அது ஒரு பொடா காலம்! (7)
சுப.வீரபாண்டியன்
நான் நந்தன் இதழின் சிறப்பாசிரியராக இருந்தபோது, தாயப்பன் எனக்கு அறிமுகமானார்.
அப்போது அவர், சென்னை பல் மருத்துவக் கல்லூரி மாணவர். துடிப்பான இளைஞர். தமிழில் சிறந்த சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் உடையவர். எனவே, அவரைப் பொது மேடைகளில் அறிமுகப்-படுத்துவதில், நானும் நண்பர் சாகுல் அமீதும் மிக விருப்பமாக இருந்தோம். அதன் விளைவாகவே, சிக்கலுக்குக் காரணமாக இருந்த சென்னைக் கூட்டத்துக்கும் அழைத்திருந்தோம்.
ஆனாலும், அன்றைய நிலைமைகள் குழப்பமாக இருந்த காரணத்தால், நான் அவரை வரவேற்புரை மட்டும் நிகழ்த்துமாறு சொன்னேன். பொடாவில் கைது செய்வதற்கு வரவேற்புரை மட்டுமேகூடப் போதுமானது என அன்றைய அரசு கருதிவிட்டது.
துன்பத்திற்கிடையில், தாயப்பனை எப்போது இங்கு அழைத்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்-பு எங்களுக்கு இருந்தது. ஆனால், இரவு வரை தாயப்பன் வரவில்லை. மறுநாள் காலைச் செய்தித்தாள்களைப் பார்த்தபோதுதான், அவரை சேலம் சிறையில் அடைத்துவிட்டார்-கள் என்பது தெரிந்தது.
அருகில் உள்ள சிறையில் அடைப்பதன் மூலம் நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ‘நல்ல எண்ண’த்தில் தொலைதூரச் சிறைகளில் கொண்டுபோய் அடைக்-கும் பழக்கம் அன்றிருந்தது. சென்னையில் கைது செய்யப்-பட்ட தாயப்பனை சேலத்திலும், மானாமதுரையில் கைது செய்யப்பட்ட பரந்தாமனை சென்னையிலும், புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட பாவாணனை கோவையிலும், ஈரோட்டில் கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தியை மதுரையிலும் சிறைகளில் அடைத்து மகிழ்ந்தது ஜெயலலிதா அரசு. என்னைப் போன்ற ஒரு சிலருக்கு விதிவிலக்கு என்றே கூற வேண்டும். சென்னையில் கைது செய்து, சென்னையிலேயே சிறை வைத்ததால், ‘மனு பார்க்க’ வருவோரின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும். அதற்கும், இடையில் தடை விதிக்கப்பட்டது. வாரத்துக்கு மூன்று நாட்கள், குறிப்பிட்ட எண்ணிக்-கையில் மட்டும் மனு பார்க்கலாம் என்று கூறிவிட்டனர்.
அக்டோபர் 16&ம் நாள், மனுவுக்கு அழைப்பு வந்தபோது, மனம் மகிழும் வாய்ப்பு ஒன்றும் வந்தது.
வழக்கம் போல் காலை 11 மணியளவில், கூடுதல் கண்காணிப்பாளர் அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்ட-போது, யாரெல்லாம் என்னைப் பார்க்க வந்துள்ளனர் என்று தெரி-யாது. ஒவ்வொரு முறையும் நாங்கள் அங்கு கொண்டுசெல்லப்பட்ட பின் சிறிது நேரத்தில், எங்களைப் பார்க்க வருவோர் வலைக்கம்பிகள், தடுப்புகளுக்கு அந்தப் பக்கத்தில் உள்ளே அனுப்பப்படுவர். அப்போது-தான் யார் யார் வந்துள்ளனர் என்பதை நாங்கள் அறியமுடியும்.
ஆனால் அன்றோ, எனக்கு முன்பே அவர்கள் அழைத்து வரப்-பட்டு இருந்தனர். அதுமட்டு-மல்லாமல், சிறைக்கு உள்ளே, கூடுதல் கண்காணிப்பாளர் அறையின் உள்ளேயே அவர்கள் அமர்த்திவைக்கப்பட்டு இருந்தனர்.
என் மூத்த அண்ணன் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து-ராமன், என் மனைவி, என் மகள் மூவரும் அமர்ந்திருக்க, மகளின் மடியில் புத்தம் புது மலராக ஒரு குழந்தை. வியப்பி- லிருந்தும் மகிழ்விலிருந்தும் மீள முடியாமல் அந்தக் குழந்தையை நான் உற்றுப் பார்க்க, ‘‘நம்ம பேரன்தாங்க’’ என்று என் மனைவி சொன்னதும், மகிழ்ச்சி, அப்படியரு மகிழ்ச்சி!
அவர்கள் அருகில் அமர, அன்று சிறை என்னை அனுமதித்தது. கண்காணிப்பாளர் ஒப்புதலுடன் இப்படிச் சில சிறப்புச் சலுகைகளைச் சிறையில் வழங்குவார்கள். அன்று காலை என் அண்ணன், கண்காணிப்பாளருடன் தொலைபேசியில் பேசியதன் விளைவாக, அவர்கள் உள்ளே அனுமதிகப்பட்டுள்ளனர் என்று அறிந்துகொண்டேன்.
