (பகுதி 3)<br /><br />சுப.வீரபாண்டியன் <br /><br /> <br /> கூவம் நதியால் சூழப்பட்டு இருந்த சென்னை நடுவண் சிறையின், உயர் பாதுகாப்புத் தொகுதி 1&ல் அடைக்கப்பட்டேன். ஒருவனைப் பயங்கரவாதியாகச் சித்திரிப்பதற்கு அரசு மேற் கொள்ளும் உத்திகளில் ஒன்று, உயர் பாதுகாப்புத் தொகுதியில் சிறைவைப்பது. அந்தத் தொகுதியில் அடைக்கப்படுபவர்கள், பகல் நேரத்தில்கூட, அதனைவிட்டு வெளியில் வந்து பிற கைதிகளுடன் பேசவோ, பழகவோ இயலாது. கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளே வந்திருப்போருக்கு இருக்கும் பகல் நேரச் சுதந்திரம்கூட என் போன்ற ‘பயங்கரவாதி’களுக்குக் கிடையாது.<br /><br />அந்தத் தொகுதியில் கீழே நான்கும், மாடியில் நான்குமாக எட்டு அறைகள். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு கழிப்பறை உண்டு. வெளியில் இரண்டு பொதுக் கழிப்பறைகளும், ஒரு நீர்த் தொட்டியும், கொஞ்சம் திறந்தவெளி இடமும் இருந்தன. மொத்த உலகம் இவ்வளவுதான்!<br /><br />சிறையதிகாரி என்னை அங்கே அழைத்துக்கொண்டு போனபோது, எட்டு அறைகளுக்குமாகச் சேர்த்து இரண்டே இரண்டு பேர்தான் இருந்தார்கள். நான் மூன்றாவது ஆள். அவர்களில் ஒருவர் பெயர் மோகன். இன்னொருவர் செல்வராஜ்.<br /><br /><br />உள்ளே நுழைந்ததுமே மோகன் என்னிடம் அன்பாகப் பேசினார். ‘என்னைத் தெரிகிறதா?’ என்று கேட்டார். ‘பார்த்த மாதிரி இருக்கிறது’ என்றேன். அவர் விளக்கம் சொன்னபின், அந்தப் பழைய நிகழ்வு கள் நினைவுக்கு வந்தன.<br /><br /><br />விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, 1996&ம் ஆண்டு இறுதியில் நான் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு நள்ளிரவில் அங்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஏற்கெனவே 53 பேர் அடைக்கப்பட்டு இருந்த, அந்த நீள் அறையில் 54&வதாக என்னை உள்ளே அனுப்பினார்கள்.<br /><br /><br />குறுக்கும் நெடுக்குமாகவும், தாறுமாறாகவும் எல்லோரும் படுத்திருக்க, நான் ஒரு ஓரமாகப் படுக்க இடம் தேடியபடி நின்றிருந்த போது, ஒரு ஆள் எழுந்து, என்னைப் பற்றி விசாரித்து, எனக்கு மரியாதை கொடுத்து, படுப்பதற்கு ஓர் இடத்தையும் ஒதுக்கித் தந்தார். அவர்தான் மோகன்.<br /><br /><br />மோகனைப் பற்றிய இன்னொரு செய்தி, அவர் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் தம்பி. அதே வழக்கில் கைதாகி உள்ளே இருக்கும் இன்னொருவர்தான் செல்வராஜ். வழக்குக் காரண மாக ‘ஆட்டோ’ செல்வராஜ். அவர்கள் இருவரும் மாடியில் உள்ள அறைகளில் இருக்க, நான் மட்டும் கீழ் அறை ஒன்றில், மாலை ஆறு மணிக்குப் பூட்டப்பட்டேன்.<br /><br /><br />ஆளரவமற்ற அன்றைய இரவின் நிசப்தம், வாழ்க்கை என்னை எப்படிப் புரட்டிப் போட்டுள்ளது என்பதை எனக்கு உணர்த்திற்று. வீட்டிலும் உறுப்பினர்கள் அதிகம்; வெளியிலும் நண்பர்கள் அதிகம். கலகலப்பாகவே வாழ்ந்து பழகிய நான் தனிமையில், வராந்தாவில் எரியும் ஒரு சின்ன விளக்கின் வெளிச் சத்தில் கம்பிகளைப் பிடித்தபடி நின்றிருந்தேன்.<br /><br /><br />ஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடும் புலிகளின் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துரைப்பதில் எப்போதும் நான் தயங்கியதில்லை. ஒருமுறை, ‘உங்கள் மீது விடுதலைப்புலி கள் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதே?’ என்னும் வினாவுக்கு, ‘அது முத்திரையன்று, என் முகவரி!’ என விடை எழுதியிருந்தேன்.<br /><br /><br />நாங்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த கூட்டத்தில் பேசும்போது, ‘எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்க முடியாது. கருத்து வேறுபாடுகளுக்குரிய களமாக அமைவதுதான் ஜனநாயகம். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கருதுவோர், தங்கள் கருத்தை ஊடகங்களிலும், மேடைகளிலும் வெளிப்படுத்த உரிமை இருக்கும்போது அவர்களைப் போராளிகள் என்று கருதும் எங்கள் கருத்தை வெளியிடுவது மட்டும் எப்ப டிப் பயங்கரவாத மாகும்?’ என்று நான் வினா எழுப்பினேன்.<br /><br /><br />எல்லாவற்றுக்கும் உலகில் ஒரு விலை உள்ளது. இது கருத்து உரிமைக்காக நாம் கொடுக்கும் விலை என்று எண்ணிக்கொண்டு இருந்தபோது, என்னையும் மறந்து உறங்கிவிட்டேன்.<br /><br /><br />அடுத்த நாள் காலைச் செய்தித்தாள்களில், நான் கைது செய்யப்பட்ட செய்தியோடு, என் வீட்டில் சோதனை (ரெய்டு) நடந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது. வீட்டில் சோதனை என்றால், மீண்டும் ஒரு பரபரப்பு அரங்கேற்றப்பட்டு இருக்கும். ஏன் இத்தனை பரபரப்பு? எதற்காக இவ்வளவு உருட்டலும், மிரட்டலும்?<br /><br /><br />ஜெயலலிதா அரசின் சர்வாதிகாரம் குறித்து, வைகோ தன் அறிக்கை ஒன்றில் மிகத் தெளிவாகக் குறிப் பிட்டு இருந்தார். ‘தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும், எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தவும், தமிழகத்தின் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவும், அ.தி.மு.க. அரசு பொடா சட்டத்தைப் பயன்படுத்து கிறது’ என்று வைகோ சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை!<br /><br /><br />இரண்டு நாள்களுக்குப் பின்னர், சிறையில் என்னைச் சந்திக்க என் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப் பட்டது. காரைக்குடியில் படித்துக் கொண்டு இருந்த என் இளைய மகன் பாரதிதாசன் கண் கலங்குவதைக் கம்பி வலைகளைத் தாண்டி என்னால் காண முடிந்தது.<br /><br /><br />‘சிறைச்சாலையைப் பூஞ்சோலை என்று பாடியவரின் பெயரை அல்லவா உனக்கு வைத்திருக்கிறேன். இப்படிக் கலங்கலாமா?’ என்று ஆறுதல் சொன்னேன்.<br /><br /><br />மனைவியிடம், வீட்டில் நடந்த சோதனை பற்றிக் கேட்டறிந்தேன். சில புத்தகங்களை மட்டும் எடுத்துச் சென்றார்களாம். ‘நீங்கள் வைத்திருந்த பிரபாகரன் படத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்’ என்று மனைவி கூற, ‘படமே வெடிகுண்டாய் அவர்களைப் பயமுறுத்தி யிருக்கும், விடு!’ என்றேன்.<br /><br /> <br />25.08.02&ம் நாள் நாளேடுகளில், ஒரு வியப்பான செய்தி வெளியாகி இருந்தது. சிறீலங்காவின் மறு வாழ்வுத் துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தன, ‘செப்டம்பர் 16 அன்று, தாய்லாந்தில் தொடங்க விருக்கும் பேச்சுவார்த்தைக்கு வசதியாக, விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடை செப்டம்பர் 6 அன்று விலக்கிக்கொள்ளப்பட உள்ளது’ என்று அறிவித் திருந்தார்.<br /><br /><br />எந்த நாட்டில் சிக்கலோ, அந்த நாட்டிலேயே தடை நீக்கப்படும்போது, இந்த நாட்டில் தடை இருப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றிப் பேசி விட்டோம் என்று சொல்லி எங்களைப் பொடாவில் கைது செய்வதும் வேடிக்கை யான செய்தி அன்று; வேதனையான முரண்!<br /><br /><br />சிறையில் காலை நேரம் செய்தித்தாள்களில் கழியும். பிறகு, நான் கொண்டு சென்றிருந்த நூல்களைப் படிப்பேன். இருப்பினும் எவ்வளவு நேரம் படிக்க முடியும்! பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் போலிருக்கும். மோகன் அதிகம் பேசமாட்டார். செல்வராஜ், பேசுவதை நிறுத்தமாட்டார். அவரு டைய கதையை அவர் சொல்லச் சொல்ல, நானும் சுவைத்துக் கேட்கத் தொடங்கினேன். பின்னாளில் அதுவே, என்னால் எழுதப்பட்ட ‘இடைவேளை’ என்னும் தொடர்கதை ஆனது.<br /><br /><br />26&ம் தேதி காலை. ‘ஐயா! பாத்தீங்களா?’ என்று செய்தித்தாளை எடுத்துக் கொண்டு செல்வராஜ் ஓடி வந்தார். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திவிட்ட செய்தி பெரிதாக வந்திருந்தது.<br /><br /><br />எனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. என் கவலை நாகப்பா பற்றியது மில்லை; வீரப்பன் பற்றியதுமில்லை. அப்போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு, கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஏதேனும் கலவரம் ஏற்பட்டு, அவருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று எண்ணி, மனம் கலங்கினேன். ஆனால், நல்லவேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.<br /><br /><br />அதே செய்தித்தாளின் பின் பக்கத்தில் ‘நெடுமாறன் கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைப்பு’ என்று இன்னொரு செய்தி வந்திருந்தது.<br /><br /><br />தமிழனத்தின் மீதும், தமிழின உணர்வாளர்களின் மீதும் ஜெயலலிதா வுக்கு ஏன் இத்தனை கோபம் என்று கேள்வி எழுந்தது. பரம்பரை யுத்தம் போன்று அவர் நடந்துகொண்டார்.<br /><br /><br />நாள்கள் நகர்ந்தன. உறவினர்களும் நண்பர்களும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் வந்து பார்த்துச் சென்றனர். அந்தச் சந்திப்புகள், விதவிதமான உணர்ச்சி களின் வெளிப்பாடாக இருந்தன.<br /><br /><br /><br />நாள் தவறாமல் சிறைக்கு வந்து கொண்டு இருந்த இலெனின், 30.08.02 அன்று விரவில்லை. என் அண்ணன் செல்வமணியும், நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர்.<br /><br /><br />‘இந்துவுக்குக் காலையிலிருந்து இடுப்பு வலியாக இருக்கிறதாம். அதனால்தான் இலெனின் வரவில்லை’ என்று அண்ணன் சொன்னார். ‘தலைப் பிரசவம்.... எல்லோருமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.<br /><br /><br /><br />மீண்டும் சிறையில் அறைக்குத் திரும்பிய பின், மகளின் நினைவு மனத்தை வாட்டியது. ‘வந்தது, வந்தது ஞாபகம் & மகளே, வாடாத பூப் போன்ற உன் முகம்’ என்னும் அறிவுமதியின் பாடல் வரிகளை வாய் முணு முணுத்தது.<br /><br /><br />அன்று வெள்ளிக்கிழமை. அடுத்து இரண்டு நாள்களுக்கு எதையும் தெரிந்துகொள்ள முடியாது. திங்கள் கிழமை வரை நெஞ்சம் அதையே நினைத்துக்கொண்டு இருந்தது. நல்ல செய்திக்காகக் காத்திருந்தேன்! <br /><br /> \ (தொடரும்)தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19299135.post-85593073322815334492007-04-20T01:39:00.000-07:002007-04-20T01:42:20.267-07:00அது ஒரு பொடா காலம் (பகுதி - 2)அது ஒரு பொடா காலம் (பகுதி - 2) <br /><br /> சுப.வீரபாண்டியன்<br /><br /> பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான் சென்னை ஐஸ் அவுஸ், நடேசன் தெருவில் உள்ள க்யூ பிரிவு காவல்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.<br /><br />அங்கே துணைக் கண்காணிப்பாளர் சில கேள்விகளைக் கேட்டார். அங்க அடை யாளங்களைக் குறித்துக்கொண்டார். பேச்சுவாக்கில், ‘‘நீங்கள் சிறைக்குப் போவது, இதுதான் முதல் முறையா?’’ என்று கேட்டார்.<br /><br />‘‘இது முதல் முறை இல்லை’’ என்ற நான், சிறிய இடைவெளி விட்டு, ‘‘கடைசி முறையும் இல்லை’’ என்றேன். இந்த ‘அதிகப்பிரசங்கித்தனம்’ அவரிடமிருந்து ஒரு சிரிப்பை வரவழைத்தது. ‘திருத்த முடியாத ஆள் போலிருக் கிறது’ என்று நினைத்திருக்கக்கூடும். வேறு எதுவும் கேட்கவில்லை.<br /><br />காவலர்களையும் ஆய்வாளரையும் பார்த்து, ‘‘உடனே புறப்படுங்க. கொஞ்ச நேரம் ஆச்சுன்னா விஷயம் தெரிஞ்சு பத்திரிகைக்காரங்க வந்துடுவாங்க’’ என்றார் துணைக் கண்காணிப்பாளர்.<br /> <br />மடமடவென்று வேலைகள் நடந்தன. என்னை அழைத்துக்கொண்டு எல்லோரும் புறப்பட்டனர். மாடிப்படிகளைவிட்டுக் கீழிறங்கி வந்தவுடன், அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி!<br /><br />வாயில் கதவுகளுக்கு வெளியே புகைப்படக் கருவிகளுடன், ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி நண்பர்கள் தயாராக எங்களை எதிர்பார்த்து நின்றிருந்தனர்.<br /><br />இதனைச் சற்றும் எதிர்பாராத காவலர்கள், எப்படி செய்தி கசிந்தது என்று விளங்காமல், என்னை அழைத்துக்கொண்டு பின்புறமாகச் சென்றனர். காவல் ஊர்தி பின்புறம் வரவழைக்கப்பட்டது. என்னை அதில் ஏற்றியதும், வாயில் கதவுகளைத் திறந்தார்கள். மின்னல் வேகத்தில், ஊர்தி அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டது.<br /><br />பூவிருந்தவல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தை நோக்கி எங்கள் வாகனம் சென்றது.<br /><br />இந்தப் பயணம் எங்கே தொடங்கியது என்று நான் நினைத்துப் பார்த்தேன்.<br /><br />2002 ஏப்ரல் 7 அல்லது 8&ம் தேதியாக இருக்க வேண்டும். நானும், ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீதும், கோடம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்தில் அமர்ந்திருந்தபோதுதான், இதற்கான தொடக்கம் ஏற்பட்டது.<br /><br />நண்பர் சாகுலுடன் அவ்வப்போது இப்படி உரையாடுவது வழக்கம். கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான், அன்புத் தென்னரசன் ஆகியோரும் சில வேளைகளில் இணைந்துகொள் வார்கள். பல நிகழ்ச்சிகள், அடுத்த கூட்டங்கள் முதலானவை அங்கு முடிவு செய்யப்படுவதுண்டு. குறிப்பிட்ட அந்த நாளில், நாங்கள் இருவர் மட்டுமே!<br /><br />‘தமிழ் முழக்கம்’ சார்பில், ஒவ்வொரு மாதமும் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை சாகுல் நடத்திக்கொண்டு இருந்தார். அந்தக் கூட்டம், வடபழனியில் உள்ள ஒரு சிறிய திருமண மண்டபத்தில் நடக்கும். திருமண நாளாக இருந்தால் மண்டபம் கிடைக்காது என்பதால், ஒவ்வொரு மாதமும் ‘அஷ்டமி’யன்று கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்தோம். பகுத்தறிவாளனாகிய நான், பஞ்சாங்கம் பார்த்து அஷ்டமி நாளை அவருக்குக் குறித்துக் கொடுப்பேன். அன்று, அடுத்த மாத ‘அஷ்டமிக் கூட்ட’த்தை எப்படி நடத்தலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.<br /><br />முதலில், நூல்களுக்கான திறனாய்வுக் கூட்டமாகத்தான் அது நடந்தது. பிறகு, நல்ல திரைப்படங்களையும் திறனாய்வு செய்தால் என்ன என்று தோன்றியது. ‘அழகி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.<br /><br />ஏப்ரல் 8&ம் தேதி, எனக்குப் புதிய சிந்தனை ஒன்று தோன்றியது. 2002 பிப்ரவரி 22 அன்று, ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக் கும் ‘புரிதல் ஒப்பந்தம்’ ஏற்பட்ட பிறகு, ஏப்ரல் 10&ம் தேதியன்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், உலகச் செய்தியாளர் களுக்கு, வன்னியில் பேட்டி அளிக்கப்போகிறார் என்னும் செய்தி, அன்று பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று ஆகும்.<br /><br />‘அந்தப் பேட்டியை ஏன் இந்த முறை நாம் திறனாய்வு செய்யக் கூடாது’ என்று நான் சாகுலிடம் கேட்டதும், துள்ளிக்குதித்து விட்டார். அவருக்கு ஒன்று பிடித்து விட்டால், பிறகு வேறு எது குறித்தும் அவர் சிந்திக்க மாட்டார். அதைச் செய்து முடிக்கும் வரை, காரியமே கண்ணாயிருப்பார்.<br /> <br />அஷ்டமி, இடம் எல்லாம் மாறிப் போய்விட்டது. ஏப்ரல் 13&ம் தேதி, சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஆனந்த் திரையரங்கைப் பதிவுசெய்து விட்டார். நெடுமாறன் ஐயா, தேனிசை செல்லப்பா, புதுக்கோட்டைப் பாவாணன், கவிஞர் அறிவுமதி, வழக்குரைஞர் அருள்மொழி, மருத்துவர் தாயப்பன் அனைவரிடமும் அன்று மேடையில் பேசுவதற்கு ஒப்புதல் வாங்கிவிட்டார்.