இரண்டு மாதங்கள்கூட நிரம்பாத அந்தப் பிஞ்சுக் குழந்தையை என் மடியில் வைத்துவிட்டு, என் தோளில் சாய்ந்து மகள் இந்து அழுத அழுகை இப்போதும் என் நினைவில் உள்ளது.
அண்ணன் அதட்டினார்... ‘‘அழக் கூடாது! பெரியப்பா என்ன சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தேன், மறந்துட்டியா?’’ என்றார்.
என் மனமும் இளகத் தொடங்-கியது. ஆனாலும், அது கண்ணீராய்க் கரைந்துவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
குழந்தையை என் முகத்தருகில் தூக்கி, அதன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தேன். ‘‘அப்பா, நாங்க அமெரிக்கா போறதுக்குள்ள வந்துடுவீங்களா?’’ என்று இந்து கேட்க, ‘‘ஜாமீன் கேட்டு போட்ட மனுவில் இன்னிக்-குத் தீர்ப் பாம். சாயங்காலம் தீர்ப்புச் சொல் லிட்டா, நாளைக்கே அப்பா வந்துடப் போறான். எதுக்கு அழுவுற?’’ என்று அண்ணன் ஆறுதல் சொன்னார்.
10, 15 நிமிடங்கள் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். சட்ட விதிப்படி, இரண்டு காவலர்கள் இரண்டு பக்கமும் நின்று, எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தனர். வழக்கு பற்றிய ரகசியங்களைப் பேசிக்கொள்கிறோமா, மறைமுக மாகக் கடிதங்கள், பொருள்-களைப் பரிமாறிக்கொள்கிறோமா என்றெல்லாம் கவனிக்க வேண்டியது அவர்கள் கடமை.
பார்வையாளர்கள் புறப்-பட வேண்டிய நேரம் வந்து-விட்டது என்பதைக் காவலர்-கள் உணர்த்-தினர். புறப்படுவதற்கு முன், அண்ணன் ஒரு பழைய செய்தியை நினைவு கூர்ந்தார். ‘‘உன் பேரனை மட்டுமில்லப்பா... நீ குழந்தையா இருந்தப்போ, உன்னையும் நான் சிறைக்-குத் தூக்கிட்டுப் போயிருக்-கேன்’’ என்று அவர் சொல்ல, மனைவியும், மகளும் விழித்தனர்.
எங்கள் அப்பா காரைக்குடி இராம.சுப்பையா, கல்லக்குடிப் போராட்டத்தில் ஈடுபட்டு, 1953&ம் வருடம், கைதாகி திருச்சி சிறையில் இருந்தார். கல்லக்குடிப் போராட்-டத்தில் முதல் அணிக்குக் கலை-ஞரும், இரண்டாவது அணிக்கு அப்பாவும், மூன்றாவது அணிக்குக் கவிஞர் கண்ணதாசனும் தலைமை ஏற்றிருந்தனர்.
அப்போது கலைஞரின் நெருக்க-மான தொண்டராக, அவர் கூடவே அப்பா சிறையில் இருந்தார். அந்த வேளையில், ஒரு வயதுக் குழந்தை-யான என்னைப் பார்க்க அவர் ஆசைப்பட, அம்மாவும், அண்ணன் முத்துராமனும் என்னைச் சிறைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அன்று, இந்த அளவுச் சலுகை-கூட வழங்கப்படாமல், கம்பி வலை-களின் வழியாக விரலைவிட்டு, என்னைத் தொட்டு அவர் முத்தம் கொடுத்துள்ளார்.
அந்தக் காட்சியைத்தான் அண்ணன் இப்போது நினைவுபடுத்-தினார். 50 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, அதே காட்சி மீண்டும் எங்கள் குடும்-பத்தில் அரங்கேறியது. இரண்டு காட்சி-களிலும் அண்ணனுக்கு இடம் இருந்தது.
பேரனின் பிஞ்சு விரல்களில் நான் மீண்டும் ஒரு முறை முத்தமிட, ‘பிரிவென்னும் ஒரு பாவி’ இடையில் வந்தான்.
மாலை வழக்குரைஞர்கள் வந்தனர். சற்று நேரம் மௌனமாக இருந்தனர். அவர்களின் மௌனம் எனக்குச் சத்தமாகச் செய்தி சொல்லியது.
‘‘என்ன, பிணை கிடைக்க வில்லையா?’’
‘‘ஜாமீன் குடுக்க முடியாதுன்னு நீதி-மன்றம் சொல்லிடுச்சு. மறுபடியும் ஜாமீன் கேட்டு மனுப் போடக் கொஞ்ச நாளாகும்!’’
\ (தொடரும்)
Friday, May 25, 2007
அது ஒரு பொடா காலம்! (6)
அது ஒரு பொடா காலம்! (6)
சுப.வீரபாண்டியன்
சிறையில் சில வேடிக்கையான விதிகள் உண்டு. காவலர் அனுமதியோடு கொசுவத்தி வைத்துக் கொள்ளலாம். ஆனால், தீப்பெட்டி வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களிடம் தீக்குச்சி வாங்கிக் கொசுவத்தி ஏற்றினாலும், அந்தச் சிறைக் கொசுக்கள் அதையெல்லாம் மதிப்பதே இல்லை. உள்ளே விளக்கும் கிடையாது. வராந்தாவில் கண்சிமிட்டும் சின்ன விளக்கின் வெளிச்சம் மட்டும்தான், நம் ஒரே நண்பன். அந்த வெளிச்சத்தில் புத்தகங்கள் படிப்பதும் மிகவும் கடினம். கம்பிகளின் நிழல்கள், புத்தகத்தின் மேல் கோடுகளாக விழும்.
அன்று கொஞ்சம் புழுக்கமாகவும் இருந்தது. வியர்வையைத் துடைத்தபடி இருந்தபோது, பக்கத்து அறையில் பரந்தாமன் பூட்டப்பட்டார். ஒரு காவலர் மூலம் கொசுவத்திச் சுருள் ஒன்றை அவருக்கு அனுப்பிவைத்தேன். ‘‘என்ன சுபவீ, எதுக்கு இது?’’ என்றார். ‘‘கொஞ்ச நேரத்தில் தெரியும்’’ என்றேன்.
ஆனால், அதையும் மீறிய கொசுக்கடியாலும், மிகக் கடுமையான புழுக்கத்தினாலும், அன்று அவரால் சரியாகத் தூங்க முடியவில்லை. மறுநாள் காலை, இருவரும் சந்தித்துப் பேசி னோம். வெளியே நிலைமைகள் எப்படி உள்ளன என்று நானும், உள் நிலவரம் பற்றி அவரும் ஒருவரையருவர் கேட்டு அறிந்து கொண்டோம். இரண்டுமே மகிழ்ச்சி தருவதாக இல்லை.
அவரை பொடாவில் கைது செய்ததற்கான காரணம், எந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெற முடியாத ஒன்றாக இருந்தது. 25.08.2002 அன்று, கட்சி அலுவலகத்தை மூடுவதாகச் சொல்லி, ‘தென் செய்தி’ இதழ் அலுவலகத்துக்குச் ‘சீல்’ வைத்தபோது, திருச்சி சௌந்தரராசன், பரந்தாமன் உள்ளிட்ட இயக்கத் தோழர்கள் சிலர் அங்கு இருந்துள்ளனர். அப்போது தொலைக்காட்சியினர் பரந்தாம னிடம் கருத்து கேட்டுள்ளனர். அதற்கு விடையாக அவர் சொன்ன நான்கு வரிகள் தொலைக்காட்சிகளிலும், மறுநாள் நாளேடுகளிலும் வெளிவந் துள்ளன.
‘ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசியதைத் தமிழக அரசு தவறு என்று கருதினால், அதைத் தொடர்ந்து செய்யத் தயங்க மாட்டோம். தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது’ என்பதுதான் அவருடைய கூற்று. இந்தப் ‘படு பயங்கரவாதச் சொல்லாட’லுக்காகவே அவரை அன்றைய அரசு பொடாவில் கைது செய்தது.
மீண்டும் 24.09.2002 அன்று, நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டேன். கடலூர் சிறையிலிருந்து நெடு மாறன் ஐயாவையும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனையும் அழைத்து வந்திருந்தனர்.
சிறையிலிருந்து புறப்படும்போதே மோகன் சொன்னார்... ‘‘ஐயா, இன்னிக்கு நீங்க உங்க கேஸ்காரங்க எல்லாரையும் பார்க்க வாய்ப்பிருக்கு’’ என்று. ‘‘அது என்ன ‘கேஸ்காரங்க’?’’ என்று கேட்டேன். ‘ஊர்க்காரங்க, உறவுக்காரங்க’ என்பது போல், ஒரு குறிப்பிட்ட வழக்கில் குற்றம்சாட்டப் பெற்றுள்ள அனைவரும் ‘கேஸ்காரங்க’ ஆகிவிடுவார்கள் என்று விளக்கினார். அந்தச் சிறை மொழியின்படி ‘கேஸ் காரங்க’ மூவரும் ஒருவரையருவர் அன்று சந்தித்துக்கொண்டோம். பரந்தாமன் வேறு ‘கேஸ்காரர்’ என்பதால், அன்று நீதிமன்றம் அழைத்து வரப்படவில்லை.
எங்கள் மூவரையும்கூட ஒரே சிறையில் வைத்திருந்தால், ஒன்றாகவே அழைத்துச் சென்றுவிடலாம். அரசுக் குச் செலவும் மிச்சம். ஆனால்,மூலைக் கொருவராக ஆளுக்கொரு சிறையில் அடைத்து வைக்கப்பட்டோம். ‘‘ஐயா எப்படியிருக்கீங்க?’’ என்று நெடுமாறன் ஐயாவிடம் நான் கேட்க, ‘‘நல்லா யிருக்கேன். நல்ல ஓய்வு. ‘இந்திய தேசியம்: உருவாகாத கரு’ங்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதுறதுக்குக் குறிப்புகள் எடுத்துட்டு இருக்கேன். அது தொடர்பா உங்ககிட்டே ஏதாவது புத்தகங்கள் இருந்தாலும், கொடுத்தனுப்புங்க’’ என்றார்.