<br /><br />நான்கே நாள்கள் இடைவெளியில் நண்பர் சாகுல் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அந்தப் பரபரப்பு, காவல்துறையிடம் ஓர் எச்சரிகை உணர்வை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அதனால், நெடுமாறன் ஐயா எழுதியுள்ள ‘தமிழீழம் சிவக்கிறது’ என்னும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாகச் சொல்லி, ஏப்ரல் 12&ம் தேதி மாலையே, சாகுலைக் காவல் துறை யினர் கைது செய்து விட்டனர். ஏறத்தாழ 1,000 புத்தகங்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்ட நூல் அன்று. ஏற்றுமதி, இறக்குமதிக்கு சாகுலிடம் முறையான உரிமமும் உள்ளது. ஆனால், அது பற்றி யெல்லாம் கவலைகொள்ளாமல், அவரைக் கைது செய்துவிட்டனர்.<br /><br />அவரைக் கைது செய்துவிட்டால், விழா நடக்காது என்று அவர்கள் கருதியிருக்கலாம். விளைவு எதிர்மாறாக ஆகிவிட்டது.<br /><br />மாலை 4 மணிக்கே, அரங்குக்குக் கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. ஆறு மணியளவில் கூட்டம் தொடங்கிய போது, அந்த இடமே உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது.<br /> <br />அன்று காலைதான், ‘விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால், பொடா சட்டம் பாயும்’ என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஏறத்தாழ மூன்று மணி நேரம் மிகச் சிறப்பாகக் கூட்டம் நடந்தது. அன்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தற்காகவே நெடுமாறன் ஐயாவும், நானும் கைது செய்யப்பட்டுள்ளோம்.<br /><br />ஏப்ரல் 8&ம் தேதி, ஒரு உணவகத்தில் விழுந்த விதை, ஆகஸ்ட் மாதம் மரமாக வளர்ந்துவிட்டது. அதே நேரம், அந்தக் கூட்டம் ஒருவேளை நடக்காமல் இருந் திருப்பினும், வேறு ஒரு கூட்டத்தைக் காட்டி எங்களை அந்த அம்மையார் கைது செய்திருப்பார் என்பதே உண்மை.!<br /><br />இவ்வாறு பல்வேறு வகையான சிந்தனைகளில் மூழ்கியிருந்த நான், காவல் ஊர்தி பூந்தமல்லி நீதி மன்றம் வந்துவிட்டதை உணர்ந்து, எண்ணங்களிலிருந்து விடுபட்டேன்.<br /><br />நீதிமன்ற வாயிலில் என்னை எதிர்பார்த்து பரந்தாமன், திருச்சி சௌந்தரராசன், பத்மநாபன் முதலான இயக்கத் தோழர்கள் பலரும், என் அண்ணன் சுவாமி நாதன், என் மகன் இலெனின் ஆகியோரும் காத்திருந்தனர். எவரும் என்னை நெருங்குவதற்குக் காவல்துறை அனுமதிக்கவில்லை.<br /><br />ஏ.கே&47 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்னைச் சூழ்ந்து வர, நான் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். அந்தக் காட்சியைப் பார்ப்பவர் களுக்கு, ஏதோ கார்கில் போரி லிருந்து, அந்நிய நாட்டுப் படை வீரனை அழைத்து வருவது போலிருக்கும்.<br /><br />வழக்கைக் கேட்ட நீதிபதி, என்னை செப்டம்பர் 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ஆணையிட்டார். எங்கள் வழக்கறிஞர் புருசோத்தமன் கேட்டுக்கொண்ட தற்கிணங்க, மகனை மட்டும் அருகில் வந்து பேச அனுமதிக்குமாறு நீதிபதி கூறினார். விடைபெற்றேன். பெரியப்பா மூவரிடமும், அத்தை யிடமும், தம்பி பாரதிதாசனிடமும் செய்தியைக் கூறச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.<br /> <br />‘க்யூ’ பிரிவு அலுவலகத்தில் ஏமாற்றமடைந்த இதழியலாளர்கள், இங்கு சரியாக வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டனர். ‘‘சொல்லுங் கள், என்ன சொல்ல விரும்பு கிறீர்கள்?’’ என்று தொடர்ந்து கேட்டனர்.<br /> <br />ஓரிரு நிமிடங்களில் நிதானமாக நான் எண்ணியதைச் சொல்லி முடித்தேன்.<br /><br />‘‘அங்கும் போர் நடக்கவில்லை. இங்கும் கலவரம் ஏதுமில்லை. பிறகு ஏன் பொடா என்று தெரியவில்லை. இங்கே நடப்பது ஜெயலலிதா ஆட்சியா, சந்திரிகா ஆட்சியா என்றே சந்தேகம் வருகிறது. தமிழ் இங்கு கெட்ட வார்த்தையாகிவிட்டது. தமிழ் உணர் வாளர்களெல்லாம் இந்த அரசுக்குத் தீவிரவாதியாகத் தெரிகின்றனர். இந்நிலைமைகள் மாறியே தீரும். வரலாறு எங்களை விடுதலை செய்யும்’’ என்றேன்.<br /><br />என்னை ஏற்றிக்கொண்டு ஊர்தி நகர்ந்தது. இயக்கத் தோழர்கள் முழக்கம் எழுப்பினர்.<br /> <br />எந்தச் சிறைக்குக் கொண்டுசெல் கின்றனர் என்று தெரியவில்லை. அப்போது வைகோ வேலூரிலும், நெடுமாறன் ஐயா கடலூரிலும், கணேச மூர்த்தி மதுரையிலும், பாவாணன் கோவையிலுமாகப் பல்வேறு சிறை களில் இருந்தனர். ‘நமக்குப் பாளையங் கோட்டையோ என்னவோ?’ என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.<br /> <br />என் எண்ணத்துக்கு மாறாக, சென்னை நடுவண் சிறைக்கே என்னை அழைத்துச் சென்றனர்.<br /> <br />மதியம் 12.15 மணிக்கு நான் சிறைக்குள் நுழைந்தேன். நான் உள்ளே சென்றபின், அந்தப் பெரிய கதவுகள் அடித்து மூடப்பட்டன.<br /><br />அவை மீண்டும் திறக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்பது, எனக்கு அப்போது தெரியாது!<br /><br /> \ (தொடரும்) <br /><br />நன்றி: ஆனந்த விகடன்தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-19299135.post-48112768740423020012007-04-17T02:00:00.000-07:002007-04-17T02:27:52.195-07:00அது ஒரு பொடா காலம் - சுப. வீரபாண்டியன் -1<div><br /><br /><div>அது ஒரு பொடா காலம் - சுப. வீரபாண்டியன் -1 </div><div> </div><div><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhToKwCA2kqR140uv58wGvvghXmSfjVQh9il02NtWsoDZtRYRmv80UDd94on9ebQyu19GEYsykRbXD4tPyyj1weWjDN0TkkVcGIvX3iU1htcZ7WIe9kynACbQESpLcDpHgdNEEiuA/s1600-h/p189a.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5054326197942072434" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhToKwCA2kqR140uv58wGvvghXmSfjVQh9il02NtWsoDZtRYRmv80UDd94on9ebQyu19GEYsykRbXD4tPyyj1weWjDN0TkkVcGIvX3iU1htcZ7WIe9kynACbQESpLcDpHgdNEEiuA/s320/p189a.jpg" border="0" /></a>பேரா. சுப. வீரபாண்டியன் அவர்கள் ஆனந்த விகடன் இதழில் தனது பொடா சிறை அனுபவங்களை ‘அது ஒரு பொடா காலம்’ என்னும் தலைப்பில் தொடராக எழுத தொடங்கியுள்ளார்.<br /><br />அவரின் அனுபவ பதிவுகள் இங்கே நண்பர்களுக்காக..<br /><br /><br />அறியாதவர்களும் என்னை அறிந்து கொள்ளும் வகை செய்த ஜெயலலிதாவுக்கு!<br /><br />இரண்டாவது நன்றி & சிறையிலிருந்து மீட்டெடுத்து, மறுக்கப்பட்ட பேச்சுரிமையை மறுபடியும் வழங்கி, இப்போது பொடாவிலிருந்து முழுமையாகவே விடுவித்திருக்கும் கனிவு மிகுந்த கலைஞருக்கு!<br /><br /><br /><br />விகடனுக்கும் உங்களுக்கும் என் நன்றி எப்போதும்!<br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-p_SD3LSKKsuFdfTcBEeteqLoM_qP8tr8HryUfpzbrMSTN1Bc1pVEgEmBolVO9O2CM6H1yVb6H6UsAPzGk-z-mNBGQndCaJZ4qV2XhNA1RJXNda2LeLmjnfpby_gYMienFGCrHQ/s1600-h/p189.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5054325918769198178" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-p_SD3LSKKsuFdfTcBEeteqLoM_qP8tr8HryUfpzbrMSTN1Bc1pVEgEmBolVO9O2CM6H1yVb6H6UsAPzGk-z-mNBGQndCaJZ4qV2XhNA1RJXNda2LeLmjnfpby_gYMienFGCrHQ/s320/p189.jpg" border="0" /></a><br />இரவு 11.30 மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுக் கண்ணயரத் தொடங்கிய வேளையில், தொலை பேசி மணி ஒலித்தது.<br /><br />இரவில் காலந்தாழ்ந்து தொடர்புகொள்வதற்காக வருத்தம் தெரிவித்த அவர், சன் தொலைக்காட்சியின் நிருபர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.<br /><br />‘‘சொல்லுங்க... என்ன செய்தி?’’ என்று கேட்டேன்.<br /><br />‘‘ஒண்ணுமில்லே... ஒரு சின்ன கறுப்புக் கம்பி கேட்ல 28&ன்னு நம்பர் எழுதியிருக்கே, அதுதானே உங்க வீடு?’’ என்றார்.<br /><br />எனக்குள் ஒரு சின்ன வியப்பு. ‘‘நீங்க இப்போ எங்கேர்ந்து பேசுறீங்க?’’ என்றேன்.<br /><br />‘‘இதுதான் உங்க வீடுன்னா, உங்க வீட்டு வாசல்லயிருந்துதான்’’ என்றார்.<br /><br />என் வீடு வரை வந்தவர் உள்ளே வரவோ, என்னுடன் பேசவோ முயற்சிக்காமல், என் வீடு எது என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது & அதுவும் இந்த நள்ளிரவில் & ஏன் என்னும் வினா எனக்குள் எழுந்தது.<br /><br />அவரே அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தினார்... ‘‘நாளைக்கு அதிகாலையில் உங்களை பொடாவுல கைது செய்யப்போறாங்கன்னு ஒரு தகவல் கிடைச்சுது. அப்பிடி நடந்தா, அதை உடனே படமாக்குறதுக்குத் தான், இப்பவே உங்க வீட்டைப் பார்த்து வெச்சுக்கலாம்னு வந்தோம்’’ என்று விளக்கினார்.<br /><br />நான் அப்போது தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தேன். அவ்வியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் பத்துப் பன்னிரண்டு நாள்களுக்கு முன்பு (2002 ஆகஸ்ட்&1) பொடாவில் கைது செய்யப்பட்டதி லிருந்து, நானும் இயக்கத்தைச் சார்ந்த வேறு பொறுப்பாளர்கள் சிலரும் கைது செய்யப்படலாம் என்ற ஐயம் எல்லோருக்கும் இருந்தது. எனவே, தொலைக்காட்சி நண்பர் சொன்ன செய்தி, எனக்குள் பெரிய அதிர்ச்சி எதையும் ஏற்படுத்திவிடவில்லை.<br /><br />ஏற்கெனவே ஏழு முறை சிறை சென்ற அனுபவமும் இருக்கிறது. இருந்தாலும், ஒவ்வொரு சிறை வாழ்வும் ஒரு புதிய அனுபவம்!<br /><br />சற்றுப் புரண்டு படுத்த நான், மீண்டும் தொலைபேசியை எடுத்து, என் மூத்த மகன் இலெனினுக்குப் பேசினேன்.<br /><br />‘‘தம்பி, நாளைக்கு அதிகாலையில கொஞ்சம் வீட்டுக்கு வாப்பா!’’<br /><br />‘‘ஏம்ப்பா, என்ன விஷயம்?’’<br /><br />மெல்லிய குரலில், சற்று முன் வந்த தொலைபேசிச் செய்தியைச் சொல்லி முடித்தேன். ‘கிசுகிசு’ என்று மெதுவாகப் பேசும்போதுதான், அருகில் உள்ளவர்களுக்குச் சத்தமாகக் கேட்கும் என்பார்கள். முதலில் உரத் துப் பேசியபோது, நன்றாக உறங்கிக் கொண்டு இருந்த என் மனைவியும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த என் மகள் இந்துவும் இப்போது விழித்துக்கொண்டனர்.<br /><br />‘‘என்ன.. என்ன..?’’ &அவர்கள் குரலில் பதற்றம்! இனி மறைத்துப் பயனில்லை என்று கருதி, செய்தியை மெள்ள மெள்ள எடுத்துச் சொன்னேன்.<br /><br />‘‘என்னங்க இது... அமெரிக்காவில் இருந்து பொண்ணைப் பிரசவத்துக்குக் கூட்டிட்டு வந்திட்டு, இப்ப நீங்கபாட்டுக்கு ஜெயிலுக்குப் போயிட்டா, நான் ஒருத்தியா என்ன செய்யமுடியும்?’’ & மனைவியின் குரல் உடைந்து வெளிப்பட்டது.<br /><br />‘‘பெரியவனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்கலே. சின்னவனுக்குப் படிப்பு, ஹாஸ்டலுக்குப் பணம் அனுப்பணும். இருந்த வேலையையும் விட்டுட்டீங்க. பென்ஷனை மட்டும் வெச்சுக் கிட்டு எப்படிச் சமாளிக்கிறது?’’ என்று பொருளாதாரச் சிக்கல்களும் வெளிப்பட்டன.<br /><br />‘‘தைரியமா இரு! நண்பர்கள் இருக்காங்க... அண்ணன்லாம் இருக்காங்க... பார்த்துக்குவாங்க!’’ என்று ஆறுதல் சொன்னேன். பிறகு பல செய்திகள் குறித்தும் பேசி முடித்து, நாங்கள் தூங்கியபோது, இரவு மணி இரண்டைத் தாண்டிவிட்டது.<br /><br />அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம். அழைப்பு மணி எழுப்பியது. காவல் துறையினர்தான் என்று எண்ணிக் கதவைத் திறந்தபோது, மகன் இலெனின் நின்றிருந்தான்.<br /><br />‘‘நம்ம தெரு முனையில கல்யாணி மண்டபத்துக்கிட்ட ரெண்டு டி.வி. வேன் மட்டும் நிக்குதப்பா!’’ என்றான்.<br /><br />விரைந்து இயங்கி, குளித்து முடித்து, ஒரு பெட்டியில் தேவையான துணிகளையும், சில புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, சிறைப் பயணத்துக்குத் தயாரானேன்.<br /><br />ஆறு, ஏழு, எட்டு மணியாகிவிட்டது. ஒருவரும் வரவில்லை. ‘‘நேத்து ராத்திரி வந்த செய்தி வதந்தியா இருக்குமோ?’’ என்றாள் இந்து. வதந்தியாக இருந்து விட வேண்டும் என்பது அவள் விருப்பம். மெள்ளச் சிரித்தபடி, ‘‘உண்மையா இருக்கத்தான் வாய்ப்பு அதிகம், பாக்கலாம்’’ என்றேன். இறுதியில் அது வதந்தியாகத்தான் போய்விட்டது. ஒன்பது மணி வரை காத்திருந்துவிட்டு தொலைக்காட்சி நண்பர்களும் ‘ஒருவிதமான விரக்தி யோடு’ விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.<br /><br />நானும் மயிலாப்பூர் ‘தென் செய்தி’ அலுவலகத்துக்குப் புறப்பட்டேன்.<br /><br />நானும் நெடுமாறன் ஐயாவின் மகள் உமாவும் சேர்ந்து, செய்தித் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டோம். கைது, அது குறித்த கண்டனங்கள், இயக்கம் நடத்தவிருக்கும் எதிர்வினை கள் என எல்லாவற்றையும் தொகுத்துக் கொண்டு இருந்தோம்.<br /><br />ஐயா கைது செய்யப்பட்ட சில தினங்களிலேயே, மாநிலம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்களைச் சென் னைக்கு வரவழைத்துக் கூட்டத்தை நடத்தினோம். கூட்ட முடிவில், ‘‘உங்கள் தலைவரைப் பொடாவில் கைது செய்துவிட்ட இன்றைய நிலையில், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?’’ என்று இதழாளர்கள் கேட்டபோது, ‘‘அவர்கள் அம்மண்ணின், மக்களின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை நாங்கள் எப்போதும் ஆதரிப் போம்’’ என்று உறுதிப்படக் கூறினோம். ஏறத்தாழ அப்போதே எங்கள் சிறைப் பயணம் முடிவாகிவிட்டது.<br /><br />ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, ‘‘தொலைக்காட்சியைப் பாருங்கள், ஒரு அதிர்ச்சியான செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது’’ என்றார். ‘தமிழர் தேசிய இயக்கத்தைத் தமிழக அரசு தடை செய்துள்ளது’ என்பதே அச்செய்தி!<br /><br />அடுத்து என்ன நடக்கும், யார் யாரெல்லாம் கைது செய்யப்படுவார்கள், அலுவலகம் இயங்க அனுமதிப் பார்களா என ஆயிரம் வினாக்கள் எழுந்தன. எங்கள் வழக்குரைஞர் சந்துருவைத் தொடர்புகொண்டு, பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன். தடையைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டேன்.<br /><br />தமிழர் தேசிய இயக்கம், 1908&ம் ஆண்டுக் குற்றவியல் திருத்தச் சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டிருந்தது. காந்தியடிகள் எதிர்த்துப் போராடிய சட்டங்களில் ஒன்று அது. அதன்கீழ் 1950&ம் ஆண்டு மக்கள் கல்வி இயக்கம் (றிமீஷீஜீறீமீs ணிபீuநீணீtவீஸ்மீ ஷிஷீநீவீமீtஹ்) எனும் ஓர் அமைப்பு மட்டுமே தடை செய்யப் பட்டது. அந்தத் தடையை எதிர்த்து, அவ்வமைப்பின் நிறுவனர் வி.ஜி.ராவ் நீதிமன்றம் சென்றார். தடை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதற்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகளில் அல்&amp;amp;உம்மாவும், தமிழ்த் தேசிய இயக்கமும்தான் தடை செய்யப்பட்டுள்ளன. மேற்காணும் விவரங்களையெல்லாம் என் அறிக்கையில் கூறியிருந்ததோடு, தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்றும் அறிவித்திருந்தேன்.