‘‘அந்த அம்மா அவ்வளவு சிரமப் பட்டு நம்மளையெல்லாம் உள்ளே போட்டிருக்குது. நீங்க ரெண்டு பேரும், ‘நல்ல ஓய்வு, புத்தகம் எழுத லாம்’னா பேசிக்கிறீங்க?’’ என்று கிண்டலடித்தார் பாவாணன்.
நானும் பாவாணனும் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். என்னைவிட ஓர் ஆண்டு இளையவர். குழிபிறை சிங்காரமாக இருந்து, தனித் தமிழியக்கப் பற்றின் காரணமாகத் தன் பெயரை புதுக்கோட்டை பாவாணனாக மாற்றிக்கொண்டவர். படிக்கும் காலத்தில் நான் அவரிடம் பார்த்த மாணவத் தீ இன்னும் அணையாமலே உள்ளது.
வைகோ உட்பட எல்லோருக்கும் முன்பாக, ஜூலை மாதம் 4&ம் தேதியே கைது செய்யப்பட்டவர் அவர்தான். முதலில் சாதாரணச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு, பிறகு பொடா வழக்குக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இன் னொரு சிறப்பையும் அரசு வழங் கியது. கவுந்தப்பாடி கூட்டத்தில் பேசியதற்கு ஒரு வழக்கு, சென்னைக் கூட்டத்தில் எங்களோடு பேசியதற்கு ஒரு வழக்கு என அவர் மீது இரண்டு பொடா வழக்குகள்! இரண்டு தங்கப் பதக்கங்கள் வாங்கிய மாதிரி அவர் முகத்தில் ஒரு பெருமை தென் படும்.
சிறைக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்ட நிலையிலும், இரவு நேரப் புழுக்கத்தைத் தாள முடியா மல் தவித்தார் பரந்தாமன். ‘‘பொடா கைதிகள் மின் விசிறி வெச்சுக் கிறதுக்குச் சட்டத்தில் இடம் இருக் காமே?’’ என்றார். ‘‘கேக்கிறதுக்குக் குளுமையாத்தான் இருக்கு’’ என் றேன். ‘‘நான் விளையாட்டுக்குச் சொல்லலை. நாளைக்கு வக்கீல் கிட்ட கேப்போம்’’ என்றார்.
அப்படியே சட்டத்தில் இடம் இருந் தாலும், நடைமுறைச் சிக்கல்களை எல்லாம் தாண்டி வருவதற்குச் சில மாதங்கள் ஆகிவிடும். அதற்குள் குளிர் காலமே வந்துவிடும். மின் விசிறி எதற்கு என்று தோன்றியது. அடுத்த கோடைக் காலத்துக்கும் இங்குதான் இருக்கப் போகிறோம் என்பதை அப்போது நான் உணரவில்லை.
ஆனாலும், சிறைக்கு வந்த மறுநாளே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, பரந்தாமன் மேல் தளத்துக்குச் சென்று விட்டார். அங்கே கொஞ்சம் காற்று வரும் என்பது அவருடைய நம்பிக்கை. மீண்டும் கீழ்த்தளத்தில் நான் மட்டுமே.
ஒரு நாள் இரவு அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த வேளையில், யாரோ காலின் பெருவிரலைச் சுரண்டுவது போலிருந்தது. சட்டென்று காலை உதறிவிட்டு, மீண்டும் உறங்கினேன். சற்று நேரத்தில் மறுபடியும் சுரண்டல். தூக்கம் கலைந்து எழுந்தேன். மங்கிய வெளிச்சத்தில் உற்றுப்பார்த்தபோது, ஒரு மூலையில் கறுப்பாக ஓர் உருவம் தெரிந்தது. உர்ரென்று உறுமியது. அடடா, பெருச்சாளி! என்ன செய்வ தென்று புரியவில்லை.
பகலில் சில வேளைகளில் எலிகள், பெருச்சாளிகள் ஓடுவதைப் பார்த்திருக் கிறேன். இரவில் இப்படி அறைக்குள் வந்து காலைச் சுரண்டும் என்று எதிர் பார்க்கவே இல்லை. மணி என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. அருகில் ஓடுகிற மின் தொடர் வண்டி ஒலியை வைத்து ஓரளவு முடிவு செய்வோம். இப்போது எந்த ஒலியும் இலை. ஆகவே, இரவு 12 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடையில் இருக்கிறோம் என்று பொருள்.
பக்கத்திலிருந்த செய்தித் தாளையும், புத்தகங்களையும் வைத்து அந்தப் பெருச்சாளியை விரட்டப் பார்த்தேன். எதற்கும் அசைந்து கொடுக்காத முரட்டுப் பெருச்சாளியாக இருந்தது அது.