<br /><br />அடுத்த நாள், இந்திய விடுதலை நாளையட்டிக் கோட்டையில் கொடி ஏற்றிய முதல்வர், தமிழின உணர்வாளர்களுக்கு மறைமுகமாகச் சில எச்சரிக்கைகளை விடுத்தார். அவர் உரையில், ‘‘மொழி, இன, வட்டார உணர்வு என்ற போர்வையில், சில சக்திகள் தலைதூக்க முற்பட் டுள்ளன. அந்தப் பிற்போக்குச் சக்திகளுக்குப் பாடம் புகட்ட, இங்கே தடந்தோள்கள் உண்டு’’ என்று குறிப் பிட்டிருந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடுதலை நாள் உரை, அடுத்தடுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்பதையே உணர்த்தியது.<br /><br />தென்செய்தி வேலையை முடித்து விட்டு தியாகராய நகரில் அறை எடுத்துத் தங்கியிருந்த, இயக்கத்தின் இன்னொரு பொதுச் செயலாளர் பரந்தாமனைச் சந்தித்தேன். அடுத்து இயக்கத்தை எப்படிக் கொண்டு செல்வது என்று குறித்து உரையாடினோம்.<br /><br />‘‘நாளை காலையில் கடலூருக்குப் போய், சிறையில் தலைவரைச் சந்திச்சு அவருடைய யோசனைகளைக் கேட்டுக்கிட்டுப் பிறகு எல்லாத்தையும் முடிவு செய்யலாம்’’ என்றார் பரந்தாமன். எனக்கும் அதுவே சரி என்றுபட்டது.<br /><br />அடுத்த நாள் (16.08.02) அதிகாலையிலேயே எழுந்து, கடலூர் புறப்படத் தயாரானேன். ‘‘தேநீராவது குடிச்சுட்டுப் போங்க’’ என்று மனைவி சொல்ல, ‘சரி’ என்று சொல்லிக் காத்திருந்தேன்.<br /><br />சரியாகக் காலை 6.10&க்கு அழைப்பு மணி ஒலித்தது.<br /><br />கதவைத் திறந்தால்...<br /><br />காக்கிச் சட்டைப் பட்டாளமே காத்திருந்தது.<br /><br />துப்பாக்கி ஏந்திய, துப்பாக்கி ஏந்தாத, சீருடை அணிந்த, சீருடை அணியாத, ஆண், பெண் காவலர்கள் பலரும் நின்றிருந்தனர். என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற ஆணையோடு காவல்துறை அதிகாரி யும் பிறரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.<br /><br />பொடாவின் அழைப்பைப் புன்னகையோடு வரவேற்றேன்!</div></div>தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19299135.post-17276128870454561202007-04-03T05:39:00.000-07:002007-04-03T05:40:45.336-07:00பொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலைபொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை<br /><br />பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து இன்று பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது. <br /><br />இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. <br /><br />கடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13-ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது. <br /><br />அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர். <br /><br />பின்னர் பிணையில் வெளிவந்த பிறகும், பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை பற்றி பேசக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன. <br /><br />இந்த நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது. <br /><br />அம்மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது. <br /><br />பின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார். <br /><br />அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், இன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. <br /><br />-சசிதமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19299135.post-77839053168072976182007-03-16T04:49:00.000-07:002007-03-16T04:52:26.784-07:00போய்விட்டனவா பொடாவும் தடாவும்?போய்விட்டனவா பொடாவும் தடாவும்?<br />சுப.வீ.<br /><br />தடா, பொடா சட்டங்களெல்லாம் போய்விட்டன என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சட்டங்களின் கீழ் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் இன்னும் நடந்து கொண்டுதான் உள்ளன. அதைக்காட்டிலும் கொடுமையான செய்தி, அச் சட்டங்களின் கீழ்க் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் சிறைகளில்தான் உள்ளனர் என்பதாகும்.<br /><br />வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட பலர் சிறைகளில் இருந்தபோது, அவர்களைப் பற்றிய செய்திகளையேனும் நாளேடுகளும், தொலைக் காட்சிகளும் வெளியிட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் பிணையில் வெளிவந்த பின்பு, தமிழகத்தில் பொடாவின் கீழ்க் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலையாகி விட்டனர் என்பது போன்ற ஓர் உணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் தருமபுரியில் கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் இன்றுவரை சிறையில்தான் உள்ளனர்.<br /><br />18 வயது கூட நிரம்பாதவர்கள் என்னும் அடிப்படையில், பிரபாகரன், பகத்சிங் என்னும் இரண்டு சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களைத் தவிர பெண் தோழர்கள் அறுவர் பிணையில் வெளிவந்தனர். மற்றபடி இருபதுக்கும் மேற்பட்ட தருமபுரித் தோழர்களுக்கு பிணை கூட வழங்கப்படவில்லை. முழுமையாக 3 ஆண்டுகளை, விசாரணைக் கைதிகளாகவே அவர்கள் சிறையில் கழித்துள்ளனர்.<br /><br />பிணையில் வெளிவந்துள்ள பெண்களும், தினந்தோறும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்னும் நிபந்தனைக்கு உட்பட்டே வெளியில் உள்ளனர். ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த வெளியூர்ப் பெண்களான அவர்கள், சென்னையில் தங்கி தினமும் காலையில் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.<br /><br />வயதில் பொடாவிற்கு மூத்த தடாவின் நிலைமையும் இவ்வாறுதான் உள்ளது. தடாவில் கைது செய்யப்பட்ட இசுலாமியத் தோழர்கள் பலர் ஆண்டுகள் பலவாய் சிறையில் இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 250க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் மீது 35 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவை 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. பிணையும் வழங்கப்படாமல், வழக்கும் நடத்தி முடிக்கப்படாமல் 12 ஆண்டுகளாக இவர்கள் சிறையாளிகளாக உள்ளனர்.<br /><br />மதக்கலவரம், தீவிரவாதம் என்னும் அடிப்படையில் இவர்களின் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மதக்கலவரம் என்றால், அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதுதானே பொருள். அவ்வாறாயின், ஒரு மதத்தினர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பது என்ன நியாயம்? மற்ற வகுப்பில் ஒருவர் கூட தவறே செய்யவில்லை என்று சொல்ல முடியுமா?<br /><br />உள்ளே இருக்கும் சிறையாளிகளின் சிலர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டால் கூட, அது 10 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும் என்று வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர்களோ 12 ஆண்டுகளாக உள்ளே இருப்பதோடு மட்டுமல்லாமல், வழக்குகள் எப்போது முடியும் என்பது கூட தெரியாத நிலையில் உள்ளனர். திசைதெரியாத இருட்டில் அவர்கள் வாழ்க்கை உள்ளே நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் குடும்பத்தினர் வெளியே தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.<br /><br />தடாவும் பொடாவும் உண்மையாகவே நீக்கப்படும் காலம் எப்போது வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-19299135.post-89846307169038266762007-03-16T04:32:00.000-07:002007-03-16T04:39:02.141-07:00திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்க விழா<div><br /><br /><div><br /><br /><br /><div><br /><br /><br /><br /><div>திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் 22-01-2007 மாலை நடைபெற்றது <img id="BLOGGER_PHOTO_ID_5042484290038370914" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeb0d2K959oaBMKhZIBMq_TUdH8P7pWzuPg4dcvO30vcB7djtHmoUTCRA1nZi6dqoiwX-6nAZKgS0XLHCKmdQELBG35FEIvUhv9IY252puaPhE2EZvdGfP71PPBucv75gASlQTnw/s320/children.jpg" border="0" /><br />பல்லடம் தாய்த் தமிழ் பள்ளி சிறார்களின் கலைநிகழ்ச்சி </div><img id="BLOGGER_PHOTO_ID_5042484092469875282" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhudZO67J3i0fbWuz87_AjGS6At1PZ7SivyGIQX0GHQNqquDMUhSuGwzaX5xwQTkpXrcznnfe63i2yC-_jVYhvGvGxQo9wDfyE_ypUz27pckx49mM6teM70GMUNG0KQT5S1YN2uhQ/s320/stage.jpg" border="0" /><br /><div><br />தொடக்க விழா : (இடமிருந்து வலம்) திரைப்பட இயக்குனர் செல்வபாரதி, அதியமான், கயல் தினகரன், பேரா. அன்பழகன் - நிதியமைச்சர், தமிழ்நாடு அரசு, நடிகர் சத்தியராஜ், திரைப்பட இயக்குனர் சீமான், நக்கிரன் ஆசிரியர் கோபால், தீரு. சுப.வீரபாண்டியன் - தலைவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை. <img id="BLOGGER_PHOTO_ID_5042485037362680450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKf9JWQjhK0bRHca7bENYn8Daqe0EWD_mPWdyMY4aW9-SE8H56Q-mo1pzaBIsTwJVBHrXxdXrnn8AjdGaihQGcVYi8dK7aKrLcETkls7mrSVMb71n9UnCLhbqvtD2SErpZnbDH2Q/s320/memento.jpg" border="0" /><br />புத்தக நினைவு பரிசு</div><br /><div></div><img id="BLOGGER_PHOTO_ID_5042484547736408690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" height="88" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjklo3VuArewIttVeYmnMSePZvR5fg3VoVtMAqHwzkYwvJk9cHkPeK-qQGpj2x5CR7dJs7J4CMqiKYR7Ismm5eGEOgqzYjQ6ouB9whWH1doP1x7pIDmAbJ7s-ov_MpRUMgFk-YbA/s320/audience.jpg" width="367" border="0" /><br />கலைவாணா அரங்கம் நிரம்பி வழிந்த கூட்டம்.</div></div></div>தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-19299135.post-1167564312855417192006-12-31T03:15:00.000-08:002006-12-31T03:25:12.876-08:00ஆங்கிலத்தை முழுமையாகப் புறக்கணிக்கும் நிலைக்கு நாம் இன்னும் வந்துவிடவில்லை<br /><br />சுப. வீரபாண்டியன்<br /><br />அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படும் சுப. வீரபாண்டியன்.<br /><br />உண்மைதான். அதற்காக தலித் அரசியல் போன்றவைகளை மறுக்க முடியாது. காரணம் இந்த ஒடுக்குமுறை பிறப்பின் அடிப்படையில், சாதியின் அடிப்படையிலான ஒடுக்குமுறை என்பது இந்தியா முழுமைக்கும் பொதுப்படையாகவே இருக்கிறது. எனவே அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எதிர்ப்பு என்பதும் ஒரு பொதுத் தன்மையோடு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அம்பேத்காரை மராட்டியத்தில் பிறந்தவர் என்று ஒதுக்கி விட முடியாது. பூலேயும் மராட்டியத்தை சார்ந்தவர் என்று ஒதுக்கி விட முடியாது. சாகுமகராஜ், அம்பேத்கர், பூலே போன்றவர்கள் மராட்டியத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள்.பார்ப்பன ஆதிக்கமும் மராட்டியத்திலேதான் துளிர்த்தது. சித்பவன் பார்ப்பனர்கள் தான் இந்தியாவின் அரசியலை நெடுகவே கையாண்டு வந்து இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.ன் தோற்றம் மராட்டியத்தில்தான் இருக்கிறது. திலகரிலிருந்து அது தொடங்குகிறது. வீரசவார்க்கரின் வழியில் வருகிறது. ஹெட்சுவாரிடமிருந்து அது தோற்றம் பெறுகிறது. எனவே இந்த ஒடுக்குமுறை என்பது பொதுவாக இருக்கிறபோது அதற்கான எதிர்ப்பு என்பதும் பொதுத்தன்மை உடையதாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் இதனை இந்திய தன்மை கொண்டதாகவே கொண்டு போக வேண்டும் என்ற தேவை இல்லை.<br /><br />எதிர்ப்பில் ஒரு பொதுத்தன்மை இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒடுக்குமுறைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. தலித்திய சாதிகளுக்குள்ளும் வேறுபாடுகள் இருக்கின்றன. அம்பேத்கர் பிறந்த மகர் என்ற சாதி இங்கே இல்லை. இங்கே இருக்கிற சாதிகளின் பெயர்கள், தன்மைகள் வேறாக இருக்கின்றன. ஆகையால் இந்த தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவகையில் அந்தத் தலித்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை எடுத்துச் செல்வது சரியாக இருக்கும்.<br /><br />தலித் என்ற சொல்லுக்கு தமிழில் பொருள் என்ன?<br /><br />தலித் என்பது மராட்டியச் சொல், தலித் என்றால் மண்ணின் மைந்தன் என்று குறிப்பிடுகிறார்கள் சிலர். எனக்கு சரியான பொருள் விளங்கவில்லை. இது அம்பேத்கரிடம் வந்த சொல் என்றும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அம்பேத்கர் இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அம்பேத்கர் அட்டவணைச் சாதி, தீண்டப்படாதவர்கள், ஒடுக்கப்பட்டோர் என்ற சொற்களைத்தான் பயன்படுத்துகிறார். பின்னால்தான் இந்த சொல் வந்திருக்கிறது. அந்த சொல்லின் சுருக்கம் கருதி இந்தியா முழுவதும் புகழ் பெற்றுவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. நாம் தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்ற சொல்லைத்தான், நீண்ட சொல்லாக இருந்தாலும் பயன்படுத்துகிறோம். அல்லது மண்ணின் மைந்தர்கள் என்று பயன்படுத்தலாம். ஆதி திராவிடர் என்ற சொல் இருக்கிறது. இனி ஆதி தமிழர்கள் என்ற சொல்லை பயன்படுத்தலாம்.<br /><br />திராவிடம் என்ற சொல் இனி வேண்டாம் என்று கருதுகிறீர்களா?<br /><br />பொதுவாக என்னைப் பொறுத்தவரை நான் அரசியல் தளங்களில் தமிழன் என்ற சொல்லை கூடுதலாகவும் சமூக நீதி தளங்களில் திராவிடன் என்ற சொல்லை கூடுதலாகவும் பயன்படுத்துகிறேன். திராவிடம் என்ற சொல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மக்களை உள்ளடக்கியதாக நான் கருதவில்லை. அவர்கள் யாரும் தங்களை திராவிடன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. திராவிடன் என்ற சொல்லே பார்ப்பனீய கருத்து நிலைக்கு எதிரான ஒரு போர்க் குணம் கொண்ட சொல்லாக இருக்கிறது. திராவிடம் தான் இந்த மண்ணில் பார்ப்பனீயத்தை எதிர்த்து இந்த நூற்றாண்டில் எழுந்த முதல் குரல் என்பது என் கருத்து.<br /><br />சித்தர்களின் காலத்திலிருந்து அந்தப் பார்ப்பனீயர் எதிர்ப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தைத் தேடிப் பார்த்தால் கூட இருக்கிறது. அது ஒரு இயக்கமாகக் கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. வள்ளலாரிடமும் அடிகளாரிடமும் பார்ப்பன எதிர்ப்பு இருந்த போதிலும் கூட அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து கட்டமைத்த பெருமை திராவிடத்திற்கு உண்டு. அதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் உருவாகி விட்டாலும் கால்டுவெல் காலத்திலிருந்து ஒரு பாரம்பரியமான வரலாற்று தொடர்ச்சியிருந்தாலும் பார்ப்பனீய எதிர்ப்பை கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. எனவே திராவிடம் என்ற சொல் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைச் சொல்லாகவே பயன்படுத்த வேண்டும்.<br /><br />இராகவ அய்யங்கார், கோபால அய்யர் போன்ற தமிழறிஞர்களின் பங்கை என்னவென்று சொல்வீர்கள்?<br /><br />தமிழ்மொழியின் முன்னேற்றத்தில், இனத்தின் முன்னேற்றத்தில் கூட பார்ப்பனர்களின் பங்கு இருப்பதை மறுக்கவில்லை. எப்போதும் விதியை வைத்துத்தான் நாம் பேச முடியுமே தவிர விதி விலக்கை வைத்து அல்ல. எத்தனை பார்ப்பன அறிஞர்கள் அப்படிப் பாடுபட்டார்கள்? திரும்பத் திரும்ப உ.வே. சாமிநாதய்யரைப் பற்றிச் சொல்வார்கள். உ.வே.சாவுக்கு முன்பு பதிப்புத்துறையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த நாவலரும், சி.வை. தாமோதரம் பிள்ளையும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். அந்த வரலாறு மெதுவாக மறைக்கப்படுகிறது. உ.வே.சா. பதிப்பாசிரியர் என்பது உண்மைதான். ஆனால் இறுதி வரையில் அவர் பார்ப்பனீயக் கருத்துக்களை விடாதவராகவே இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களையும் தாண்டி இலக்கியத்துறையில் மட்டுமில்லாமல் பகுத்தறிவுத் துறையில் A.S.K. அய்யங்கார் போன்றவர்கள் இருந்து இருக்கிறார்கள். விதிவிலக்குகளை வைத்துக் கொண்டு விதிகளை வகுக்க முடியாது.<br /><br />வேத மொழி சமஸ்கிருதம்தான் என்று கருதுவதோடு இன்னமும் அவர்கள் தங்களுடைய தாய்மொழி சமஸ்கிருதம் என்கிற மனோ நிலையிலிருந்து விடுபடவில்லை.<br /><br />ஆங்கிலக் கல்வியைப் புறக்கணித்தால் பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்து முன்னேறி விடுவார்கள் என்று பெரியார் எச்சரிக்கை செய்து இருக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் தமிழ்க் கல்வி வலியுறுத்தப்படுகிறதே...<br />அன்றைய பெரியாரின் எச்சரிக்கை என்பது மிகுந்த கவனத்துக்குரியது. பெரியார் தமிழைப் பற்றிக் கவலைப்பட்டதை காட்டிலும், தமிழனைப் பற்றிக் கூடுதலாகக் கவலைப்பட்டார். தமிழனின் முன்னேற்றத்திற்குத் தடையாக தமிழாகவே இருந்தாலும் பெரியார் அதனை எதிர்த்து இருக்கிறார். எனவே தமிழன் முன்னேற வேண்டும் என்ற வேட்கையில்தான் அவர் ஆங்கிலம் படிபடி என்று திரும்பத் திரும்ப சொன்னார். அவருடைய பழக்கம் ‘ஓங்கிச் சொல்லுதல்’. கொஞ்சம் ஓங்கிச் சொன்னால்தான் பத்துக்கு நாலு பழுதில்லாமல் போகும் என்று கருதினார்.<br /><br />எனக்குத் தமிழ் மீது எந்த விரோதமும் இல்லை. நான் தமிழில்தான் பேசுகிறேன். தமிழில்தான் எழுதுகிறேன். எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். நான் தமிழ் மக்களுக்காகத்தான் பேசுகிறேன். அதை அறிவியல் மொழி ஆக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும் சொல்கிறேனே தவிர எனக்கு வேற ஒன்றும் கோபம் இல்லை என்று பெரியாரே எழுதி இருக்கிறார். ஆகையால் அன்றைக்கு அவர் சொன்ன அந்தச் சூழலில் நிச்சயமாக 60 களிலும் 70 களிலும் ஆங்கிலம் கற்காமல் தமிழர்கள் இருந்து இருந்தால் பார்ப்பனர்கள் மட்டுமே முன்னேறி இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. இன்றைக்குச் சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது.<br /><br />இன்றைக்குக் கணிப்பொறி மொழி என்பது தமிழும் அல்ல. ஆங்கிலமும் அல்ல. எந்த மொழியும் அல்லாமல் தனி மொழியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே இன்றைக்கு நாம் பல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கி இருக்கிறோம். ஆகையினால் ஆங்கிலம் படித்தால்தான் முன்னேற முடியும் என்ற நிலையிலிருந்து மாற்றமில்லை. ஆனால் ஆங்கிலத்தை புறக்கணித்து விடுகிற நிலைக்கு நாம் முன்னேறி விடவில்லை என்பதையும் ஏற்க வேண்டும்.<br /><br />தமிழ்நாட்டில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில், நீதிமன்றங்களில், வழிபாட்டுத் தலங்களில், இசை அரங்குகளில் அனைத்தும் தமிழே இருக்க வேண்டும். அதற்காகப் போராட வேண்டும். அதே நேரத்தில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்றுக் கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இன்னமும் இருக்கிறது.<br /><br />தேசியம் என்பது கற்பிதமா?<br /><br />தேசியம் என்பதே ஒரு கற்பிதம்தான் என்று தோழர் அ. மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த நூலில் கூட ஒரு இடத்தில் அது தேவையான கற்பிதம் தான் என்று கூறுகிறார். நீங்கள் கற்பிதம் என்று எடுத்துக் கொண்டால் குடும்பம் கூட கற்பிதம்தான். இயற்கையின் விளைபொருளல்ல. எந்த மனிதனும் குடும்பத்தினுடைய உள் அடக்கத்தோடு இயற்கையின் விளைபொருளாக உருவாக வில்லை. எந்தக் கற்பிதமும் இல்லாமல் இயற்கையாகவே இந்த உலகம் அமைய வேண்டும் என்றால் மீண்டும் குகைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் நேரும்.<br /><br />கற்பிதங்கள் சில நேரங்களில் ஒழுங்கமைவுகளாகின்றன. புது ஒழுங்குக்காகச் சில தேவைகள் ஏற்படுகின்றன. அதிலும் மொழி எந்த விதத்திலும் கற்பிதம் அல்ல. அது இயற்கையின் விளை பொருள். எனவே மொழி சார்ந்த, மொழியின் அடிப்படையில் கட்டப்படுகிற ஒரு தேசியம் என்பது ஒரு ஒழுங்கமைவாகவும், தேவையாகவும் சரித்திரத்தில் சரியானதாகவும் இருக்கும்.<br /><br />தேசியம் என்பது முதலாளித்துவ கருத்தின் வெளிப்பாடு என்கிற எண்ணமும் பலருக்கு இருக்கிறது. தமிழ்த் தேசிய சிந்தனைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய இலக்கியங்களிலே இருக்கின்றன. ஆனால் பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகுதான் ஐரோப்பிய நாடுகளில் அப்படி ஒரு வடிவம் உருவானது. என் கருத்தில், குழந்தை எப்போதோ பிறந்து விட்டது, பெயர் வைப்பதற்கு 19 நூற்றாண்டுகள் ஆகி இருக்கலாம். ஆகையால் அது அப்படியே முதலாளித்துவத்தின் இறக்குமதி என்று நாம் கொள்ள வேண்டியதில்லை. இருந்தாலும் பிழை இல்லை. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு அந்தச் சிந்தனை வந்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வந்த எவ்வளவோ நல்ல விஷயங்களை நாம் பயன்படுத்தி இருக்கிறோம். தேசியம் என்பது அப்படிப்பட்ட நல்ல தேவையானவைகளில் ஒன்று.<br /><br />தமிழ்த் தேசியம் என்பது....<br /><br />தேசியங்களில் பல வகைகள் இருக்கின்றன. மதவழித் தேசியம், நிலவழித் தேசியம் மொழி வழித் தேசியம் எல்லா வழித்தேசியமும் உலகில் இருக்கின்றன. பாகிஸ்தான் மதவழி தேசியமாகத்தான் பிரிந்து போனது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் ஏன் பிரிந்து போனது என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும் இஸ்லாமியர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் அங்கு மதவழி தேசியம் தோற்றது. எல்லோருக்கும் மதம் ஒன்றாக இருந்தாலும் உங்கள் மொழி வேறு. எங்கள் மொழிவேறு என்றுதான் முஜிபுர் ரகுமான் எழுந்தார். எனவே அங்கு மதவழித் தேசியத்தை மொழிவழித் தேசியம் வென்றது.<br /><br />பொதுவாக நிலவழித் தேசியம்தான் சரி அல்லது மொழிவழித் தேசியம்தான் சரி என்று நான் குறிப்பிடவில்லை. மொழிவழித் தேசியம் தான் பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது என்று நான் கருதினாலும் ஒரு மொழிக்கு ஒரு நாடு என்று ஆதித்தனார் சொன்னதைப் போல உலகத்தை எளிதாக வரையறுத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு மதத்துக்கு ஒரு நாடு என்றால் பத்து நாடுகள் தாம் இருக்க முடியும். நிலத் தொடர்ச்சியை ஒட்டி நாடுகள் பிரிக்கப்படால் ஐந்து அல்லது ஏழு நாடுகள்தான் பிரிக்க முடியும். மொழிக்கு ஒரு நாடு என்றால் குறைந்தபட்சம் ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடுகள் உருவாகும். ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடுகள் உருவாவதில் நமக்கு மறுப்பு இல்லை. அதற்கான காலம் தொலைவில் இருக்கிறது.<br /><br />ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம். இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்.<br /><br />தமிழ்த் தேசியம் எந்த மாதிரி கட்டமைக்கப்பட வேண்டும்?<br /><br />ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படும்போது அங்குச் சாதி செத்துப் போகும். வர்க்க அடிப்படையிலும், பால் அடிப்படையிலும், சமத்துவமும், சாதி அற்ற சமூகமான ஒரு தமிழ்த் தேசியமே நாம் விரும்புகிற கட்டமைப்பு.<br />இந்திய தேசியம் என்பது இந்துத்துவ தேசியம் என்ற கருத்து உண்டு. தமிழ்த் தேசியத்திற்கு எதை முன் மாதிரியாக வைத்துக் கொள்கிறீர்கள்....<br />இந்தி தேசிய இனம்தான் நம்மை ஒடுக்குகிறது என்கிற கருத்து இருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தேசியம் இனம் ஒடுக்கும் இனமாகவும், தமிழ் இனம் ஒடுக்கப்படுகிற இனமாகவும் இலங்கையில் இருப்பதைப் போல இங்கே இல்லை. இங்கே கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை structural oppression இருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். எனவே தமிழ்த் தேசிய விடுதலை என்பது இந்துத்துவ பார்ப்பனீயத்திற்கு எதிரான ஒரு இலக்கைக் கொண்டதாக இருக்க வேண்டும்.<br /><br />தமிழ்ச் சமூகம் சாதிய சமூகமாக பிரிந்து கிடக்கிறது. சாதியை எதிர்க்காமல் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க முடியாது. எனவே முதல் பகை சாதியியம். இன்னொரு பகை ஆணாதிக்கம். இப்பின்புலத்தில் இரண்டு இலக்குகள் உள்ளன. ஒன்று இந்திய இந்துத்துவ தேசியம். இன்னொன்று விரைந்து வளர்ந்து கொண்டிருக்கிற உலகமயமாக்கல். உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார் மயமாதல் போன்றவை தேசிய இனங்களை அழிக்க புறப்பட்டு இருக்கிற எதிர் பகைகள்.<br />இந்திய இந்துத்துவ தேசியத்தையும் உலக மயமாக்கலையும் எதிர்க்க வேண்டியது தமிழ் தேசியத்தின் அடிப்படை. இவைகளை எதிர்த்துக் கட்டமைக்கப்பட இருக்கிற தமிழ்த்தேசியம் எதனையும் முன் மாதிரியாகக் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதல்ல. உலகில் பல தேசியங்கள் சரியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை சாதிகளற்ற, பால்வேறுபாடு இல்லாத, வர்க்க வேறுபாடு இல்லாத உலகமயமாக்கலிருந்த விடுபட்டு நிற்கிற ஒரு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க வேண்டும்.<br /><br />தமிழ்த் தேசியத்தில் வழிபாடு, சமயம் போன்றவைகள் இருக்குமா?<br /><br />சமயம் வழிபாடு போன்றவைகள் தனிமனித நம்பிக்கைகளையும், தனி மனித அனுபவங்களையும், தனி மனித உரிமைகளையும் சார்ந்தவை. ஒரு அரசு அதில் தலையிட வேண்டியதில்லை. ஒரு அரசுக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் பகுத்தறிவாளர்களாகவோ, கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவோதான் இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. அது அவரவர் தனிப்பட்ட விஷயம். லெனின் சொன்தைப் போல it is a private affair. ஆனால் எந்த விதத்திலும், எந்த மதத்திற்கும் அரசு ஊக்கமளிக்க வேண்டியதில்லை. எல்லா மதத்திற்கும் சார்பாக ஒரு அரசு இருக்கிறது என்பதுதான் secular என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த மதத்தையும் சாராமல் இருப்பது என்பதே சரி. எல்லாருக்கும் பொதுவானது என்பது எல்லோருக்கும் ஊக்கமளிப்பது ஆகும். அது அரசினுடைய வேலை அல்ல.<br />எந்த மதத்தையும் சாராமல், எந்த மதத்திற்கும் சலுகை காட்டாமல் எந்த மதத்தினுடைய விழாவையும் அரசு அங்கீகரிக்காமல் அது அந்த அந்த மதத்தின் அந்த அந்த மனிதர்களின் தனிப்பட்டவை என்று தலையிடாமல் இருக்கலாமே தவிர அதை ஆதரிக்க முடியாது. எனவே சமயம் வழிபாடு ஆகியவைகளைத் தமிழ்த் தேசியம் ஊக்குவிக்காது. தலையிடாது.<br /><br />அம்பேத்கர் மதத்துக்குள் சமரசத்தை தேடினார். அதுபோலவே தமிழ்த் தேசியம் இருக்கிறதே?<br /><br />நான் குறிப்பிடுகிற தமிழ் தேசியம் சமரசமானது அல்ல. நான் எல்லா மதத்தையும் ஏற்றுக் கொண்டே மதத்துக்குள் சீர்திருத்தம் என்றோ வரவில்லை. தமிழ் தேசியம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது. தனிப்பட்ட நம்பிக்கைகளில் தலையிடாது என்பதுதானே தவிர அது சமரசம் இல்லை. தனிப்பட்ட நபர்களின் உரிமையை போற்றுகிற செயல். அதைத் தவிர எந்த விதமான சமரசமான தமிழ்த் தேசியத்தையும் முன் வைக்கவில்லை.<br />அம்பேத்கர் சமரசம் செய்து கொண்டார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்துத்துவத்தை எந்தச் சமரசமும் இல்லாமல் அவர் எதிர்த்தார் என்பதுதான் உண்மை. அவர் பௌத்த மார்கத்திற்கு மாறியது சமரசம் அல்ல. பௌத்தம் என்பது மதம் அல்ல. மார்க்கம் என்பதை உணர்ந்தார். அது மனித வாழ்க்கைக்கு தேவையான அறிவு மார்க்கம் என்று கருதினார். உண்மையில் புத்தன் சொன்ன நெறிகள் அத்தகையானவைதான். பிறகு நாகார்ஜூனன் என்ற பார்ப்பனன் உள்ளே நுழைந்த பிறகு அது இந்து மயமாக்கப்பட்டதே தவிர, அம்பேத்கர் சமரசமற்ற முறையில் இந்துத்துவத்தை எதிர்த்தார் என்பதே உண்மை.<br /><br />இந்தச் சமூக அமைப்பில் உள்ள குறைகளைப் போராடிப் பெற முடியும் என்கிற மாதிரிதான் பெரியாரின் செயல்பாடுகள் இருந்தன...<br /><br />ஒரு நிலவுடைமைச் சமுதாயம் வீழ்ச்சியுறும்போது முதலாளித்துவ சமூகம் தானாகவே எழும் என்பதுதான் மார்க்சியக் கோட்பாடு. பெரியார் நிலவுடைமை சமூகத்தோடு அதன் கொள்கையோடு எந்தச் சமரசமும் செய்துக் கொள்ளவில்லை. மதம், சாதி எல்லாம் நிலவுடைமை சமூகத்தின் எச்சங்கள். ஆணாதிக்கம் உட்பட அனைத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்தார். முதலாளித்துவச் சிந்தனையோடு பெரியார் முழுமையாக முரண்பட்டார் என்று சொல்ல முடியாது. அதற்குக் காரணம் அறிவியல் என்பது முதலாளித்துவ சமூகத்தின் விளைபொருளாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.<br /><br />நவீனச் சமூகத்திற்குத் தேவையான பலவற்றை முதலாளித்துவச் சமூகம் ஈன்றெடுத்திருக்கிறது. எனவே முதலாளித்துவ சமூகத்தில் இருந்து சமன்மைச் சமூகம் (சோசலிச சமூகம்) நோக்கிப் போகிறபோதுதான் முதலாளித்துவ சமூகத்தின் குறைபாடுகளிலிருந்து முற்றிலுமாக விடுபடமுடியுமே தவிர, அரைநிலவுடைமை, அரை முதலாளித்துவச் சமூகமாக இருக்கிற ஒரு காலக்கட்டத்தில் முதலாளித்துவச் சமூகத்தோடு ஒரு சாய்வு தொடக்கத்தில் ஏற்படத்தான் செய்யும். அதுதான் பெரியாரிடத்திலே இருந்தது. அது காலத்தின் தேவை. சரியானது. அது ஒரு பிழையான பார்வை அல்ல.<br /><br />மொழி என்பது கருத்து பரிமாற்றத்திற்கான கருவி என்ற மார்க்சியர்கள் கருத்து பற்றி...<br /><br />இன்றைக்கு மார்க்சியத் தோழர்களிடம் கூட இந்தக் கருத்துப் பற்றி மாற்றங்கள் ஓரளவுக்கு வந்திருக்கின்றன. முன்பு அவர்கள் சொன்னதைப் போல மொழி ஒரு கருவி என்று சொல்லவில்லை. மொழிப் பற்றிய சிந்தனையில் மார்க்சியத் தோழர்களிடையே கருத்துக்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இருப்பினும் இன்னமும் அப்படிச் சொல்லுகிற தோழர்கள் இருக்கவேச் செய்கிறார்கள். மொழி ஒரு கருவி என்றும் அது சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் இருக்கிறது என்றும் கருதுகிற தோழர்கள் இருக்கிறார்கள்.