வேறு வழியின்றிக் கம்பியின் வழியாகக் காவலரை அழைக்க முயற்சி செய்தேன். ‘‘வார்டர்’’, ‘‘வார்டர்’’ என்று ஓங்கிக் குரல் கொடுத்ததும், மேலேயிருந்து செல்வராஜ், ‘‘என்ன ஐயா?’’ என்று கேட்டார். சொன்னேன். ‘‘அது ஒண்ணும் பண்ணாது, சும்மா தூங்குங்க’’ என்றார். ‘‘எனக்கு ஆறுதல் வேண்டாம்; காவலர்தான் வேண்டும்’’ என்று சொன்னதும், அவரும் குரல் கொடுத்தார். அதன் பிறகு ஒரு காவலர் உள்ளே வந்து, தன் கையிலிருந்த தடியைக் கொடுத்தார். தடியால் பெருச் சாளி மீது ஓர் அடி போட, ஓட்டம் எடுத்தது. ‘அப்பாடா’ என்று ஒரு பெரு மூச்சு வந்தது. ஆனாலும், மறுபடியும் பெருச்சாளி வந்தால் என்ன செய்வது என்று புரியவில்லை. ‘‘சார், இந்தத் தடியை காலையில வந்து வாங்கிக்குங்களேன்’’ என்றேன். ‘‘ஒங்ககிட்ட தடி இருந்தா பெருச்சாளி போயிடும். ஆனா, என் வேலையும் போயிடுமே’’ என்றவர், ‘‘மறுபடி வந்தா கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டுத் தடியை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.
எவ்வளவோ முயற்சி செய்தும், அதன் பின், அன்று இரவு முழுக்க வரவே இல்லை & தூக்கம்!
மறுநாள் காலை, அதிகாரிகளிடம் நடந்ததைச் சொல்ல, அவர்கள் ஒரு கைதியை அழைத்து, கீழ்ப் பகுதிக்கு வலை அடித்துக் கொடுக்கச் சொன்னார்கள். அந்தப் பையன் என்னைப் பார்த்து, ‘‘எங்க பிளாக்குக்கு இந்தப் பெருச்சாளி வர மாட்டேங்குதே சார்! வந்துச்சுன்னா மறு நாள் மட்டன் சாப்பாடுதான்’’ என்றான். எலிக் கறிக்கு அங்கே ஏகப்பட்ட போட்டி!
இயல்பான உரிமைகள்கூட எங்களுக்கு மறுக்கப்பட்டன. இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும், அவருடைய துணைவியாரும் கடலூர் சிறைக்கு வந்தபோது, நெடுமாறன் ஐயா வைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தித்தாள்களில் ஒரு செய்தி வெளியாகி யிருந்தது. சென்னைச் சிறையிலும், சிறை அதிகாரி அறையில் அமர்ந்து என்னையும் பரந்தாமனையும் சந்திக்க, விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் திருமா வளவன் அனுமதி கோரி, அது மறுக் கப்பட்டதால் திரும்பிச் சென்றுவிட் டார் என்று சில காவலர்கள் கூறினர்.
எல்லாவற்றுக்கும், ‘மற்ற சட்டங்கள் வேறு, பொடா வேறு’ என்பது மட்டும்தான் எங்களுக்கு விடையாகச் சொல்லப்பட்டது.
வலைத் தடுப்புகளின் வழியே பார்வையாளர்களைச் சந்திப்பது என்பது, சில நேரங்களில் முற்றிலும் பயனற்றதாகப் போய்விடும். கூடுதல் கண்காணிப்பாளரின் அறையில் நாங்கள் நிறுத்தப்படுவோம். வலைக் கம்பிகளைத் தாண்டிக் கொஞ்சம் இடைவெளி. அதன் பிறகு அங்கே வலைக் கம்பித் தடுப்பு இருக்கும். அதற்கு அப்பால் பார்வையாளர்கள் நிற்பார்கள். இந்தப் பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பத்து பேர் நின்றால், அந்தப் பக்கம் நாற்பது பார்வையாளர்கள் நிற்பார்கள். எல்லோரும் சத்தம் போட்டுப் பேசு வார்கள். யார் யாரோடு பேசுகிறார்கள் என்பதே சில நேரங்களில் புரியாது. இரைச்சலுக்கு இடையே, சில சொற் கள் செவிகளை எட்டும்.
இவற்றுக்கெல்லாம் என்ன மாற்று எனச் சிந்தித்துக்கொண்டு இருந்த வேளையில், மாலை எங்களைச் சந்திக்க வந்த எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரும் புருசோத்தமனும், பொடா சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று அறிவுரை கூறினர். கடலூர் சென்று நெடுமாறன் ஐயாவிடம் கருத்துப் பெற்று வந்துள்ளதாகக் கூறினார்கள். அதன் அடிப்படையில், ‘பொடா சட்டத்தின் பிரிவுகள் 1(4), 3&9, 14, 18&24, 26, 27, 29, 33, 36&53 ஆகியன, இந்திய அரசியல் சாசனச் சட்டத் துக்கு முரணானவை. எனவே, அவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என என் பெயரில், நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
வழக்குரைஞர்கள் இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் கொண்டு வந்தனர். வேறு சிலரும்கூட பொடா வில் கைது செய்யப்படலாம் என்பதே அது!
அவர்கள் கூற்று, சில நாட்களில் உண்மையாகிவிட்டது. எங்கள் கூட்டத்தில் வரவேற்பு ஆற்றிய மருத்துவர் தாயப்பன், 03.10.2002 அன்று பொடாவில் கைது செய்யப்பட்டார்.