<br /><br />என்னைப் பொருத்தவரைக்கும் இரண்டு கருத்துக்களிலும் உடன்பாடு இல்லை. அதாவது சாதி, மொழி என்பவையெல்லாம் மேல் கட்டுமானத்தைச் சார்ந்தவை என்பது ஒரு காலக்கட்டத்தில் பார்வை. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அவை அடித்தளத்திலும், மேற்கட்டுமானத்திலும் இரண்டிலுமாக இயங்குகின்றன. ஆலமரத்தின் விழுதுகள் மேலிருந்து கீழிறங்கும். கீழே இறங்கின பிறகு அடிமரம் ஆடிப்போன பிறகு விழுதுகள் தான் தாங்கி நிற்கும். மொழி என்பது இன்றைக்கு அடிமரமாக இருந்து கொண்டு இருக்கிறது. மொழி அடித்தளத்திலே இயங்குகிறது. சாதி அடித்தளத்திலும் மேற்கட்டுமானத்திலும் இயங்குகிறது. எனவே மொழி மேற்கட்டுமானத்தை சார்ந்ததல்ல. அடித்தளத்தைச் சார்ந்தது. ஏன் அடித்தளத்தைச் சார்ந்தது என்றால் பொதுவாக உற்பத்தி கருவிகள், உற்பத்தி உறவுகளை வைத்துதான் மார்க்சிய தோழர்கள் சொல்வார்கள்.<br /><br />குரங்கிலிருந்து மனிதனாக மாறியபொழுது உழைப்பு வகிக்கிற பாத்திரத்தில் மொழிக்கு இடம் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஏங்கெல்ஸ் சொன்ன கருத்தில் நாம் மொழியையும் சேர்க்க வேண்டும். மொழி ஒரு கருவி என்பது மொழியைச் சிறுமைப்படுத்துகிற கருத்தாகவே தோன்றுகிறது. கருவி எப்பொழுதும் உடலின் புறத்தே இருப்பது. ஒரு முறை இன்குலாப் கூட கூறினார். அது கருவியாகவே இருக்கட்டும். முகம் சவரம் செய்கிற கருவியைக் கூட நாம் சுத்தமாக வைத்திருக்கிறோம். கருவி கூர்மையாக இருக்க வேண்டாமா என்று சொன்னார். அடிப்படையில் மொழி என்பது வெளியிலிருப்பது அல்ல. உங்கள் மூளையில் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைக்கப்பட்டதாகவே மொழி இருக்கிறது. மொழி செயற்கையன்று. இயற்கை. மொழியில்லாமல் ஒரு மனிதனால், ஒரு சமூகத்தால் வாழ முடியாது. சிந்தனை என்பது மொழியின் பாற்பட்டது. எனவே மூளை இயங்குகிற வரையில் மொழி இயங்கும். ஆகையால் மொழி என்பது உள்ளும், புறமுமாக இயங்கிக் கொண்டிருக்கிற மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு கூறு. மொழியை ஒரு கருவி என்று சொல்வது அதனைக் கொச்சைப் படுத்துவதாகும்.<br /><br />இடது சாரி தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று பெரியாரைக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இடது சாரிகளான சிங்காரவேலர், ஜீவா ஆகியோர்கள் பெரியாரோடு முரண்பட்டனரே?<br /><br />தலைவர்கள் பலர், அவரோடு இணைந்து பணியாற்றிய காலமும், பிரிந்து போன காலமும் உண்டு. அவர்களுக்குள் குறிப்பிடத்தகுந்தவர்கள் சிங்காரவேலரும் ஜீவாவும். பெரியாரின் சுயமரியாதை சமதர்ம திட்டத்தினுடைய சிற்பிகள், சிங்காரவேலரும், ஜீவாவும். சுயமரியாதை வரலாற்றில் சிங்காரவேலருக்கு ஓரிடம் உண்டு. அவர்கள் பிரிந்து போனது ஒரே ஒரு கட்டத்தில்தான். 1932-ல் சோவியத் யூனியனுக்கும், ஐரோப்பாவுக்கும் போய் வந்த பிறகு பொதுவுடமைக் கொள்கைகளைப் பெரியார் முன் எடுத்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் கொண்டு வந்ததும், மே தினத்தைக் கொண்டாடச் சொன்னதும், பிள்ளைகளுக்கு லெனின் ஸ்டாலின் என்று பெயர் வைக்கச் சொன்னதும் பெரியார்தான்.<br />1936க்கு பிறகு சர்.ஏ.டி. பன்னீர் செல்வத்தின் அறிவுரைப்படி ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை எதிர்கொள்ள வேண்டாம் என்கிற கணக்கில் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிங்காரவேலர் ஜீவா போன்றவர்கள் வெளியேறினார்கள் என்று படித்து இருக்கிறேன்.<br /><br />அன்றைய முதன்மையான தேவையாக சம உரிமையை, பொது உரிமையைக் கருதுகிறார் பெரியார். ஆனால், சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் பொதுவுடமையைக் கருதுகிறார்கள். இது பற்றிய விவாதம் நீண்ட நெடிய விவாதமாக நடந்து கொண்டே இருக்கிறது. எனினும் பெரியார் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னாரே தவிர, பொதுவுடமைக் கொள்கைகளை இறுதி வரை எதிர்க்கவில்லை. இறுதி வரை பெரியார் பொதுவுடமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராகவே இருந்ததைப் பார்க்க முடிகிறது. 1948, 1949 ஆண்டுகளில் பொதுவுடமைத் தோழர்கள் தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் மிகக் கொடுமையாக ஒடுக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்கம்தான். பெரியாருக்கு சிறையிலிருந்து வெளிவந்த எம். கலியாணசுந்தரமே இது குறித்து நீண்ட கடிதத்தை எழுதி இருக்கிறார்.<br /><br />நீங்கள் செய்த உதவியைப் போல யாரும் செய்ததில்லை என்று பெரியாருக்கு எழுதி இருக்கிறார். பல தோழர்களுக்கு மறைமுகமாகத் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் திராவிடர் கழகத்தாரும் திராவிட இயக்கப் பற்றாளர்களும்தான். தோழர் ஜீவாவே நாகர்கோவிலில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வீட்டில்தான் தலைமறைவாக இருந்தார் என்பது பின்னாளில் அறியப்பட்ட செய்தி. அதே போல் சிங்காரவேலரும், ஜீவாவும் அவரிடமிருந்து பிரிந்து போனார்களே தவிர சுயமரியாதைக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. எதற்கு முன்னுரிமை என்பதிலேதான் கருத்து வேறுபாடு இருந்தது.<br /><br />உங்களுடைய வாழ்க்கை போராட்டம், சிறை என்றே இருக்கிறது. உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பலன் கிடைத்து இருக்கிறதா?<br /><br />என்னுடைய பொதுவாழ்க்கை போராட்டமும் சிறையுமாக இருந்தது என்பது மிகையான கூற்றுதான். ஒப்பிட்ட அளவில் நாம் இந்த சமூகத்திற்கு செய்திருக்கிற செயல்கள் குறைவானவை என்பது தன்னடக்கமான சொற்கள் அல்ல. இயல்பானவை. யதார்த்தம் அதுதான். ஆனாலும் கூட உழைப்பிற்கான பலன் இந்தச் சமூகத்தில் விளைந்திருக்கிறதா என்ற வினா சரியானது. ஆனால் கூட்டி கழித்து கணக்குப் பார்க்கிற இடத்திற்கு இன்னமும் நாம் வந்து விடவில்லை என்றே எனக்கு படுகிறது. சரியாய் சொல்ல வேண்டும் என்றால் முன்னேற்றமே இல்லை என்று சொல்லி விட முடியாது. நான் குறிப்பிடுவது நம்முடைய உழைப்பிற்கு ஏற்ற விளைபயன் இல்லை என்பதுதான்.<br />எந்த ஒரு தனி மனிதனுடைய உழைப்பும் குறிப்பிடத்தக்கதல்ல. தமிழ்த் தேசிய இயக்கங்களும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் இது வரை ஆற்றி இருக்கிற பணிக்கு ஈடாக சமூகத்தில் முன்னேற்றங்கள் விளைந்து விட்டன என்று கூறமுடியாது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும் சரியான பார்வை இல்லை. நாங்கள் செய்திருக்கும் செயல்கள் ஓரளவுக்குச் சரியானதுதான் என்றாலும் கூடுதல் அர்ப்பணிப்பு தேவையாக இருக்கிறது. நம்மிடம் தான் குறைகள் இருக்கின்றன. மக்களிடம் இல்லை.தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-19299135.post-1167401452484283492006-12-29T06:09:00.000-08:002006-12-31T03:05:32.733-08:00"நான் தி.மு.க ஆதரவாளன் தான்"<table class="contentpaneopen"><tbody><tr><td class="contentheading" width="100%">"நான் தி.மு.க ஆதரவாளன் தான்" </td><td class="buttonheading" align="right" width="100%"><a title="Print" onclick="window.open('http://poongaa.com/index2.php?option=com_content&task=view&amp;id=867&pop=1&page=0&Itemid=1','win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" href="http://poongaa.com/index2.php?option=com_content&task=view&amp;id=867&pop=1&page=0&Itemid=1" target="_blank"><img alt="Print" src="http://poongaa.com/templates/rt_versatility/images/printButton.png" align="middle" border="0" name="Print" /></a> </td><td class="buttonheading" align="right" width="100%"><a title="E-mail" onclick="window.open('http://poongaa.com/index2.php?option=com_content&task=emailform&id=867&itemid=1','win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=400,height=250,directories=no,location=no'); return false;" href="http://poongaa.com/index2.php?option=com_content&task=emailform&id=867&itemid=1" target="_blank"><img alt="E-mail" src="http://poongaa.com/templates/rt_versatility/images/emailButton.png" align="middle" border="0" name="E-mail" /></a> </td></tr></tbody></table><table class="contentpaneopen"><tbody><tr><td valign="top" align="left" width="70%" colspan="2"><span class="small">சுப.வீரபாண்டியன் நேர்காணல் </span></td></tr><tr><td valign="top" colspan="2"><br />தமிழகத்தில் இயங்கிவரும் தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் ஒருசிலத் தமிழ்த்தேசியவாதிகளில் சுப.வீரபாண்டியனும் ஒருவர். பேராசியராகக் கல்லூரியில் பணியாற்றியபோதே விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக கைது செய்யப்பட்டவர். சென்ற ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர். பகத்சிங்கும் இந்திய அரசியலும், பெரியாரின் இடதுசாரித்தமிழ்த்தேசியம் ஆகியவை இவரது முக்கியமான நூல்கள் இனி, நந்தன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய சுபவீ தமிழ் தமிழர் இயக்கம், தமிழர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் ஆகிய இயக்கங்களிலும் களமாற்றியவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கியிருக்கிறார். அவரை நமது<strong> <span style="color:#0000ff;">தமிழ்மணப்பூங்கா</span></strong>விற்காகச் சந்தித்தோம்.<br /><p></p><p><strong><span style="color:#0033ff;">ஆண்டன்பாலசிங்கத்தின் மறைவால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தொய்வு ஏற்படுமா?</span></strong> </p>ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவு உண்மையிலேயே ஈடுசெய்யமுடியாத இழப்பு. அது புலிகள் அமைப்புக்கு மட்டுமல்லாது உலகமெங்கும் வாழும் தமிழ் மகக்ளுக்கான இழப்பு.<br />ஒரு போராட்ட இயக்கத்திற்கு ராணுவத்தளம் மட்டும் போதாது, அரசியல் தளமும் அவசியம். அத்தகைய தளத்தை அமைத்துத் தந்தவர் ஆண்டன் பாலசிங்கம்.<br />ஆனாலும் பாலசிங்கத்தின் மறைவால் விடுதலைப்போராட்டம் பின்னடைவைச் சந்திக்காது என்றே கருதுகிறேன். தொடக்ககாலமாக இருந்தால் ஒருவேளை அத்தகைய பின்னடவைச் சந்தித்திருக்கக் கூடும். ஏனென்றால் உலகநாடுகளின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியவர் பாலசிங்கம். அதனால் அவ்வாறு ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் இப்போது உலகமெங்கும் புலிகள் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். உலக அரங்கில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவாகியிருக்கிறார்கள். எனவே விடுதலைப்போராட்டத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்பே இல்லை.<br /><p></p><p><strong><span style="color:#0033ff;">முல்லைப்பெரியாறுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?</span></strong> </p>தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில், உலக அளவில் நதிநீர்ப்பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அவைகள் நதிநீர்த்தாவாச் சட்டத்திற்குட்பட்டுத் தீர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இங்கு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கூட போதுமான தீர்வு ஏற்படவில்லை. மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ நம் பக்கமுள்ள நீதியை உறுதி செய்யத் தயாராக இல்லை.<br /><br />அண்டை மாநிலத்தோடு நாம் முரண்படமுடியாதுதான். ஆனால் இத்தகைய போக்குகள் தொடர்ந்தால் அநீதிக்கு எதிராக தமிழகமே திரண்டு குரல் கொடுக்கவேண்டி நேரிடும். காவிரிப்பிரச்சினையை விட முல்லைப் பெரியாறு பிரச்சினையில் வேறுசில தீர்வுகள் இருக்கின்றன. இங்கிருந்து கேரளத்திற்குச் செல்லும் உணவுப்பொருட்களைத் தடுத்தாலே கேரளம் அடிபணியும். ஆனால் அத்தகைய முடிவுக்கு நம்மைக் கேரளம் தள்ளிவிடக்கூடாது.<br /><p></p>இப்போது நடக்கும் பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றால் நீதிமன்றத்தைத்தான் அணுகவேண்டும். நீதிமன்றம் நம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீதி வழங்கினால்தான் இந்தியா என்பது ஒரே நாடு என்ற எண்ணம் நமக்குத் தோன்றும்.<br /><p></p><strong><span style="color:#0033ff;">ராஜிவ்படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 26 தமிழர்களுக்காக தமிழ்த்தேசிய இயக்கங்கள் மரணதண்டனை ஒழிப்பு இயக்கம் நடத்தின. ஆனால் அதுபோல அப்சல் போன்றவர்கள் பாதிக்கப்படும்போது நடத்தவில்லையே?</span></strong><br />அது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இப்போது அப்சலுக்காக குரல் கொடுக்கும் இஸ்லாமிய அமைப்புகளும் கூட அப்போது ராஜிவ் கொலைக்குற்றவாளிகளுக்காக குரல் கொடுக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் இரண்டு பிரச்சினைகளுக்குமே குரல் கொடுக்கவேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு. த.மு.மு.க நடத்திய கருத்தரங்கில் அப்சலுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்த்து ஒருமணிநேரத்திற்குமேல் பேசினேன். அது தமிழன் தொலைக்காட்சியில்கூட ஒளிபரப்பானது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளைப் பொறுத்தவரை அப்சலுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையைத் தான் எதிர்க்கிறார்களே தவிர ஒட்டுமொத்த தூக்குத்தண்டனையை அல்ல. ஆனால் அவர்களும் ஒட்டுமொத்தமாக மரணதண்டனையை எதிர்க்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.<br /><p></p><strong><span style="color:#0033ff;">இப்போது நீங்கள் ஆரம்பித்திருக்கும் இயக்கம் பற்றிச் சொல்லுங்களேன்..</span> </strong><br />திராவிட இயக்கங்கள் என்பவை காலத்தின் தேவை. ஆனால் இப்போது தமிழ்த்தேசிய அமைப்புகளிலும், தலித் அமைப்புகளிலும் ஒருசாரார் திராவிட இயக்கம் தேவையில்லையென்றும், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.<br /><br />இது கிளைமரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. திராவிட இயக்கங்களே எல்லாம் செய்துவிட்டன, வேறு இயக்கங்கள் தேவையில்லை என்று நான் கருதவில்லை. ஆனால் திராவிட இயக்கம்தான் அடித்தளம். தமிழின மேம்பாடு என்பது அதன் மேல்மட்டத்தின் மீது எழுப்பப்படவேண்டியது. திராவிடம் என்பது வெறுமனே மொழி சார்ந்ததோ, நிலம்சார்ந்ததோ மட்டுமில்லை, அது சாதி ஒழிப்பிற்கான, பார்ப்பன எதிர்ப்பிற்கான அரசியல் குறியீடு.<br /><br />தமிழியக்கங்கள் என்பவைகளை நான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தையும், தமிழுணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.<br />எங்கள் அமைப்புக்கு மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.<br /><br /><span style="color:#336600;"><strong>1. தமிழின, தமிழ் மொழி மேம்பாடு<br />2. பகுத்தறிவு, சமூகநீதி, பெண்விடுதலை<br />3. உலகத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்குக் குரல்</strong> <strong>கொடுப்பது.</strong></span><br /><br /><strong><span style="color:#ff6666;">சனவரி 22 அன்று திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் தொடக்கவிழா சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.</span></strong> பேராசிரியர் அன்பழகன் கலந்துகொள்கிறார்.<br /><p></p><p></p><strong><span style="color:#0033ff;">தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி, நீங்கள் தி.மு.கவின் ஆதரவாளராக மாறிவிட்டீர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறதே..?</span></strong><br />(சிரிக்கிறார்). ஆமாம். நான் எதையும் வெளிப்படையாகச் செய்பவன். மறைத்துப் பழகியவனில்லை. நான் தி.மு.க ஆதரவாளன் தான். இன்னும் சொல்லப்போனால் கலைஞர் ஆதரவாளன் தான். திமுகவையும் கலைஞரையும் கூட நான் ஒருகாலத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் இப்போது திமுக சரியான அமைப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. திமுகவில் குறைபாடுகளே இல்லையென்று சொல்லமுடியாது. கோட்பாடு இல்லாமல் நிறுவனமில்லை. ஆனால் நிறுவனமாகும்போது சில பிரச்சினைகள் வரும்.<br /><br />அதேபோல திமுகவிற்கும் சில சறுக்கல்கள் வந்திருக்கின்றன. நாளை எங்கள் இயக்கத்திற்கும் கூட அப்படிப்பட்ட நிலை வரலாம். ஆனால் இப்போதுள்ள கட்சிகளில் திமுக சிறந்ததாக எனக்குத் தோன்றுவதால் நான் தி.மு.கவை ஆதரிக்கிறேன்.<br /><span style="font-size:10;color:#cc0000;"><strong>சந்திப்பு : சுகுணாதிவாகர்</strong></span><br /></td></tr></tbody></table>தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19299135.post-1143018688531892752006-03-22T01:08:00.000-08:002006-03-22T01:11:28.563-08:00தம்பி பட விமர்சனம்தம்பி பட விமர்சனம் <br /><br /> விமர்சகர் சுப.வீ.<br /><br /> <br /><br />மூகத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறவன் துறவி. சமூகத்திற்காகத் தன்னை எரித்துக்கொள்கிறவன் புரட்சியாளன். தம்பி இரண்டாவது வகை.<br /><br />தம்பி பொழைச்சிட்டான் என்று முடிகிறது படம். தம்பி ஜெயிச்சிட்டான் என்று நினைக்கிறது மனம்.<br /><br />முரட்டுத்தனத்திற்கு வீரம் என்று முடிசூட்டி இருக்கும் தேசத்தில், எது உண்மையான வீரம் என்பதை இப்படம் விளக்குகிறது. 'இன்னொருத்தன் உயிரை எடுக்கிறதில்லே வீரம். மத்தவங்களைக் காப்பாத்துறதுக்காகத் தன் உயிரையும் கொடுக்கிறதுதான் வீரம்.'<br /><br />பட்டாசு கொளுத்திப் போட்டதைப் போல, படம் முழுவதும் உரையாடல் வெடி, ஆனால் தம்பி ஏற்படுத்தும் உணர்வோ ஒரு தாயின் மடி. இம்முரண் தரும் அழகில்தான், இப்படம் இணையற்ற வெற்றியைப் பெற்றுள்ளது.<br /><br />கொள்கைப் படங்கள் என்றாலே வறட்டுத்தனமாய்த்தான் இருக்கும் என்ற வசை இப்படத்தினால் ஒழிந்தது. பாதி இருட்டில் படம் எடுப்பதும், வாய்க்குள்ளேயே வசனம் பேச வைப்பதும்தான் தேர்ந்த இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு என்னும் மாயையும் இப்படத்தினால் நொறுங்கியது. வெளிச்சமாகவும், இரைச்சலாகவும்தான் இருக்கிறது படம்.<br /><br />இந்த வெளிச்சம் இருட்டில் வாழும் மக்களுக்குத் தேவையான வெளிச்சம்.<br /><br />இந்த இரைச்சல் ஊமைச் சனங்கள் இனியேனும் ஓங்கி ஒலிக்க வேண்டிய இரைச்சல். <br /><br />ஓர் உணவகத்தில், கல்லூரி மாணவி களிடம் கயவர்கள் சிலர் கண்ணியமற்று நடந்து கொள்ள, அகிம்சையைப் போதிக்கும் அந்தக் கதாநாயகியின் முன்னால் போய் நின்று, இப்ப நான் என்ன செய்ய, இப்ப நான் என்ன செய்ய? என்று தம்பி இரைச்சலிட, 'அடி, அவனுங்கள அடி' என்று படம் பார்க்கும் மக்கள் திருப்பி இரைகின்றனரே, அங்கே இருக்கிறது படத்தின் வெற்றி.<br /><br />கதாநாயகனின் காப்பகத்தில் தையல் வேலை செய்யும் பெண் ஒருத்தியிடம், உங்க அப்பா என்ன செய்யிறார்? என்று கதாநாயகி கேட்க, ஜெயில்ல இருக்காரு என்கிறாள் அவள். அடுத்த பெண்ணிடம் அதே கேள்வியைக் கேட்க, எங்க அப்பாவைக் கொன்னுட்டுதான், அவ அப்பா ஜெயில்ல இருக்கிறார் என்று விடை வருகிறது.<br /> <br />ல்லப்பட்டவனின் குடும்பம் மட்டுமன்று, கொலை செய்கிறவனின் குடும்ப¬ம் நாதியற்று நடுத்தெருவில் நிற்க வேண்டிவரும் என்பதை உணர்த்தும் இக்காட்சியைக் கொண்டே, இன்னொரு படத்திற்குத் திரைக்கதை எழுதலாம் போல் உள்ளது.<br /><br />இரண்டு குடும்பங்களையும் காப்பாற்றும் தம்பி, மனித நேயத்தின் மற்றோர் உருவமாய் உயர்ந்து நிற்கிறான்.<br /><br />பழிக்குப் பழி வாங்குவதைத்தான் நம் படங்கள் இதுவரை சொல்லி வந்துள்ளன. பழிக்குப் பழி வாங்குவதே வேலையா இருந்தா, பாதி உலகம் சுடுகாடாப் போயிடுமே என்னும் கவலையை இப்படம்தான் வெளிப்படுத்தியுள்ளது.<br /><br />'எங்கப்பாவை நீ கொன்னுட்டே இன்னிக்கு நான் ஒன்னை வெட்டுவேன். நாளைக்கு ஒன் புள்ளை, கத்தியோட என்னைத் தேடி அலைவான். அப்புறம் என் மவன் அவனைத் துப்பாக்கியோட துரத்துவான். வேணாம்.... இந்த வேலையே வேணாம். யாராவது ஒருத்தர் எங்கயாவது நிறுத்தனும். இங்க... இப்போ... நான் நிறுத்திக்குறேன்' என்று வசனம் பேசிய கதாநாயகனை இதுவரை நாம் தமிழ்ப் படத்தில் பார்த்ததில்லை. இப்போதும் பார்க்காதவர்கள், தம்பியைப் போய்ப் பாருங்கள்.<br /><br />சீமான் என்றொரு சிந்தனையாளனும், மாதவன் என்றொரு மாபெரும் நடிகனும், இப்படத்தைச் செதுக்கியுள்ள சிற்பிகளான உள்ளனர். <br /><br />ஒளிப்பதிவாளருக்கும் ஒரு பெரும் பங்கு உள்ளது. பாடல் வரிகளைத் தந்த முத்துக்குமார் விரல்களுக்கு மோதிரம் சூட்டலாம்.<br /><br />சே குவேரா, பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் படங்கள் தம்பியின் வீட்டில்.<br /><br />காரல்மார்க்ஸ், ஜென்னி, பகத்சிங் பற்றிய உரையாடல்கள் தம்பியின் பேச்சில்.<br /><br />இப்படியொரு துணிச்சல், மார்க்சின் மாணவன், பெரியாரின் பேரன், தம்பியின் தம்பி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இயக்குனர் சீமானுக்குத்தான் வரும்.<br /><br />அந்தத் துணிச்சலின் இன்னொரு வெளிப்பாடுதான், பெரியாருக்கும், பிரபாகரனுக்கும் இப்படத்தை அர்ப்பணிக்கிறேன் என்று, ஒரு வார இதழுக்கு அவர் வழங்கியிருக்கும் நேர்காணல்!தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19299135.post-1141375611803321842006-03-03T00:40:00.000-08:002006-03-03T00:46:51.816-08:00என் நாட்குறிப்பிலிருந்து...சுபவீஎன் நாட்குறிப்பிலிருந்து...<br /><br />சுப.வீரபாண்டியன்<br /><br /><br />அந்த அதிகாலைப் பயணம் மிக இனிமையாகத்தான் தொடங்கியது.அதற்கு முந்தைய நாள் பொங்கல் நாள். ஆண்டுக்கொரு முறை அனைவரும் இணைந்து கொண்டாடுகிற வீட்டின் ஒரே விழா. பாலும் மகிழ்ச்சியும் சேர்ந்து பொங்கின. கரும்பும், பேத்தி ஓவியாவின் குறும்பும் சேர்ந்தே இனித்தன. சர்க்கரைப் பொங்கலின் சுவையும், அதை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுகிற நிலையும் நெஞ்சுக்கு நிறைவான மகிழ்வைத் தந்தன. அன்றிரவு என் மூத்த அண்ணன் முத்துராமன் வீட்டில் மொத்தக் குடும்பமும் ஒன்று கூடியபோது, சின்னத் திருவிழாவுக்கான முன்னோட்டம் அங்கே இருந்தது.<br /><br />பெரியவர்கள் தொடங்கி, பிஞ்சுகள் வரையில் கேலியும் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக இருந்த அந்தத் தருணங்களில்தான், வாழ்க்கை மிச்சப்பட்டுக்கிடப்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது. அன்றைய நாள் முழுவதும் ஒரு மகிழ்ச்சியான நாள் என்று சொல்ல வேண்டும். அதனுடைய தொடர்ச்சியாகவே அடுத்த நாள் காலைப் பொழுதும் இருந்தது.<br /><br />மாட்டுப் பொங்கலன்று வீடுகளில் மாடுகள் இல்லையென்றாலும், பொங்கல் வைக்கின்ற மரபு நம் எல்லோருடைய இல்லங்களிலும் இருக்கிறது. ஆனாலும், அன்றைக்கு மாட்டுப் பொங்கலில் வீட்டில் இருக்க முடியாமல், நெய்வேலி நண்பர்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி, அவர்களுடன் சேர்ந்து அன்றைய திருநாளைக் கொண்டாடுவதற்காக நெய்வேலி புறப்பட்டோம். வாய்ப்பூட்டுச் சட்டம் இருக்கின்ற காரணத்தால், நான் பேச முடியாது என்கிற நிலையிலும், "எங்களோடு நீங்கள் இருக்க வேண்டும், தமிழர் திருநாள் விழாவிலே கலந்து கொள்ள வேண்டும். பரிசுகளை நீங்கள் வழங்க வேண்டும்' என்று நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நெய்வேலிக்கு அதிகாலையிலே நான் கிளம்பினேன்.<br /><br />அன்று பேருரையாற்றுவதற்குப் பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் அவர்களை நண்பர்கள் அழைத்திருந்தார்கள். நானும் தோழர் பத்மாவதி அவர்களும் அவருடைய மகனும், மருமகளும் ஒரு மகிழ்வுந்தில் நெய்வேலிக்குப் புறப்பட்டுச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். அதன்படி, அன்று அதிகாலை 5.30 மணிக்கு, என் மகன் பாரதிதாசன் தன்னுடைய வண்டியிலே என்னைக் கோடம்பாக்கத்தில் இருக்கிற மீனாட்சி கல்லூரியிலே இறக்கிவிட்டார். 5 நிமிடத்திற்குள்ளாகவே, அவர்களும் வந்து சேர எங்களின் பயணம் தொடங்கியது.<br /><br />நான் முதலில் குறிப்பிட்டதைப் போல, அந்த அதிகாலைப் பயணம் மிகவும் இனிமையாகத்தான் இருந்தது. பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் மகன் மருத்துவர் கோபிநாத் தன் மகிழ்வுந்தை ஒட்ட, அவருக்கு அருகில் முன் இருக்கையில் நான் அமர்ந்தேன். பின் இருக்கைகளில் பேராசிரியரும் அவருடைய மருமகளும் இருந்தார்கள்.<br /><br />மருத்துவர் கோபியை, 2 மாதங்களுக்கு முன் நடந்த அவரது திருமணத்தில்தான் நான் முதலில் சந்தித்தேன். அதிகப் பழக்கமில்லை என்றாலும், நெருங்கிப் பழகியவர்களைப் போல அன்றைக்கு நிறைய பேசியபடி பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். பத்மாவதியின் கணவர் விவேகானந்தனும் நானும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலையில் எறத்தாழ சமகாலங்களில் படித்தவர்கள். அதனால், பழைய நினைவுகளும் இன்றைய நிகழ்வுகளுமாய்ப் பேச்சுகள் நடந்துகொண்டிருந்தன.<br /><br />நெய்வேலியில் மதியம்தான் பொங்கல் விழா. ஆனாலும், காலையிலேயே புறப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. கோபிநாத்தின் மனைவி, போகிற வழியில் கடலூருக்கு அருகே இருக்கிற ஒரு ஆஞ்ச நேயர் கோயிலுக்குப் போகவேண்டும் என ஆசைப்பட்டதாகவும், அதனால் பயணத்தை விரைவாகவே தொடக்கிவிடலாமா என்றும் பத்மாவதி அவர்கள் முதல்நாளே கேட்டார்கள்.<br /><br />"அங்கிள் கோயிலுக்கு வருவாரா?'' என்று கோபி கேட்டார். "எனக்கும் ஆஞ்சநேயருக்கும் எந்தப் பகையுமில்லை. போகிற வழியில் அவர்களை அவரைப் பார்த்துவிட்டு வரட்டும். அப்படியே போகலாம்'' என்று நான் சொல்ல, கடலூர் கோயிலையும் அவர்கள் விருப்பப்படி பார்த்துவிட்டு, மதிய உணவுக்கு நெய்வேலி சென்று விடுவது எனத் திட்டமிட்டிருந்தோம்.<br /><br />திருவான்மியூர் தாண்டி, கிழக்கு கடற்கரைச் சாலையில் திரும்பிய பிறகு, அந்தப் பயணம் மேலும் இனிமையாக ஆனது. அந்தக் காலை நேரம்கடற்கரைக் காற்றுகதிவரன் தோற்றம் என்று எல்லாம் இதயத்துக்கு மிக இதமாக இருந்தன.<br /><br />ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரியைத் தாண்டுகிற போது, "இதுதான் நான் படித்த, இப்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கிற கல்லூரி'' என்று கோபியின் மனைவி மருத்துவர் சுனிதா சொன்னார். தான் மீனாட்சி பல் மருத்துவமனையில் பணியாற்றுவதாகக் கோபி கூறினார். பிறகு, பல் மருத்துவம் பற்றியும், பல் மருத்துவரான என் அருமை நண்பர் தாயப்பன் பற்றியும் பேச்சுகள் திரும்பின.<br /><br />இவை பற்றித்தான் பேசினோம் என்று சொல்ல முடியாது. போகிற போக்கில் கண்ணில் பட்டவை பற்றிப் பேசினோம். நெஞ்சில் தோன்றியவைகள் பற்றிப் பேசினோம். பேச்சு சுகமாக இருந்தது. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தச் சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.<br /><br />மாமல்லபுரம் தாண்டி, சிறிது நேரத்திற்குப் பிறகு, "கோபி... எங்கேயாவது வண்டியை நிறுத்துங்களேன். ஒரு தேநீர் குடித்துவிட்டுப் போகலாம்'' என்று சொன்னேன். தேநீர் குடிப்பதென்பது, வெறும் தேவைகளில் ஒன்று மட்டுமன்று, சில நேரங்களில் அது என் மனநிலையை எட்டியதாகவும் இருக்கும். மாலை நேரங்களில், நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளைகளில், பொதுக்கூட்டங்களில் நான் பேசுவதற்குச் சற்று முன்பாக, ஒரு தேநீர் குடித்துவிட்டால் நன்றாக இருக்கும் போல என்று எனக்குத் தோன்றும். என் மனநிலையை அறிந்து வைத்திருக்கிற அய்யா நெடுமாறன் அவர்கள், பொதுக்கூட்ட மேடைகளிலே இருக்கிறபோது, கூட்ட ஏற்பாட்டாளர்களை அழைத்து "எனக்குத் தேநீர் வேண்டாமென்பதால் நீங்கள் சுப.வீக்கும் தேநீர் கொடுக்காமல் விட்டுவிட்டால் பிறகு எங்களுக்கு ஒரு நல்ல பேச்சு கிடைக்காது'' என்று சொல்லுவார்கள். தேநீர் அருந்துவது, உற்சாகமான மனநிலையின் அடையாளமாகவும் எனக்குப் பல நேரங்களில் இருந்திருக்கிறது.<br /><br />கூவத்தூர் என்று நினைக்கிறேன். ஒரு தேநீரகத்தில் கோபி, வண்டியை நிறுத்த நாங்கள் அனைவரும் இறங்கினோம். காலை நேரக் காற்று முகத்தை வருட, சூடான தேநீர் அருந்தி முடித்தபின் மீண்டும் வண்டிக்குள் வந்து அமர்ந்தபோது மணி, 7.30 இருக்கலாம். இன்னும் 15 அல்லது 20 நிமிடங்களில் ஒரு மிகப்பெரிய விபத்தை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை அப்போது எங்களில் யார் அறிந்திருக்கக் கூடும்?<br /><br />எங்களின் மகிழ்வுந்து பரமன்கேணி என்ற திருப்பத்திற்கு வந்து சேர்ந்தபோது, (அந்த இடம், பரமன்கேணி என்பதைக்கூட பிறகுதான் நாங்கள் தெரிந்து கொண்டோம்) ஒரு குறுகலான வளைவில், திருப்ப முடியாமல் கோபி சிரமப்படுவதையும், இரண்டு சக்கரங்கள், நான் அமர்ந்திருந்த பக்கத்தில் மேலே தூக்குவதையும் உணர்ந்தேன்.<br /><br />"கோபி... என்னாயிற்று... என்னாயிற்று''' என்று பதற்றத்தோடு கேட்ட அந்த நொடிகள்தான், நினைவில் இப்போதும் மீதம் இருக்கின்றன. அதன்பிறகு, என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை நானும் மற்றவர்களும் வெறும் ஊகமாகத்தான் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். ஒன்றே ஒன்றை எங்களால் உணர முடிந்தது.