\ (தொடரும்)
சுப.வீரபாண்டியன்
சிறையில் சில வேடிக்கையான விதிகள் உண்டு. காவலர் அனுமதியோடு கொசுவத்தி வைத்துக் கொள்ளலாம். ஆனால், தீப்பெட்டி வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களிடம் தீக்குச்சி வாங்கிக் கொசுவத்தி ஏற்றினாலும், அந்தச் சிறைக் கொசுக்கள் அதையெல்லாம் மதிப்பதே இல்லை. உள்ளே விளக்கும் கிடையாது. வராந்தாவில் கண்சிமிட்டும் சின்ன விளக்கின் வெளிச்சம் மட்டும்தான், நம் ஒரே நண்பன். அந்த வெளிச்சத்தில் புத்தகங்கள் படிப்பதும் மிகவும் கடினம். கம்பிகளின் நிழல்கள், புத்தகத்தின் மேல் கோடுகளாக விழும்.
அன்று கொஞ்சம் புழுக்கமாகவும் இருந்தது. வியர்வையைத் துடைத்தபடி இருந்தபோது, பக்கத்து அறையில் பரந்தாமன் பூட்டப்பட்டார். ஒரு காவலர் மூலம் கொசுவத்திச் சுருள் ஒன்றை அவருக்கு அனுப்பிவைத்தேன். ‘‘என்ன சுபவீ, எதுக்கு இது?’’ என்றார். ‘‘கொஞ்ச நேரத்தில் தெரியும்’’ என்றேன்.
ஆனால், அதையும் மீறிய கொசுக்கடியாலும், மிகக் கடுமையான புழுக்கத்தினாலும், அன்று அவரால் சரியாகத் தூங்க முடியவில்லை. மறுநாள் காலை, இருவரும் சந்தித்துப் பேசி னோம். வெளியே நிலைமைகள் எப்படி உள்ளன என்று நானும், உள் நிலவரம் பற்றி அவரும் ஒருவரையருவர் கேட்டு அறிந்து கொண்டோம். இரண்டுமே மகிழ்ச்சி தருவதாக இல்லை.
அவரை பொடாவில் கைது செய்ததற்கான காரணம், எந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெற முடியாத ஒன்றாக இருந்தது. 25.08.2002 அன்று, கட்சி அலுவலகத்தை மூடுவதாகச் சொல்லி, ‘தென் செய்தி’ இதழ் அலுவலகத்துக்குச் ‘சீல்’ வைத்தபோது, திருச்சி சௌந்தரராசன், பரந்தாமன் உள்ளிட்ட இயக்கத் தோழர்கள் சிலர் அங்கு இருந்துள்ளனர். அப்போது தொலைக்காட்சியினர் பரந்தாம னிடம் கருத்து கேட்டுள்ளனர். அதற்கு விடையாக அவர் சொன்ன நான்கு வரிகள் தொலைக்காட்சிகளிலும், மறுநாள் நாளேடுகளிலும் வெளிவந் துள்ளன.
‘ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசியதைத் தமிழக அரசு தவறு என்று கருதினால், அதைத் தொடர்ந்து செய்யத் தயங்க மாட்டோம். தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது’ என்பதுதான் அவருடைய கூற்று. இந்தப் ‘படு பயங்கரவாதச் சொல்லாட’லுக்காகவே அவரை அன்றைய அரசு பொடாவில் கைது செய்தது.
மீண்டும் 24.09.2002 அன்று, நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டேன். கடலூர் சிறையிலிருந்து நெடு மாறன் ஐயாவையும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனையும் அழைத்து வந்திருந்தனர்.
சிறையிலிருந்து புறப்படும்போதே மோகன் சொன்னார்... ‘‘ஐயா, இன்னிக்கு நீங்க உங்க கேஸ்காரங்க எல்லாரையும் பார்க்க வாய்ப்பிருக்கு’’ என்று. ‘‘அது என்ன ‘கேஸ்காரங்க’?’’ என்று கேட்டேன். ‘ஊர்க்காரங்க, உறவுக்காரங்க’ என்பது போல், ஒரு குறிப்பிட்ட வழக்கில் குற்றம்சாட்டப் பெற்றுள்ள அனைவரும் ‘கேஸ்காரங்க’ ஆகிவிடுவார்கள் என்று விளக்கினார். அந்தச் சிறை மொழியின்படி ‘கேஸ் காரங்க’ மூவரும் ஒருவரையருவர் அன்று சந்தித்துக்கொண்டோம். பரந்தாமன் வேறு ‘கேஸ்காரர்’ என்பதால், அன்று நீதிமன்றம் அழைத்து வரப்படவில்லை.
எங்கள் மூவரையும்கூட ஒரே சிறையில் வைத்திருந்தால், ஒன்றாகவே அழைத்துச் சென்றுவிடலாம். அரசுக் குச் செலவும் மிச்சம். ஆனால்,மூலைக் கொருவராக ஆளுக்கொரு சிறையில் அடைத்து வைக்கப்பட்டோம். ‘‘ஐயா எப்படியிருக்கீங்க?’’ என்று நெடுமாறன் ஐயாவிடம் நான் கேட்க, ‘‘நல்லா யிருக்கேன். நல்ல ஓய்வு. ‘இந்திய தேசியம்: உருவாகாத கரு’ங்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதுறதுக்குக் குறிப்புகள் எடுத்துட்டு இருக்கேன். அது தொடர்பா உங்ககிட்டே ஏதாவது புத்தகங்கள் இருந்தாலும், கொடுத்தனுப்புங்க’’ என்றார்.