<br /><br />சாலையில் இருந்து சரிந்து, வலது பக்கத்திலிருந்த 5 அல்லது 6 அடி பள்ளத்தில் எங்கள் மகிழ்வுந்து உருண்டு கொண்டிருக்கிறது என்பதை மாத்திரம்தான் உணர்ந்தோம். காருக்குள்ளே இருந்த நாங்கள் மேலே போவதும், கீழே விழுவதுமாக சுழற்றி அடிக்கப்படுகிற போது, பெரும் கூக்குரல்களும் ஒன்றும் புரியாத ஒரு நிலையும்தான் இருந்தது. என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அப்போது எங்களில் யாராலும் உணரமுடியவில்லை.<br /><br />எல்லாம் சில நொடிகளுக்குள் நடந்து முடிந்துவிட்டன. இறுதியாக, சேறும் சகதியும் முள்ளுமாக இருந்த இடத்தில் மகிழுந்து வந்து விழுந்தது. வண்டியினுடைய கண்ணாடிகள் எல்லாம் உடைந்திருந்தன. 4 பேரும் நினைவு தப்பாமல் இருந்தோம் என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி. வண்டியைவிட்டு அவர்கள் 3 பேரும் கண்ணாடிச் சன்னலின் வழியே வெளியே வந்துவிட்டார்கள். எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது.<br /><br />அங்கே கிடந்த முட்களில், தன் காலை மிதித்துக் கொண்டு, கோபி என் கைகளைப் பற்றி வெளியே இழுத்த காட்சி இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது. அடுத்த நாள், விஜயா மருத்துவமனையில் அவருடைய பாதங்களில் நூற்றுக்கணக்கான முட்களை அந்த மருத்துவர்கள் வெளியே எடுத்தார்கள் என்பதை அறிந்தபோது, எனக்காகக் காயப்பட்ட அந்தக் கால்களை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். வண்டியை விட்டு வெளியே வந்தபோது என் நெற்றியிலிருந்தும் இடது கையிலிருந்தும் இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. ஏறத்தாழ உடம்பு முழுவதும் பல பகுதிகளில் வலியாக இருந்தது.<br /><br />அந்தச் சூழலில் எனக்குத்தான் கூடுதலாகக் காயம் பட்டிருக்கிறது என்பதாக உணர்ந்த அவர்கள் மூவரும் தங்களைப் பற்றிக்கூட எந்தக் கவலையும் படாமல், எப்படியாவது என்னைக் காப்பாற்றிவிட வேண்டும் என்றே பதறினார்கள். ஆனால், அந்தச் சாலையில் ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் கிராமமோ, மக்களோ இல்லை. நாங்கள் மட்டுமே, கவிழ்ந்து கிடக்கும் வண்டிக்கருகில் நின்று கொண்டிருக்கிறோம்.<br /><br />அப்போது, எங்கோ மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் ஓடி வந்து தன் தோளில் கிடக்கிற துண்டை எடுத்து, இரத்தம் வழிகிற என் நெற்றியில் இறுக்கிக் கட்டுகிறார். அதற்கு ஒரு 5 நிமிடங்களுக்குப் பிறகு சென்னையை நோக்கி ஒரு மகிழுந்து வந்து கொண்டிருக்கிறது. கீழே இருந்தே நாங்கள் கைகாட்டுகிறோம். அவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்குகிறார்கள். ஒட்டுநரும் மற்றொருவரும் மட்டும்தான் இருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்த அவர்கள்தான் எங்கள் உயிர்களைக் காப்பாற்றினார்கள். கோபியும், அவரது மனைவியும் அங்கே நின்றுகொண்டு, என்னையும் பேராசிரியரையும் அந்த அம்பாசிடர் மகிழுந்தில் எற்றி அனுப்பி வைக்கிறார்கள்.<br /><br />முதலில் எதாவது ஒரு மருத்துவரைப் பார்த்து முதலுதவி செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து 9 கிலோமீட்டர் தாண்டியிருக்கிற கூவத்தூரை வந்து அடைகிறோம். அங்கே மருத்துவர் முருகேசனைச் சந்திக்கிறோம். அவர்தான், மிகுந்த அன்புடன் எங்களுக்கு எல்லா முதலுதவிகளையும் செய்கிறார். அந்த கிராமத்து மக்கள் தாயினும் சாலப்பரிந்து எங்களிடம் அன்பு காட்டுகிறார்கள். அன்று அவர்கள் காட்டிய அன்புக்கும் அவர்கள் செய்த உதவிக்கும் என்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம் நாங்கள்.<br /><br />பிறகு அங்கிருந்து சென்னையை நோக்கி அந்த மகிழுந்துப் பயணம் தொடங்குகிறது. ஏறத்தாழ 80 கிலோ மீட்டர் கடந்து நாங்கள் சென்னைக்கு வரவேண்டும். வீட்டில் தகவல் அறிந்தால் மனைவியும் பிள்ளைகளும் பதறிப்போய் விடுவார்களே என்கிற அச்சத்தில் என் அண்ணனுக்கும் மருத்துவர் முத்தையா அவர்களுக்கும் மட்டும் செய்தியைத் தொலைபேசி மூலம் சொல்லிவிட்டு, கோடம்பாக்கத்திலே இருக்கிற பெஸ்ட் மருத்துவமனையை நோக்கி நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கிறோம்.<br /><br />அதே கடற்கரைச் சாலை, அதே காலை நேரக் காற்று, அதே கதிரவன், எல்லாம் இருந்தன. அனால் எதையும் ரசிக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை. மகிழ்ச்சியோடும் சுவையான பேச்சுகளோடும் முதலில் நடந்த பயணம், அதே சாலையில் வலியோடும் வேதனையோடும், சொட்டும் இரத்தத்தோடும் திரும்பவும் நடந்துகொண்டிருக்கிறது.<br /><br />பாதை ஒன்றுதான். சாலைகள் ஒன்றுதான். மனிதர்களும் அதே மனிதர்கள்தாம். ஆனால் மனநிலை முற்றிலும் வேறுவேறாக மாறிப்போயிற்று. முதல் 2 மணி நேரப் பயணமும் அடுத்து நடந்த 2 மணி நேரப் பயணமும் நேர் எதிர்மறைகளை, வாழ்க்கையின் இரண்டு பக்கங்களை எங்களுக்கு சுட்டிக்காட்டின. எத்தனை மகிழ்ச்சியாக இருந்த வாழ்க்கை, ஒரு நொடியில் இப்படி வலியும் இரத்தமுமாய் மாறிப்போயிற்று என்பதை எங்களுக்கு உணர்த்திற்று. கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையிலான எலும்பு எனக்கு முறிந்து போய்விட்டது. பேராசிரியருக்கு விலா எலும்பிலே விரிசல், கோபிக்கு முதுகுத்தண்டில் கீழ் பகுதியிலே அடிபட்டுவிட்டது. இன்னும் அவர் படுத்தப் படுக்கையாய் உள்ளார். அவருடைய மனைவிக்கு எராளமான ஊமைக்காயங்கள். எல்லோரும் உயிர் பிழைத்து விட்டோம் என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி.<br /><br />"கடவுள்தான் எங்களைக் காப்பாற்றியுள்ளார்'' என்று பலர் கூறுகின்றனர். ஒரு புன்னகையோடு அதனைக் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />"நாட்டுக்கு எங்கள் தேவையும், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் இன்னும் நிரம்ப உள்ளன. அதனால்தான் காலம் எங்களைக் காப்பாற்றியுள்ளது'' என்கின்றனர் நண்பர்கள் சிலர். இப்போதும் புன்னகைக்கிறேன். இரண்டுமே மூட நம்பிக்கைகள்தாம். ஆனாலும், உயிர் உள்ளவரை, நம்மால் முடிந்தவைகளை இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இரண்டாவது கூற்று என்னுள் தூண்டுகிறது.<br /><br />விரைவில் நலம் பெறுவேன். மீண்டும் உங்களோடு இணைந்து செயல்படுவேன்.தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19299135.post-1138350574940378862006-01-26T23:22:00.004-08:002006-01-27T00:29:34.950-08:00ஒகேனக்கல் மண்ணை இழக்க மாட்டோம்!- சுபவீஒகேனக்கல் மண்ணை இழக்க மாட்டோம்!<br /><br /> சுப.வீரபாண்டியன்<br /><br /><br />காவிரி ஆற்றில் தமிழர்களுக்கு உள்ள உரிமையை எப்போதும் மறுத்துவரும் கர்நாடகம், இந்த ஆண்டு பெருமளவு தண்ணீரை அனுப்பி வைத்தற்குக் காரணம் அதன் பெருந்தன்மையோ, ஞாயத்தைப் புரிந்துகொண்ட நிலைப்பாடோ அல்ல.<br /><br />காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் இவ்வாண்டு ஏராளமான மழை பெய்துவிட்ட காரணத்தால் தண்ணீரைத் தேக்கிக் கொள்ள வழியில்லாமல் இங்கே அனுப்பி உள்ளது. அதன் லம் அங்கே வெள்ளம் வராமல் தடுத்துக்கொள்வதே கர்நாடகத்தின் திட்டம்.<br /><br />கிருஷ்ணசாகர் அணை என்பது மிகப்பெரிய அணை. எளிதில் அந்த அணை நிறைந்துவிடாது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நிறைந்துள்ளது. இந்த நிலையைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.<br /><br />ஒகேனக்கல் பகுதியைக் கைப்பற்றி, அதற்குச் சற்று முன்பு மேகதாது அணை ஒன்றைக் கட்டி விட்டால், ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வருவதைத் தடுத்துவிடலாம். இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் ஒகேனக்கல் சிக்கலைப் புதிதாகக் கர்நாடகம் கையில் எடுக்கிறது.<br /><br />25 ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை இப்படியொரு முயற்சியில் கர்நாடகம் இறங்கியது. அப்போது அங்கு குண்டுராவ் முதலமைச்சராக இருந்தார். ஒகேனக்கலிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மேகதாதுத் திட்டம் அமையும் என்றும், அதனை உடனடியாகத் தொடங்க இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.<br /><br />அப்போதிருந்த தமிழக அமைச்சரவையும், சட்டமன்றமும் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று அதனை எதிர்த்தன. தமிழக மக்களிடம் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. அதன் விளைவாக அத்திட்டத்தை அன்று குண்டுராவ் கைவிட்டார். மீண்டும் இன்று கர்நாடகம் அதைக் கையில் எடுக்கிறது.<br /><br />எந்த ஆவணங்களும் சான்றுகளும் இல்லாமல், ஒகேனக்கல் எங்களுக்கே சொந்தம் என்று கர்நாடகம் சொல்லுவது எவ்வளவு பெரிய மோசடி!. பொய்யை மெய்யாக்குவதற்கு கன்னட வெறியர்களின் இயக்கங்களும், கர்நாடக அரசும் மிக விரைவாக வேலை செய்கின்றன.<br /><br />தங்கள் கொடியை நாட்டுவதற்கு செங்கற்களோடும், சீமெந்தோடும் ஒகேனக்கல் பகுதியில் அவர்கள் குவிந்திருக்கிறார்கள். தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் அதுபற்றிக் கவலை ஏதுமின்றி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி உள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.<br /><br />தமிழகத்தின் ஊடகங்களுக்குத் திரைப்பட நடிகையைப் பற்றிய செய்திதான் பெரிதாய் இருக்கிறதே தவிர, இருக்கும் மண்ணையும் இழக்கப்போகும் அவலம் பெரிதாய்ப் படவில்லை.<br /><br />கர்நாடகம் ஒகேனக்கல் பகுதியைக் குறிவைப்பதற்கு வேறு சில பொருளியல் காரணங்களும் உள்ளன. ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன்னால் ஒகேனக்கல் மின் உற்பத்தித் திட்டம் என ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.<br /><br />2581961 அன்று மத்திய நீர் மற்றும் மின்சக்திக் குழுவிற்கு, கர்நாடகத்தில் உள்ள சிம்சா மின்நிலையத்திற்குக் கீழே ஒகேனக்கல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றைத் தொடங்குவதற்கான திட்டத்தைத் தமிழக அரசு அனுப்பி வைத்தது.<br /><br />அத்திட்டத்தின்படி காவிரியில் இரண்டு அணைகள் கட்டப்படும். முதலாவது அணை சுந்தர்பெட்டா மலையில் அமையும். அந்த அணையின் உயரம் ஆற்றுப் படுகையில் இருந்து 449 அடி ஆகும். அந்த அணையின் அடிவாரத்தில் ஒவ்வொன்றும் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 6 மின் நிலையங்கள் அமைக்கப்படும்.<br /><br />இரண்டாவது அணை ஒகேனக்கலுக்கு அருகில் அமையும். இந்த அணையின் அடிவாரத்தில் ஒவ்வொன்றும் 50 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன்படைத்த 4 மின் நிலையங்கள் அமைக்கப்படும்.<br /><br />இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதோடு, இதனால் ஏற்படும் பயன் இரண்டு மாநிலங்களுக்கும் உரியதாக இருக்கும். நீரிலிருந்து இம்மின்சார உற்பத்தி அமைவதால், நிலக்கரி பெருமளவில் மிச்சமாகும்.<br /><br />அத்திட்டத்தின்படி கட்டப்படும் இரண்டு அணைகளில் தேங்கும் நீரும், மின்சார உற்பத்திக்கு மட்டுமே அன்றி வேறு பாசன நோக்கம் எதற்கும் பயன்படக்கூடாது என்பதும் திட்டத்தின் ஒர் அங்கமாகும்.<br /><br />இந்த அணைகள் கட்டப்படுவதால் வெள்ள அபாயம் தடுக்கப்படுகிறது. அதனைச் சுற்றுலாப் பகுதியாக ஆக்குவதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இத்தனை நன்மைகள் கொண்ட இத்திட்டம் இன்னும் நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. அத்திட்டத்தை இப்போதாவது நாம் வலியுறுத்திப் பெற வேண்டும்.<br /><br />நம்டைய அலட்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒகேனக்கல் பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் அரசியல் பொருளியல் லாபங்களை ஈட்டுவதற்கு கர்நாடகம் முயற்சி செய்கிறது.<br /><br />இது பகற் கொள்ளையைக் காட்டிலும் கொடுமையானது. தமிழகமே திரண்டெழுந்து இச் சதியை முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இத்தருணத்தில் ஓரணியில் திரண்டு நின்று போர்க்குரல் எழுப்ப வேண்டும்.<br /><br />ஏற்கனவே தமிழகத்தின் வளமான நிலப்பகுதி பலவற்றை நாம் இழந்து நிற்கிறோம். இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோர் கவனமும் இதிலே திரும்பட்டும். இயக்கங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து கிளம்பட்டும்.<br /><br />ஒகேனக்கல் என்பது தமிழக மண். ஒரு நாளும் அதை இழக்கச் சம்மதியோம்.தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-19299135.post-1138347179961397692006-01-26T23:22:00.003-08:002006-01-26T23:32:59.963-08:00இறுதிப் புயல் வீசும்- சுபவீஈழத்தில் எந்த நேரத்திலும் போர் மூளக்கூடும் என்பது இங்கு பலருக்கு ஒரு செய்தி மட்டுமே. வேறு பலருக்கு அது ஒரு செய்தி கூட இல்லை. ஆனால் ஈழ மக்களுக்கு அது வாழ்வின் ஓலம், உயிரின் வலி.<br /><br />"18 வயது இளைஞர்கள்<br />பழகிக் கொண்டார்கள்<br />ஈழத்தில் களமாடவும்<br />இங்கு வாக்களிக்கவும்''<br /><br />என்று ஒரு கவிதையை நீண்ட நாட்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். இன்றைக்கும் அவ்வரிகள் பொருத்தமாக உள்ளன. போர் என்பது பேரழிவு. வாழும் நிலத்தைக் சுடுகாடாக்கும் வன்முறை, உலகின் எந்த மூலையில் உள்ள மக்களும் போரை விரும்ப மாட்டார்கள். ஆனால் தங்கள் மீது திணிக்கப்படும் போரை, ஈழத்துப் போராளிகளும், தமிழீழ மக்களும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்திற்கு இப்போது தள்ளப்பட்டுள்ளனர்.<br /><br />17122005 அன்று யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாக தர்சணி என்ற இளம்பெண் இலங்கைக் கடற்படையினரால் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு உள்ளார். கல்லோடு கட்டப்பட்டு நீரில் மூழ்கிய நிலையில் அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இலங்கை ஆயுதப்படையினரால் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் பொதுமக்களுக்கு எதிராகக் காட்டுமிராண்டித் தனமான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதை எதிர்த்து அங்கு உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமயில் இலங்கை மானிடரிங் மிஷன் என்ற அமைப்பிடம் மனுக் கொடுக்க ஊர்வலமாகச் சென்றார்கள். ஆனால், அவர்கள் இலங்கை இராணுவத்தால் தடுக்கப்பட்டு பல்கலைக் கழகத் துணைவேந்தரும், பேராசிரியர்களும், மாணவர்களும் இரத்தம் கொட்டும் அளவுக்குத் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.<br /><br />தாங்கள் எச்சரிக்கை செய்வதற்காக வானில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை இராணுவம் கூறினாலும், பேராசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் துப்பாக்கிச் சூட்டால் காயம் எற்பட்டு உள்ளது என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவில் தேவாலயத்தில், சீறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர், மிகச் சிறந்த தமிழின உணர்வாளர், மனித நேயர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய மனைவி உட்பட 8 பேர் படுகாயப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்குப் பின்னால் சிங்கள இராணுவமும், துரோகக் கூட்டமும் ஒளிந்திருப்பதை எவராலும் எளிதில் உணரமுடியும்.