‘‘அந்த அம்மா அவ்வளவு சிரமப் பட்டு நம்மளையெல்லாம் உள்ளே போட்டிருக்குது. நீங்க ரெண்டு பேரும், ‘நல்ல ஓய்வு, புத்தகம் எழுத லாம்’னா பேசிக்கிறீங்க?’’ என்று கிண்டலடித்தார் பாவாணன்.
நானும் பாவாணனும் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். என்னைவிட ஓர் ஆண்டு இளையவர். குழிபிறை சிங்காரமாக இருந்து, தனித் தமிழியக்கப் பற்றின் காரணமாகத் தன் பெயரை புதுக்கோட்டை பாவாணனாக மாற்றிக்கொண்டவர். படிக்கும் காலத்தில் நான் அவரிடம் பார்த்த மாணவத் தீ இன்னும் அணையாமலே உள்ளது.
வைகோ உட்பட எல்லோருக்கும் முன்பாக, ஜூலை மாதம் 4&ம் தேதியே கைது செய்யப்பட்டவர் அவர்தான். முதலில் சாதாரணச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு, பிறகு பொடா வழக்குக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இன் னொரு சிறப்பையும் அரசு வழங் கியது. கவுந்தப்பாடி கூட்டத்தில் பேசியதற்கு ஒரு வழக்கு, சென்னைக் கூட்டத்தில் எங்களோடு பேசியதற்கு ஒரு வழக்கு என அவர் மீது இரண்டு பொடா வழக்குகள்! இரண்டு தங்கப் பதக்கங்கள் வாங்கிய மாதிரி அவர் முகத்தில் ஒரு பெருமை தென் படும்.
சிறைக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்ட நிலையிலும், இரவு நேரப் புழுக்கத்தைத் தாள முடியா மல் தவித்தார் பரந்தாமன். ‘‘பொடா கைதிகள் மின் விசிறி வெச்சுக் கிறதுக்குச் சட்டத்தில் இடம் இருக் காமே?’’ என்றார். ‘‘கேக்கிறதுக்குக் குளுமையாத்தான் இருக்கு’’ என் றேன். ‘‘நான் விளையாட்டுக்குச் சொல்லலை. நாளைக்கு வக்கீல் கிட்ட கேப்போம்’’ என்றார்.
அப்படியே சட்டத்தில் இடம் இருந் தாலும், நடைமுறைச் சிக்கல்களை எல்லாம் தாண்டி வருவதற்குச் சில மாதங்கள் ஆகிவிடும். அதற்குள் குளிர் காலமே வந்துவிடும். மின் விசிறி எதற்கு என்று தோன்றியது. அடுத்த கோடைக் காலத்துக்கும் இங்குதான் இருக்கப் போகிறோம் என்பதை அப்போது நான் உணரவில்லை.
ஆனாலும், சிறைக்கு வந்த மறுநாளே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, பரந்தாமன் மேல் தளத்துக்குச் சென்று விட்டார். அங்கே கொஞ்சம் காற்று வரும் என்பது அவருடைய நம்பிக்கை. மீண்டும் கீழ்த்தளத்தில் நான் மட்டுமே.
ஒரு நாள் இரவு அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த வேளையில், யாரோ காலின் பெருவிரலைச் சுரண்டுவது போலிருந்தது. சட்டென்று காலை உதறிவிட்டு, மீண்டும் உறங்கினேன். சற்று நேரத்தில் மறுபடியும் சுரண்டல். தூக்கம் கலைந்து எழுந்தேன். மங்கிய வெளிச்சத்தில் உற்றுப்பார்த்தபோது, ஒரு மூலையில் கறுப்பாக ஓர் உருவம் தெரிந்தது. உர்ரென்று உறுமியது. அடடா, பெருச்சாளி! என்ன செய்வ தென்று புரியவில்லை.
பகலில் சில வேளைகளில் எலிகள், பெருச்சாளிகள் ஓடுவதைப் பார்த்திருக் கிறேன். இரவில் இப்படி அறைக்குள் வந்து காலைச் சுரண்டும் என்று எதிர் பார்க்கவே இல்லை. மணி என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. அருகில் ஓடுகிற மின் தொடர் வண்டி ஒலியை வைத்து ஓரளவு முடிவு செய்வோம். இப்போது எந்த ஒலியும் இலை. ஆகவே, இரவு 12 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடையில் இருக்கிறோம் என்று பொருள்.
பக்கத்திலிருந்த செய்தித் தாளையும், புத்தகங்களையும் வைத்து அந்தப் பெருச்சாளியை விரட்டப் பார்த்தேன். எதற்கும் அசைந்து கொடுக்காத முரட்டுப் பெருச்சாளியாக இருந்தது அது.
வேறு வழியின்றிக் கம்பியின் வழியாகக் காவலரை அழைக்க முயற்சி செய்தேன். ‘‘வார்டர்’’, ‘‘வார்டர்’’ என்று ஓங்கிக் குரல் கொடுத்ததும், மேலேயிருந்து செல்வராஜ், ‘‘என்ன ஐயா?’’ என்று கேட்டார். சொன்னேன். ‘‘அது ஒண்ணும் பண்ணாது, சும்மா தூங்குங்க’’ என்றார். ‘‘எனக்கு ஆறுதல் வேண்டாம்; காவலர்தான் வேண்டும்’’ என்று சொன்னதும், அவரும் குரல் கொடுத்தார். அதன் பிறகு ஒரு காவலர் உள்ளே வந்து, தன் கையிலிருந்த தடியைக் கொடுத்தார். தடியால் பெருச் சாளி மீது ஓர் அடி போட, ஓட்டம் எடுத்தது. ‘அப்பாடா’ என்று ஒரு பெரு மூச்சு வந்தது. ஆனாலும், மறுபடியும் பெருச்சாளி வந்தால் என்ன செய்வது என்று புரியவில்லை. ‘‘சார், இந்தத் தடியை காலையில வந்து வாங்கிக்குங்களேன்’’ என்றேன். ‘‘ஒங்ககிட்ட தடி இருந்தா பெருச்சாளி போயிடும். ஆனா, என் வேலையும் போயிடுமே’’ என்றவர், ‘‘மறுபடி வந்தா கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டுத் தடியை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.
எவ்வளவோ முயற்சி செய்தும், அதன் பின், அன்று இரவு முழுக்க வரவே இல்லை & தூக்கம்!
மறுநாள் காலை, அதிகாரிகளிடம் நடந்ததைச் சொல்ல, அவர்கள் ஒரு கைதியை அழைத்து, கீழ்ப் பகுதிக்கு வலை அடித்துக் கொடுக்கச் சொன்னார்கள். அந்தப் பையன் என்னைப் பார்த்து, ‘‘எங்க பிளாக்குக்கு இந்தப் பெருச்சாளி வர மாட்டேங்குதே சார்! வந்துச்சுன்னா மறு நாள் மட்டன் சாப்பாடுதான்’’ என்றான். எலிக் கறிக்கு அங்கே ஏகப்பட்ட போட்டி!
இயல்பான உரிமைகள்கூட எங்களுக்கு மறுக்கப்பட்டன. இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும், அவருடைய துணைவியாரும் கடலூர் சிறைக்கு வந்தபோது, நெடுமாறன் ஐயா வைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தித்தாள்களில் ஒரு செய்தி வெளியாகி யிருந்தது. சென்னைச் சிறையிலும், சிறை அதிகாரி அறையில் அமர்ந்து என்னையும் பரந்தாமனையும் சந்திக்க, விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் திருமா வளவன் அனுமதி கோரி, அது மறுக் கப்பட்டதால் திரும்பிச் சென்றுவிட் டார் என்று சில காவலர்கள் கூறினர்.
எல்லாவற்றுக்கும், ‘மற்ற சட்டங்கள் வேறு, பொடா வேறு’ என்பது மட்டும்தான் எங்களுக்கு விடையாகச் சொல்லப்பட்டது.
வலைத் தடுப்புகளின் வழியே பார்வையாளர்களைச் சந்திப்பது என்பது, சில நேரங்களில் முற்றிலும் பயனற்றதாகப் போய்விடும். கூடுதல் கண்காணிப்பாளரின் அறையில் நாங்கள் நிறுத்தப்படுவோம். வலைக் கம்பிகளைத் தாண்டிக் கொஞ்சம் இடைவெளி. அதன் பிறகு அங்கே வலைக் கம்பித் தடுப்பு இருக்கும். அதற்கு அப்பால் பார்வையாளர்கள் நிற்பார்கள். இந்தப் பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பத்து பேர் நின்றால், அந்தப் பக்கம் நாற்பது பார்வையாளர்கள் நிற்பார்கள். எல்லோரும் சத்தம் போட்டுப் பேசு வார்கள். யார் யாரோடு பேசுகிறார்கள் என்பதே சில நேரங்களில் புரியாது. இரைச்சலுக்கு இடையே, சில சொற் கள் செவிகளை எட்டும்.
இவற்றுக்கெல்லாம் என்ன மாற்று எனச் சிந்தித்துக்கொண்டு இருந்த வேளையில், மாலை எங்களைச் சந்திக்க வந்த எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரும் புருசோத்தமனும், பொடா சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று அறிவுரை கூறினர். கடலூர் சென்று நெடுமாறன் ஐயாவிடம் கருத்துப் பெற்று வந்துள்ளதாகக் கூறினார்கள். அதன் அடிப்படையில், ‘பொடா சட்டத்தின் பிரிவுகள் 1(4), 3&9, 14, 18&24, 26, 27, 29, 33, 36&53 ஆகியன, இந்திய அரசியல் சாசனச் சட்டத் துக்கு முரணானவை. எனவே, அவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என என் பெயரில், நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
வழக்குரைஞர்கள் இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் கொண்டு வந்தனர். வேறு சிலரும்கூட பொடா வில் கைது செய்யப்படலாம் என்பதே அது!
அவர்கள் கூற்று, சில நாட்களில் உண்மையாகிவிட்டது. எங்கள் கூட்டத்தில் வரவேற்பு ஆற்றிய மருத்துவர் தாயப்பன், 03.10.2002 அன்று பொடாவில் கைது செய்யப்பட்டார்.
\ (தொடரும்)
Subscribe to:
Posts (Atom)