<br /><br />புலிகளை இடறும் முயற்சியில் இராணுவம் இறங்கி இருக்கிறது. அரசு அதற்குத் துணை போகிறது. விரைவில் அங்குப் போர் மூண்டால் அதற்குச் சிங்கள இனவெறியே காரணம் என்பதை அனைத்துலகச் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். போருக்கான நாளை, சிங்களர்கள் குறிக்கட்டும். வெற்றிக்கான நாளை, தமிழர்கள் குறிப்பார்கள்.<br /><br />"விரைவில் இறுதிப் புயல் வீசும்<br />வேங்கைகள் ஆள்வார் தமிழ்த் தேசம்.''தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-19299135.post-1138346999542418392006-01-26T23:22:00.002-08:002006-01-26T23:29:59.543-08:00நெகிழ்ந்த நிகழ்வு- சுபவீசென்னையில் 24122005 அன்று நடைபெற்ற திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமாரின் நூல்கள் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அ னா ஆ வன்னா, பாலகாண்டம், கண் பேசும் வார்த்தைகள் என அவர் எழுதிய மூன்று நூல்கள் அன்று வெளியிடப்பட்டன. அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, தங்கர்பச்சான், அறிவுமதி, பாலா, ஜெயமோகன், பிரபஞ்சன், சீமான், பாமரன், இளம்பிறை எனப் பேச்சாளர்களின் வரிசை மிக நீண்டதாய் இருந்தது. மூன்று அமர்வுகளில் விழா நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு விழா நிறைவடைந்தபோது, வீட்டிற்கு எப்படித் திரும்புவது என்ற கவலை பலரையும் பற்றிக்கொண்டது.<br /><br /> மூன்றாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பின்வரிசையில் என் அண்ணன் எஸ்.பி. முத்துராமன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். மேடையில் இருந்த யாரும் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் சற்றுக் காலம் தாழ்ந்து வந்திருக்கிறார். இருக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டதால், கூட்டத்தோடு கூட்டமாய் நின்றபடியே விழா நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அதைக் கவனித்த யாரோ, அவரை அழைத்து வந்து இரண்டாம் வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள். மிகச் சுருக்கமாகப் பேசிய திரைப்பட இயக்குனர் பாலா, தன் பேச்சின் முடிவில் ஒரு வேண்டுகோள் வைத்தார். மூத்த திரைப்பட இயக்குனரான எஸ்.பி. முத்துராமன் மேடைக்கு வந்து எங்களோடு அமர வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள். அதனை ஏற்று அண்ணன் மேடைக்குச் சென்றார்.<br /><br />அப்போது மேடையில் கவிஞர் முத்துக்குமார், அவருடைய தந்தையார், கவிஞர் அறிவுமதி, திரைப்பட இயக்குனர்கள் சீமான், பாலா, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அண்ணன் மேடையில் ஏறிய போது, அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி அவரை வரவேற்றார்கள். முத்துக்குமார் அவருக்குச் சால்வை போர்த்தி வரவேற்றார். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. அந்த நிகழ்வில் நான் நெகிழ்ந்து போனேன் என்றுதான் கூறவேண்டும். அந்த மகிழ்ச்சி, அண்ணனுக்குக் கிடைத்த மதிப்பைக் கண்டு ஒரு தம்பி அடைந்த மகிழ்ச்சி மட்டுமன்று. பண்பாடும், மனித நேயமும் இந்த மண்ணில் இன்னும் மிச்சமிருப்பதைக் கண்டும் அடைந்த மகிழ்ச்சி அது.<br /><br />தன் வயதுக்கும் அனுபவத்திற்கும் முன்னால், இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள் என்று கருதாமல், கூட்டத்தில் ஒருவராய் நின்றபடியே விழாவைப் பார்த்துக் கொண்டிருந்தது அவருடைய பெருந்தன்மையைக் காட்டியது. இளைஞர்களாக இருந்தாலும், காதல், சேது, ஆனந்தம் முதலான பல வெற்றிப்படங்களைத் தந்துள்ள இன்றைய சாதனையாளர்களான அவர்கள், வயதையும், அனுபவத்தையும் மதித்து, அண்ணனை மேடைக்கு அழைத்து, எழுந்து நின்று வரவேற்ற தன்மை அவர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்தியது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், மதிக்கவும் தெரிந்து கொண்ட உலகில், தலைமுறை இடைவெளி எழுவதற்கு வாய்ப்பில்லை.தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19299135.post-1138346981162142322006-01-26T23:22:00.001-08:002006-01-26T23:29:41.163-08:00நெகிழ்ந்த நிகழ்வுசென்னையில் 24122005 அன்று நடைபெற்ற திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமாரின் நூல்கள் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அ னா ஆ வன்னா, பாலகாண்டம், கண் பேசும் வார்த்தைகள் என அவர் எழுதிய மூன்று நூல்கள் அன்று வெளியிடப்பட்டன. அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, தங்கர்பச்சான், அறிவுமதி, பாலா, ஜெயமோகன், பிரபஞ்சன், சீமான், பாமரன், இளம்பிறை எனப் பேச்சாளர்களின் வரிசை மிக நீண்டதாய் இருந்தது. மூன்று அமர்வுகளில் விழா நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு விழா நிறைவடைந்தபோது, வீட்டிற்கு எப்படித் திரும்புவது என்ற கவலை பலரையும் பற்றிக்கொண்டது.<br /><br /> மூன்றாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பின்வரிசையில் என் அண்ணன் எஸ்.பி. முத்துராமன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். மேடையில் இருந்த யாரும் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் சற்றுக் காலம் தாழ்ந்து வந்திருக்கிறார். இருக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டதால், கூட்டத்தோடு கூட்டமாய் நின்றபடியே விழா நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அதைக் கவனித்த யாரோ, அவரை அழைத்து வந்து இரண்டாம் வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள். மிகச் சுருக்கமாகப் பேசிய திரைப்பட இயக்குனர் பாலா, தன் பேச்சின் முடிவில் ஒரு வேண்டுகோள் வைத்தார். மூத்த திரைப்பட இயக்குனரான எஸ்.பி. முத்துராமன் மேடைக்கு வந்து எங்களோடு அமர வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள். அதனை ஏற்று அண்ணன் மேடைக்குச் சென்றார்.<br /><br />அப்போது மேடையில் கவிஞர் முத்துக்குமார், அவருடைய தந்தையார், கவிஞர் அறிவுமதி, திரைப்பட இயக்குனர்கள் சீமான், பாலா, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அண்ணன் மேடையில் ஏறிய போது, அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி அவரை வரவேற்றார்கள். முத்துக்குமார் அவருக்குச் சால்வை போர்த்தி வரவேற்றார். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. அந்த நிகழ்வில் நான் நெகிழ்ந்து போனேன் என்றுதான் கூறவேண்டும். அந்த மகிழ்ச்சி, அண்ணனுக்குக் கிடைத்த மதிப்பைக் கண்டு ஒரு தம்பி அடைந்த மகிழ்ச்சி மட்டுமன்று. பண்பாடும், மனித நேயமும் இந்த மண்ணில் இன்னும் மிச்சமிருப்பதைக் கண்டும் அடைந்த மகிழ்ச்சி அது.<br /><br />தன் வயதுக்கும் அனுபவத்திற்கும் முன்னால், இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள் என்று கருதாமல், கூட்டத்தில் ஒருவராய் நின்றபடியே விழாவைப் பார்த்துக் கொண்டிருந்தது அவருடைய பெருந்தன்மையைக் காட்டியது. இளைஞர்களாக இருந்தாலும், காதல், சேது, ஆனந்தம் முதலான பல வெற்றிப்படங்களைத் தந்துள்ள இன்றைய சாதனையாளர்களான அவர்கள், வயதையும், அனுபவத்தையும் மதித்து, அண்ணனை மேடைக்கு அழைத்து, எழுந்து நின்று வரவேற்ற தன்மை அவர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்தியது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், மதிக்கவும் தெரிந்து கொண்ட உலகில், தலைமுறை இடைவெளி எழுவதற்கு வாய்ப்பில்லை.தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19299135.post-1138346850855393192006-01-26T23:22:00.000-08:002006-01-26T23:28:39.080-08:00எது பொது ஒழுங்கு- சுபவீஇன்றைய நிகழ்ச்சிகள் பகுதியின் மூலம், கருத்து அமைப்பின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெறுவதை அறிந்து, பார்வையாளனாய் அங்குச் சென்றிருந்தேன். கவிஞர் கனிமொழியும், கார்த்திக் சிதம்பரமும் வரவேற்க, நடிகர் சத்யராசும், இதழாளர் சித்ரா ரவீந்திரநாத்தும் உரையாற்றினார்கள். கருத்துரிமை பற்றிய அன்றைய உரைகளுக்கிடையே வழக்கம் போல் குஷ்புவும் வந்து போனார். கடந்த மூன்று மாதங்களாகக் குஷ்பு கற்பு பற்றிய விவாதங்களில் பங்கேற்காமல் நான் மௌனமாகவே இருந்து வந்தேன். எனினும் அது குறித்து நடை பெற்ற எதிரெதிர்க் கூட்டங்கள் அனைத்திலும் பார்வையாளனாக அமர்ந்திருந்தேன்.<br /><br />ஒரு நண்பர், ஏன் இந்தக் கள்ள மௌனம் என்று கூடக் கேட்டார். இல்லையில்லை, இது நல்ல மௌனம் என்று நான் விடையிறுத்தேன். இரண்டு தரப்புகளிலும், எனக்கு உடன்பட்ட கருத்துக்களும் இருந்தன. மாறுபட்ட கருத்துக்களும் இருந்தன. சிலவற்றில் சிறிது குழப்பமும் இருந்தது. எனக்கே தெளிவு எற்படாதபோது, பிறருக்கு நான் என்ன சொல்வது என்பதால்தான் அந்த மௌனம். குஷ்புவின் கருத்துக்கு எதிராக எழுந்த குரல்களில் வேறு ஒரு கோபம் பின்புலமாக இருந்ததை அனைவரும் அறிவோம். தங்கர்பச்சான் என்னும் அரிய கலைஞர், நடிகர் சங்கத்தினரால் இழிவுபடுத்தப்பட்டதற்கு எதிர் வினையாக அது இருந்தது என்பதை மறுக்க முடியாது. இன்று குஷ்புவிற்காக குரல் எழுப்புவோர், அன்று தங்கர்பச்சானுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என்னும் கேள்வியில் நியாயம் உள்ளது. தன் கூற்றுக்காக அவர் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகும், நடிகர் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கட்டப் பஞ்சாயத்து செய்த அராஜகத்தை அனைவரும் கண்டித்திருக்க வேண்டும்.<br /><br />அதே நேரத்தில், தங்கர்பச்சானை இழிவுபடுத்தியதற்காகவும், சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாகக் கட்டப்பஞ்சாயத்து செய்ததற்காகவும் நடிகர் சங்கத்தையும், குஷ்புவையும் எதிர்த்து நேரடியான போராட்டத்தைத் தொடங்கியிருந்தால், கற்பு மீதான விவாதமே எழாமல் போயிருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் உண்மைச் சிக்கல் திசைதிரும்பிப் போனதால், கற்பு பற்றிய பிற்போக்கான, ஆணாதிக்கச் சொல்லாடல்களும் அரங்கேறவே செய்தன. இந்தச் சூழலில்தான் நான் மௌனம் காத்தேன்.<br /><br />ஆனாலும் அன்று கருத்து அமைப்பில் அது குறித்து நான் ஒரு வினாவை எழுப்பினேன். அவ்வினா, அடுத்த நாள் தினகரன், தினமணி ஆகிய நாளேடுகளில் அரைகுறையாக வெளியாகியிருந்தது. ஆதலால் அன்று நான் எழுப்பிய வினா என்ன என்பது குறித்தும், அதில் என் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பது குறித்தும் இப்போது விளக்கம் சொல்ல வேண்டிய கடமை எனக்கு எற்பட்டுள்ளது.<br /><br />ஆங்கில ஏடுகளில் கட்டுரைகள் எழுதும், சித்ரா ரவீந்திரநாத் அன்று பேசும் பொழுது, அடுத்தவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமலும், பொது ஒழுங்கிற்குப் பங்கம் வராமலும், எல்லாவிதமான கருத்துகளையும் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை வேண்டும் என்று பேசினார். மற்றவர்களின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. இந்த இடத்தில்தான் என்னுடைய அடிப்படையான ஐயம் எழுந்தது. அதனை, பார்வையாளர்கள் நேரத்தில் நான் எழுப்பினேன்.<br /><br />ஒரு கருத்தை மேடையில் பேசியதற்காகவே, ஒன்றரை ஆண்டு காலம் பொடாச் சிறையில் இருந்தவர்களில் நானும் ஒருவன். இன்று கருத்துரிமைக்காகக் குரல் கொடுக்கும் இந்து போன்ற நாளேடுகள், நாங்கள் கைது செய்யப்பட்டபோது வேறு விதமாகப் பேசின. வைகோவைக் கைது செய்த மறுநாள், அப்படிப் பேசுவது அவருடைய கருத்துரிமை, அவரை ஏன் கைது செய்தீர்கள் என்று கேட்டிருக்க வேண்டிய இந்து ஏடு, ஏன் இன்னும் நெடுமாறனையும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டது. பிறகு, பொடா மறுஆய்வுக்குழு எங்கள் மீது சுமத்தப் பெற்ற குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை என்று சொன்னபிறகு, இந்து ஏடு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டாமா? இல்லை, அப்போது இந்து மௌனமாக இருந்தது. அதுதான் இந்து ஏட்டின் கருத்துரிமைக் கோட்பாடு. அதனை அன்று நான் எடுத்துச் சொன்னேன். அதற்குச் சித்ரா விடை சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை.<br /><br />எங்களுக்கு எதிராகத் தலையங்கம் எழுதிய இந்து, கருத்துரிமை என்ற பெயரால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை அனுமதித்தால், சட்டமும் ஒழுங்கும் கெட்டுவிடும் என்று கூறியிருந்தது. துக்ளக் போன்ற ஏடுகளின் கருத்தும் அதுவாகவே உள்ளது. தமிழக அரசும் அதே பொது ஒழுங்கு சட்டம் என்பனவற்றைக் காரணம் காட்டியே எங்களைக் கைது செய்தது. கற்பு குறித்துக் கருத்துச் சொல்ல குஷ்புவிற்கு உரிமையில்லையா என்னும் கேள்வி இப்போது ஒரு பகுதியினரால் எழுப்பப்படுகிறது. உரிமை உண்டுதான். ஆனால் அது தமிழ்ப் பண்பாட்டையும், பொது ஒழுங்கையும் கெடுப்பதாக இருக்கிறது. அதனால் அதனை அனுமதிக்க முடியாது என்று இன்னொரு பகுதியினரிடமிருந்து விடை வருகிறது.<br /><br />ஆக, பொது ஒழுங்கிற்குத் தீங்கு வராத கருத்துரிமையை அனைவரும் ஏற்றுக்கொண்டாலும், எது பொது ஒழுங்கு என்பதை வரையறுப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. பொது ஒழுங்கு என்பது அரசின் பார்வையில் ஒன்றாகவும், அமைப்புகளின் பார்வையில் இன்னொன்றாகவும், தனிமனிதர்களின் பார்வையில் வேறுவேறாகவும் உள்ளது. எனவே இதனை யார், எப்படி வரையறை செய்வது என்பதே அவ்வரங்கில் நான் எழுப்பிய வினா. மொத்தத்தில் பொது ஒழுங்கு என்பதை அவரவர் பார்வையில் முன்னிறுத்தி, கருத்துரிமைக்குத் தடை விதிக்கின்றோமோ என்பதே என்னுடைய அச்சமாக உள்ளது. நம்முடைய கருத்து வெளிப்பாடுகளால் சிதைந்து போகும் அளவிற்கு இந்நாட்டின் சட்டம் ஒழுங்கும், தமிழ்ப் பண்பாடும் பலவீனமாக உள்ளன என்று நான் கருதவில்லை.<br /><br />எந்தக் கருத்து வேண்டுமானாலும் அரங்கிற்கு வரட்டும், வலியவை வாழும். பொருளற்றவைகளைக் காலம் புறந்தள்ளும். நமக்கு எதிரான கருத்துகளைக் கூடப் பிறர் வெளியிடும் உரிமைக்காகப் போராடுவதே கருத்துரிமைப் போராட்டம், அப்போராட்டமே இன்றைய தேவையாக உள்ளது என நான் உணர்கிறேன்.தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-19299135.post-1132915825404916452005-11-25T02:46:00.000-08:002005-11-25T02:50:25.413-08:00விடுதலைக்குயிலின் கீதம்தமிழ்த்தேசிய அரசியலில் குறிப்பிடும்படியான தலைவர்களில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர்.<br />தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர்.<br />அவரின் சிந்தனைகள் இங்கே பதியப்படும்... அவ்வப்போது.தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.com2